วันอังคารที่ 1 กันยายน พ.ศ. 2552

இந்தியாவை குறிவைத்து ஏவுகணை?


அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய, "ஹார்பூன்' ஏவுகணையின் வடிவமைப்பை சட்ட விரோதமாக மாற்றி அமைக்கவில்லை' என, பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இதை, இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக வந்த தகவலையும் மறுத்திருக்கிறது. அமெரிக்காவில் தயாரான, "ஹார்பூன்' வகை ஏவுகணைகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள், கப்பல்களை தாக்குவதற்காக கடற்படை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டவை.
ஆனால், பாகிஸ்தான், இந்த ஏவுகணையின் வடிவமைப்பை தரையிலிருந்து, தரையில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் தொழில்நுட்ப மாற்றம் செய்துள்ளதாகவும், இவை இந்தியாவில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் குறிபார்த்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தாவும் இந்த விஷயத்தில் தனது கவலையை தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி கூறுகையில், "அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தவறான உளவுத் தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்து உள்நாட்டில் போரிட்டு வரும் சூழ்நிலையில், இதுபோன்ற தவறான தகவல் வெளியிடப்படுவது, அமெரிக்காவுடனான உறவை பாதிக்கும்' என்றார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น