วันจันทร์ที่ 28 กันยายน พ.ศ. 2552

இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 46 பேர் கைது

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 6 படகுகளில் 46 இலங்கை மீனவர்கள் அத்துமீறி இந்திய எல்லையில் மீன் பிடிப்பதைக் கண்டனர்.

உடனே அங்கு விரைந்து சென்று, அவர்களை சுற்றிவளைத்து பிடித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

அவர்கள் வந்த 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น