วันอังคารที่ 29 กันยายน พ.ศ. 2552

ஒபாமா கொல்லப்படவேண்டியவரா"? - 'பேஸ் புக்' கில் கருத்துக் கணிப்பு

இன்று பலரையும் கவர்ந்துவரும் 'பேஸ் புக்' எனும் சமூக இணையத்தளத்தினூடாக அமெரிக்க இரகசிய சேவை புதுமையான கருத்துக்கணிப்பு ஒன்றைப் பதிவேற்றம் செய்திருக்கின்றது.

"அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொல்லப்படவேண்டியவரா?" - இந்தத் தலைப்பிலான கருத்துக் கணிப்பே அது. "ஆம்"', "இல்லை", "இருக்கலாம்" என்றவாறு தத்தமது கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பு(The Poll) கடந்த சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த கருத்துக் கணிப்பினூடாக அமெரிக்க இரகசிய சேவை விசாரணைகளை நடத்தி வருகிறது.

இது தொடர்பில் இரகசிய சேவைப் பேச்சாளர் டர்ரின் பிளக்போட் (Darrin Blackford,) கருத்து தெரிவிக்கையில்,

"இந்த கருத்து கணிப்பு தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள 'பேஸ் புக்' சமூக இணையத்தள குழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அமெரிக்க இரகசிய சேவை விசாரணைகளுக்குத் தாம் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர்களுக்கு தேவைப்படும் தகவல்களை நிறுவனம் வழங்கும் எனவும் 'பேஸ் புக்' இணையத்தள பேச்சாளர் பெர்ரி ஸ்கினிட் (Barry Schnitt) தெரிவித்துள்ளதாக பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น