நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நபரும் கைது செய்யப்படுவார் - அமைச்சர் கெஹலிய
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnQ4vuP4I9UpKJAP7hmq5Sae4sONNyT8sWTj5_paE66cRyjfyt4GLG6sTk3nfVSlQ-3ifCriaZUCmKz6q0gVzmkNCCYHtFwbuD_0Y5xt2294DRYs2x78T2z9OxN7GWRQ1tD5mFzbvPTgM/s400/show_image_NpAdvSinglePhoto.php.jpg)
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படும் எந்த நபர் என்றாலும் அவரை கைது செய்ய நேரிடும் என அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தேசத்தின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எஸ்.எம்.எஸ் மூலம் அல்லது வேறும் வழியிலான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் எந்தவொரு நபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கிய காரணிகளின் அடிப்படையிலேயே லங்கா பத்திரகை சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்படுவோர் தொடர்பில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நபரும் கைது செய்யப்படுவார் - அமைச்சர் கெஹலிய"
แสดงความคิดเห็น