วันพุธที่ 23 กันยายน พ.ศ. 2552

வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் மோதல், ஒருவர் பலி

Photobucketவவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டது.

இம் முறுகல் நிலை மோசமாகி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் பலர் காயத்திற்குள்ளாகினார்.

இறந்தவர் 5 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீசந்திரமோகன் என்பவர் ஆவார்.

கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறுகல் நிலை மோசமாகி வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமை அண்டியுள்ள மக்களும் ஒன்றுதிரண்டு மோதியதனால், இராணுவம் மிகவும் மோசமாக மக்களை அடித்து முறுகல் வலுவடைந்து கொண்டிருக்கின்றது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น