
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய எடிசன் குணதிலக்க இன்று முதல் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க பதவி உயர்வு பெற்று செல்வதை முன்னிட்டு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை அணி வகுப்பு மரியாதையுடன் இது தொடர்பான வைபவமொன்றும் நடைபெற்றது.
பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக முன்றலில் அமைந்துள்ள வீரமரணமடைந்த பொலிஸாரின் நினைவுத் தூபிக்கும் இவர் அஞ்சலி செலுத்தினார்.
பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.கே. மார்க்கஸ் உட்பட பொலிஸ் அத்தியட்சகர்கள் ,உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น