วันศุกร์ที่ 27 พฤศจิกายน พ.ศ. 2552

கிண்ணியாவில் சிவில் பாதுகாப்பு படையின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி


திருகோணமலை கிண்ணியாவில் இன்று நண்பகல் காளை மாட்டை அடக்க மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பண்ணையொன்றில் கட்டப்பட்டிருந்த காளை மாடு கயிற்றை அறுத்து முரட்டுத்தனமான முறையில் அங்கும் இங்கும் ஓடியதாகவும்,இதனையடுத்து இதனை அடக்குவதற்காக சிவில் பாதுகாப்பு படை மற்றும் பொலிஸாரின் உதவி நாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வேளையில் சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் பலியானதாகவும் மற்றவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น