
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் திஸ்ஸநாயகம் மொத்தமாக 425 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น