
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரான கே.இனியபாரதியின் பிரத்தியேக செயலாளரான பிரகாஸ் வீட்டின்மீது நேற்றிரவு 11மணியளவில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள பிரகாசின் வீட்டின்மீது உந்துருளியில் வந்தவர்களால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்தாக்குதல் காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும், வீட்டில் இருந்த பொருட்களில் சிலவற்றுக்கு சேதமேற்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலீசார் தெரிவித்துள்ளனர்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น