
பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தக விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விநியோக நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 1054 புத்தக விநியோக மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. 9662 அரசாங்கப் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இவ்வாறு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. அதேவேளை, அரச பாடத்திட்டங்களை அமுல்நடத்தும் தனியார் பாடசாலைகளுக்கும் இந்தப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น