วันจันทร์ที่ 21 กันยายน พ.ศ. 2552

தெகிவளைப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் யுத்த உபகரணங்கள் புலனாய்வுப் பிரிவினரால் மீட்பு


கொழும்பு தெகிவளைப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் யுத்த உபகரணங்களை புலனாய்வுப் பிரிவினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டு தெகிவளைப் பொலீசாரினால் விசாரிக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய தெகிவளை மல்பிரட் கிறசென்ட் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவற்றை புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர். ரிமோட் கொன்றோலர் 01, ரிசீவர் 01, டைமர் 06, சக்தி வாய்ந்த பூஸ்டர்கள் 04, கன்வாஸ் பெல்ஸ் 01, சக்தி வாய்ந்த டெட்னேற்றர்கள் ஒருதொகை என்பனவே இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น