jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா แสดงบทความทั้งหมด

திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யக் கோரி அமெ.ஜனாதிபதி ஒபாமா கடிதம்


சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அலரி மாளிகையில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

"சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுவிக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். திஸ்ஸநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடகங்கள் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்படுகின்றன. குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததன் அடிப்படையில் திஸ்ஸநாயகத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து சட்டமா அதிபரிடம் நான் ஆலோசனை கோரியுள்ளேன்.

முன்னொரு போது என்மீது படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், நான் உரிய முறையில் சட்டத்தரணி மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலைப் பெற்றேன். எனக்கு எதிராக சாட்சியளித்தவர்கள் பொய் சாட்சி சொன்னமைக்காக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் திஸ்ஸ நாயகமும் தனது தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்ய முடியும். அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ளலாம். இதனை விடுத்து திஸ்ஸநாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது.

திஸ்ஸநாயகத்தை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மட்டுமே என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கோணவெல சுனிலுக்கு பிணை கொடுத்தது போல் நான் பிணை வழங்க முடியாது. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது நீதிமன்றத்தை அவமதித்தாக அமைந்துவிடும்" என்று கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் பராக் ஒபாமா முதலிடம்


உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் ஒபாமாவை விட 49 ரேங்குகள் மட்டுமே பின்தங்கியுள்ளார் தாதா தாவூத் இப்ராகிம்.

உலகின் மோசமான தாதாக்களி்ல ஒருவர் தாவூத் இப்ராகிம். மும்பை தொடர் குண்டுவெடிப்பு உட்பட பல சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு உள்ளது.

இவர் பாகிஸ்தானில் தொடர்ந்து தலைமைறவாக இருந்து வருகிறார். இந்நிலையில், உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை 'போர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்க அதிபரை விட 49 ரேங்குகள் மட்டுமே பின்தங்கி உள்ளார் தாவூத். அதேசமயம், லட்சுமி மிட்டல், ரத்தன் டாடா ஆகியோரை விட தாவூத் சக்தி வாய்ந்த நபராகவும் இதில் வர்ணிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் தாவூத் இப்ராகிம் 50ஆவது இடத்தில் இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் 36ஆவது இடத்திலும், மிட்டல் 55ஆவது இடத்திலும், டாடா 59ஆவது இடத்திலும் உள்ளனர்.

அல் கொய்தா தலைவர் பின் லேடன் 37ஆவது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த 'குற்ற கட்டமைப்பான டி கம்பெனியின் தலைவர் தாவூத் இப்ராகிம்' என்று போர்ப்ஸ் வர்ணித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஒபாமாவின் நிர்வாகத்தில் மற்றுமொரு இந்தியருக்குப் பதவி


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தன் நிர்வாகத்தில் பல இந்தியர்களுக்கு இடம் அளித்து வருகிறார். இப்போது வர்த்தகத்துறை உதவி அமைச்சராக சுரேஷ்குமார் என்ற இந்தியரை நியமித்திருக்கிறார்.

இவர் 1970ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை தூரதர்ஷன் டி.வி. சேனலின் தேசிய ஒளிபரப்பில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். கைசென் இன்னோவிஷன் என்ற கம்பெனியின் தலைவராகவும்,மேலாண் இயக்குநராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

கிளிண்டன் அறக்கட்டளையின் தனி அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவமும் உள்ளவர். ஜோன்சன் அண்ட் ஜோன்சன் கம்பெனியிலும் பணியாற்றி இருக்கிறார்.

டொராண்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் வர்த்தகக் கல்வி ஆசிரியராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates