
மாலைதீவு விடுதியொன்றை சோதனையிட்ட பொலிஸார் அறையொன்றில் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவரையும் மாலைதீவுப் பிரஜை ஒருவரையும் கைது செய்துள்ளனர். சாகர மல்காந்தி என இனம்காணப்பட்டுள்ள 27 வயது இலங்கைப் பெண் குறிப்பிட்ட விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து மேலும் இரு இலங்கை யுவதிகளுடன் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் சோதனை செய்தபோது அவ் அறையில் இருந்து கைது செய்யப்பட்ட 25 வயதுடைய இப்றாகிம் அலி எனப்படும் மாலைதீவுப் பிரஜை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட பெண்கள் அவ்வறையில் விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น