
லண்டன் நோர்த்தம்ரன் டஸ்ரன்(Duston) Lodge Farm industrial estate பகுதியில் அமைந்திருந்த காஸன் கரி(cash and carry ) வர்த்தக நிலையத்தில் ஆயுதங்கள் சகிதம் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய செய்தி ஸ்தாபனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி வர்த்தக சந்தையின் மனேஜரை கைத்துப்பாக்கி காண்பித்து மிரட்டி பணம் பறிக்க முயன்றபோதும், திருடர்களின் கைவரிசை பலனிக்காத நிலையில் அங்கிருந்த கை தொலைபேசியை எடுத்துக்கொண்டு டஸ்ரன் பகுதியில் இருந்து தப்பி சென்றபோது மோட்டார் வே (நெடுஞ்சாலை) 15 ஏ சந்தி பகுதியில் வைத்து 3வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் ஹெலிகப்டரின் உதவியுடன் வெள்ளை வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் மூவரும் இலங்கை பிரஜாவுரிமை கொண்டவர்கள் என்றும் பிரித்தானிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுடன். கொள்ளையர்கள் தற்போது நோர்த்தம்ஸ்ரன் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாகிவருவதாகவும் பிரித்தானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น