jkr

தமிழ்மக்களை சாக்கடைக்குள் வீழ்த்திய சம்பந்தன் கோஸ்டியினர்… -யாழ் மயில்வாகனம்


வடக்குகிழக்கு தமிழ்மக்களை தனிப்பட்ட நலன்களுக்காக சாக்கடைக்குள் தள்ளி விட்டிருக்கிறார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். பிரபாகரன் எப்படி கடைசியாக மாவிலாறு அணையைப்ப+ட்டி தன்தலையிலும் தமிழ்மக்களின் தலையிலும் மண்ணை அள்ளிப்போட்டு எல்லாவற்றையும் அழித்து தானும் சரணாகதி அடைந்து அழிந்து போனாரோ அதேபோல சம்பந்தனும் எவ்வித சாணக்கியமும் இல்லாமல் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் வடக்குகிழக்கு மக்களை சாக்கடைக்குள் வீழ்த்தி விட்டிருக்கின்றார். எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் ஏகாதிபத்தியவாதிகளிடம் சரணடைந்திருக்கிறார் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில் எவரையும் தமிழர்கூட்டமைப்பு ஆதரிக்காமல் தமிழர்தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டுமெனவும் அல்லது தமிழ்மக்கள் விரும்பிய வேட்பாளருக்கு தேர்தலில் வாக்களிக்குமாறு அறிக்கை விடுவது தான் தமிழ்மக்களின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும் எனவும் யார் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வருகிறார்களோ அவர்களுடன் ஓரு உறவை ஏற்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் தெரிவித்த ஆலோசனைகளுக்கு சம்பந்தனும் சுரேஸ்பிறேமச்சந்திரனும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். இதனால் உடனடியாக இப்போது எந்த முடிவையும் எடுக்கமுடியாது எனக் கூட்டத்தை ஒத்திவைத்தாராம் சம்பந்தன். இதனால்தான்; கூட்டமைப்பிற்குள்; முரண்பாடுகள் ஏற்படக் காரணமாயிருந்ததாம்.

சம்பந்தனுக்கும் சுரேஸ்பிறேமச்சந்திரனும் சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்து விட்டார்கள் என்பதை அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து அறியக்கூடியதாகவும் இருந்தது எனவும் தமிழ்மக்களையும் ஏனைய கூட்டமைப்பு எம்.பிக்களையும் ஏமாற்றுவதற்காகவே. யாரை ஆதரிப்பது என்ற முடிவு இன்னும எடுக்கப்படவில்லை என சம்பந்தன்கோஸ்டி நாடகம் ஆடியதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த 50வருடங்களாக தமிழ்மக்களின் நலன்களில் இருந்து முடிவுகள் எடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு தமது நலன்களுக்காக எடுத்த முடிவுகள்தான் தமிழ்மக்களை இன்று அழிவுக்குள் தள்ளி விட்டிருக்கின்றது. இந்தத் தேர்தலிலும் சம்பந்தன்கோஸ்டி எடுத்த முடிவானது ஓரு இனத்தையே பாதிக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றது. இந்த சம்பந்தன் கோஸ்டியினர் தேர்தல் காலங்களில் வருவார்கள் பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று உல்லாசமாக காலத்தை கழிப்பார்கள். இவர்கள் வாக்குப் போடச்சொன்ன சரத்பொன்சேகாவும் ஒருவேளை அமெரிக்காவுக்கோ அல்லது பிரிட்டனுக்கோ சென்று செட்டில் ஆகிவிடுவார். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியவர்கள் வடக்குகிழக்கு வாழ் மக்கள் தான்.

மகிந்தாவை மாற்ற வேண்டும் என்று அடம்பிடித்த சம்பந்தன் அதற்காக ஏன் சரத்பொன்சேகாவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டது தமிழ்மக்களின் நலனுக்காக அல்ல என்பதை தமிழ்மக்கள் இப்போது நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். சரத் பொன்சேகாவினால் சிங்களத்தில் வெளியி;டப்பட்ட தேர்தல் பிரசுரத்தில் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததை கண்டிக்காமல் கண்டுகொள்ளாமல்; கண்ணை மூடிக்கொண்டு சரத் பொன்சேகாவுக்கு வாக்களியுங்கள் என்று தன்நலத்திற்காக ஆதரித்து தமிழ்மக்களை இப்போது சாக்கடைக்குள் வீழ்த்தி விட்டனர் சம்பந்தன் கோஸ்டியினர்..!!
-யாழ் மயில்வாகனம்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழ்மக்களை சாக்கடைக்குள் வீழ்த்திய சம்பந்தன் கோஸ்டியினர்… -யாழ் மயில்வாகனம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates