அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை ரவீந்திரன் (32) என்பவர் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், அந்த லொட்ஜுக்கு முன்னால் அமைந்துள்ள கடையொன்றுக்குச் சென்ற அவரை இனந்தெரியாத சிலர் கடந்த 23 ஆம் திகதி மாலை 5 மணியளவில் கடத்திச் சென்றுள்ளதாகவும் அவரது தாயார் தம்பிப்பிள்ளை ஆச்சியம்மா யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.2006 இல் அகதியாகத் தஞ்சம் கோரி மலேசியா சென்றிருந்த ரவீந்திரன் அண்மையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதால் கொழும்பு லொட்ஜில் தங்கியிருந்ததாக தனது முறைப்பாட்டில் ஆச்சியம்மா மேலும் கூறியுள்ளார்

ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น