วันอังคารที่ 22 ธันวาคม พ.ศ. 2552

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு 12,13 ஆம் திகதிகளில்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி மாதம் 12,13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால்மூலம் வாக்களிப்பதற்காக இரண்டு லட்சத்துக்கும் அதிகமானேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்போரின் விண்ணப்பங்கள் இம்மாதம் 24 ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டு 30 ஆம் திகதி அவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น