วันจันทร์ที่ 28 ธันวาคม พ.ศ. 2552

அரச எதிர்ப்பாளர்கள் எழுவர் ஈரானில் கைது


ஈரானில் அரச எதிர்ப்பாளர்கள் எனக் கருதப்படும் ஏழு பேர் இன்று பிற்பகலில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஐவர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அதனுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்டே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிராகப் பலர் கூடிநின்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருடன் முறுகல் ஏற்பட்டது. இந்த முறுகலில் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இன்று கைது செய்யப்பட்டவர்கள் அந்நாட்டு அரசியலில் முக்கிய இடம் வகிப்பவர்கள் என இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் அவர்களின் முழுமையான பெயர் விபரங்களைப் பாதுகாப்புத் துறை வெளியிடவில்லை.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น