
மன்னார் சாந்திபுரம் கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி மன்னார் சுகவாழ்வு மன்றத்தில் முறையிட்டுள்ளார்.மாகாலிங்கம் ஜானார்த்தனன் (வயது 33) என்பவர் கடந்த 23ஆம் திகதி மன்னாரில் இருந்து பேசாலைக்கு மேசன் வேலைக்காகச் சென்றுள்ளார். பின் அன்று மாலை 4.30 மணிக்கு பேசாலையில் இருந்து தனது மனைவியுடன் தொலைபெசியில் பேசிய போது தான் மன்னாருக்கு வருவதாகக் கூறியுள்ளார். எனினும் இவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரின் உறவினர், நண்பர் வீடுகளிலும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் இவர் எங்கும் வரவில்லை என்ற தகவலையடுத்து, இவரது மனைவி நேற்று மன்னார் சுகவாழ்வு மன்றத்தில் முறைபாடு செய்துள்ளார்
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น