วันจันทร์ที่ 24 สิงหาคม พ.ศ. 2552

திருகோணமலையில் கைவிடப்பட்ட விளைநிலங்களில் விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 வருடங்களாகவிவசாயம் மேற்கொள்ளப்படாதிருந்த பத்தாயிரம்ஏக்கர் விவசாய விளைநிலத்தில் இம்முறை பெரும்போக விவசாயம் மேற்கொள்வதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைவிடப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்வது தொடர்பான கூட்டம் மாகாண முதலமைச்சர் தலைமையில் திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.
விவசாயத்துக்கான பாதுகாப்பு தரப்பினரின் அனுமதி கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறுகிறார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น