วันพฤหัสบดีที่ 27 สิงหาคม พ.ศ. 2552

சர்ச்சைக்குரிய ஒலி ஒளி நாடாவினை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி கடந்த ஜனவரி மாதம் ஏன் ஒளிபரப்பவில்லை? பிரிகேடியர் உதயநாணயக்கார கேள்வி!


பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட ஒளிபரப்பு இலங்கை படையினரை அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட மேற்படி நாடாவில் படையினர் இளைஞர்களை சுட்டுக்கொல்வதாக காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த ஒலி ஒளி நாடா கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்டிருக்குமாக இருந்தால் ஏன் அதனை அந்த காலகட்டத்திலேயே காண்பித்திருக்க முடியாதென பிரிகேடியர் உதயநாணயக்கார கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை குறித்த ஒலி ஒளி நாடா பொய்யானதென பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น