วันพุธที่ 23 กันยายน พ.ศ. 2552

சர்வதேச ஒத்துழைப்பிற்கான புதிய அத்தியாயத்தை துவக்கத் தயார்" - ஐ.நாவில் ஒபாமாகன்னி உரை


சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பில் புதிய அத்தியாயத்தை துவக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தான் ஆற்றிய முதல் உரையில் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க எதிர்ப்பு வாதத்தை முன்வைத்து
சில நாடுகள் நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து தப்பித்து வந்தன என்றும், அனைத்து உலகப் பிரச்சனையையும் அமெரிக்காவே தீர்க்கும் என்று அந்த நாடுகள் காத்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அணு ஆயுதப் பரவல் ஆபத்து அதிகரிப்பதாக கூறிய ஒபாமா, இரான் மற்றும் வட கொரியா அணு ஆயுதங்களை தயாரிக்க முனைந்தால் அதற்கான எதிர்வினையை அவர்கள் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

பயங்கரவாதம், இனப்படுகொலை, பருவநிலை மாற்றம் மற்றும் வறுமை போன்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க உலகத் தலைவர்கள் தவறுவதாக தன் உரையின் போது அதிபர் குறிப்பிட்டார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น