วันเสาร์ที่ 19 ธันวาคม พ.ศ. 2552

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மணல்காடு வலிகண்டி பிரதேசத்திற்கு மின்சார விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார்.

வடமராட்சி கிழக்கு வலிகண்டி பகுதிக்கான மின்சார விநியோகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வலிகண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வடபிராந்திய மின்சாரசபை உதவிப் பொது முகாமையாளர் முத்துரட்ணானந்தம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் சிறிஸ்கந்தகுமார் பிரதேச ராணுவ கட்டளை அதிகாரி கேணல் விஜேரட்ண வடமராட்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.வெதமுல்ல வடமராட்சி ஈபிடிபி அமைப்பாளர் சிறிரங்கேஸ்வரன் உட்பட பலர் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น