วันจันทร์ที่ 24 สิงหาคม พ.ศ. 2552

வன்னியில் யுத்தப் பிரதேசத்தில் பணியாற்றியிருந்த தமிழ் மருத்துவர்கள் பிணையில் விடுதலை


இலங்கையில் போர்ப்பகுதிகளில் பணியாற்றி பின்னர் அரச தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மருத்துவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தியமூர்த்தி, வரதராஜா, ஷண்முகராஜா, இளம்செழியன் ஆகிய இம்மருத்துவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் போர்ப்பிரதேசங்களில் பணியாற்றிவந்தனர்.
அங்கிருந்து தப்பிவந்த இவர்கள் பின்னர் அரச படைகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
யுத்த சேதங்கள் குறித்து மிகையான செய்திகளை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் மீது புலன்விசாரணை நடத்தப்பட்டுவந்தது.
இவர்கள் பிணையில் செல்ல கொழும்பு நீதிமன்றம் ஒன்று தற்போது அனுமதித்திருக்கிறது.
பிணையில் வெளிவர மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து மருத்துவர்களில் இருவர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஈ.தம்பையா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น