วันอังคารที่ 1 ธันวาคม พ.ศ. 2552

வவுனியா முகாம்களில் இன்று முதல் சுதந்திரமான நடமாட்டம்


வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் இன்று முதல், சுதந்திரமான முறையில் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படும் போது படையினர் எவ்வாறான கட்டுப்பாடுகளை விதிப்பர் என்ற விடயங்கள் தெரியவரவில்லை.

குறித்த மக்கள், தமது முகாமில் இருந்து ஏனைய முகாம்களுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்களா? அல்லது, ஏனைய வெளிப்பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்படுவார்களா? என்ற விடயங்கள் தெரியவரவில்லை.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น