
கனடாவில் இருக்கும் ஸ்காபரோ நகரில் உள்ள மஹா புத்த விகாரை நேற்றைய தினம் இரவு தீயிடப்பட்டதாக அறியப்படுகிறது. தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளான நேற்றைய தினம் இச் சம்பவம் நடந்ததால், இதற்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இத் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக கனடா பொலிசர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவீரர் தினத்தில், மற்றும் தேசிய தலைவரின் பிறந்த நாள் தினங்களில் இவ்வான அசம்பாவிதங்கள் நடப்பதாக சிங்களப் பேரினவாதிகள் காட்டிக்கொள்கின்றனர். காப்புறுதிப் பணத்தைப் பெற்று விகாரையை மேலும் விஸ்தரித்து கட்டுவதற்க்காக வேண்டும் என்றே புத்த பிக்குகள் தமது விகாரைக்கு தாமே தீயிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்தவேண்டும் என கனடிய தமிழர்கள் தெரிவித்தனர்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น