
வாழைச்சேனை நாசிவன்தீவு கடற்கரைக்கு விளையாடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த சிறுவர்களில் ஒருவரது சடலமே இதுவரை கரையொதுங்கியுள்ளது.
மற்யை சிறுவன் தொடர்பாக இதுவரை தகவல்கள் இல்லை என வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனை முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 11 வயதான சகாப்தீன் ஹதீப் ,என்ற சிறுவனின் சடலமே கரையொதுங்கியுள்ளது
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น