วันพฤหัสบดีที่ 29 ตุลาคม พ.ศ. 2552

ஜனாதிபதிக்கு நேபாளத்தில் அமோக வரவேற்பு.

ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட இலங்கை குழுவினர் நேபாளத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலை நேபாள தலைநகர் காத்மண்டுவைச் சென்றடைந்த ஜனாதிபதி தலைமையிலான இலங்கைத்தூதுக்குழுவினரக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இவ்விஜயத்தின் போது நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை ஜனாதிபதி தலைமையிலான இலங்கைத்தூதுக்குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น