
புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண சிரேஸ்ட தலைவர்களுள் ஒருவரான தயாமோகன் என்பவர் தற்போது சுவிஸ்லாந்தின் சுவைஸ் மாநிலத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. இவர் குறித்து ஏற்கனவே புலிகளின் இணையங்கள் செய்தி வெளியிடும் போது அவர் கிழக்கு மாகாணத்தில் நடமாடுவதாக ஒரு செய்தியையும், இலங்கை இராணுவத்தினரிடம் அவர் பிடிபட்டு விட்டதாக ஒரு செய்தியையும், அவர் மலேசியாவுக்கு தப்பியோடி விட்டதாக மற்றொரு செய்தியையும் மாறிமாறி வெளியிட்டதன் ஊடாக குழப்பும் விதத்தில் பலவித செய்திகளை பிரசுரித்து வந்த நிலையில் தற்போது சுவிஸ்லாந்தின் சுவைஸ் மாநிலத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น