วันอังคารที่ 22 ธันวาคม พ.ศ. 2552

கடைசி 2 போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார்


மும்பை : இலங்கை அணியுடனான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில், ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மொகாலியில் நடந்த டி20 போட்டியின்போது யுவராஜ் சிங்கின் சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடாமல் ஓய்வெடுத்தார்.
கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர், 40 பந்தில் 23 ரன் எடுத்தார். இந்நிலையில், காயம்பட்ட விரலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தா (டிச.24) மற்றும் டெல்லியில் (டிச.27) நடக்கவுள்ள கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น