
யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் இடையிலான மினிபஸ் சேவை நடத்துவதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளதாகவும் விரைவில் இச்சேவை ஆரம்பமாகும் எனவும் தனியார் சிற்றூர்திச் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,
"ஏ-9 வீதியினூடாக தனியார் சிற்றூர்திகளும் சேவையில் ஈடுபட அனுமதிக்குமாறு எமது சங்கம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
இந்தக் கோரிக்கைக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். இதற்காகத் தரம் வாய்ந்த 50 பஸ்களின் விபரங்களை அரசாங்க அதிபரிடம் வழங்கியுள்ளோம். அவற்றில் 10 பஸ்கள் தெரிவு செய்யப்பட்டு அவை நேற்று பரீட்சித்துப் பார்க்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட 10 பஸ்களும் சேவையில் ஈடுபடும் திகதி அரச அதிபரால் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น