วันเสาร์ที่ 30 มกราคม พ.ศ. 2553

ராஜிநாமா தொடர்பில் மீள்பரிசீலனை : அமைச்சர் டக்ளஸ்


ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது இணையத்தளத்துக்கு இன்று காலை தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக தீர்மானித்திருந்தார்.

இதனைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்புகள் இணைந்து இன்று காலை முதல் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இது தொடர்பாக நாம் கருத்து கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது. இன்று இந்துக்களின் தைப்பூச நாள் என்பதாலும் ஹர்த்தால் நடத்துவது மக்களின் இயல்பு நிலையை பாதிக்கும் என்பதாலும் அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தேன்.

ஜனாதிபதியிடம் 10 அமிச கோரிக்கைகளை முன்வைத்தே நாம் ஆதரவு வழங்கினோம். எனினும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை.

இந்நிலையை சிந்தித்தே நான் ராஜிநாமா செய்வதற்குத் தீர்மானித்தேன். அரச துறையில் ஈடுபட்டுவந்த என் சார்ந்த ஏனையோரும் ராஜிநாமா செய்யத் தீர்மானித்தனர்.

இதனை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதும், அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்" என அமைச்ர் மேலும் தெரிவித்தார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น