
தென் மாகாண சபை முதலமைச்சராக ஷான் விஜயலால் டீ சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே தென் மாகாண சபை முதலமைச்சராகக் கடமையாற்றிய ஷான் விஜயலால் டீ சில்வா இம்முறை தேர்தலில் காலி மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அவருக்கு தொண்ணூறாயிரத்து இருநூற்று தொண்ணூற்று நான்கு வாக்குகள் கிடைத்திருந்தன.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น