
விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள சரத்பொன்சேகா மட்டுமல்லாது அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் பாடுபட்டுள்ளனர் என்றும் பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பான பொன்சேகாவின் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, இராணுவத்தின் 58ஆவது படையணியின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளபதியாக சரத்பொன்சேகா பொறுப்பேற்றுக்கொண்டதும் அவர் மேற்கொண்ட பதவி,இடமாற்றங்களை மறந்துவிட்டார்.ஆனாலும் தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்கள் பற்றி தவறாக கருத்து வெளியிட்டுள்ளார் என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น