วันอังคารที่ 22 กันยายน พ.ศ. 2552

குருநாகலில் 4மாத காலத்தில் 250தற்கொலைச் சம்பவங்கள்குருநாகல்


குருநாகல் மாவட்டத்தில் கடந்த நான்குமாத காலப்பகுதியில் மாத்திரம் 250தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவர்கள் அனைவரும் நஞ்சு விதைகளை உட்கொண்டு மரணமாகியுள்ளதாக குருநாகல் மாவட்ட மரண விசாரணை அதிகாரி பீ.கே.அமரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அநேகமானவர்கள் 15முதல் 25வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்களில் அதிகமானோர் காதல் மற்றும் தொழில் வாய்ப்பில் ஏற்பட்ட தோல்விகளினாலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெறும் தற்கொலைச் சம்பவங்களைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு சமூக மட்டத்தில் உள ஆற்றல்கள் மற்றும் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น