jkr
แสดงบทความที่มีป้ายกำกับ புலிகள் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ புலிகள் แสดงบทความทั้งหมด

புலிகளின் சொத்துக்களை பகிர்வதில் இரு குழுக்களுக்கு இடையில் முறுகல்


புலிகள் அமைப்பிற்கு சொந்தமான சர்வதேச சொத்துக்களை பகிர்ந்து கொள்வதில் இரண்டு குழுக்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளில் புலிகளுக்குச் சொந்தமான சுப்பர் மார்க்கட்டுக்கள் வீடியோ கடைகள் வர்த்தகக் கட்டடங்கள் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட சொத்துக்களை பகிர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நோர்வே நெடியவன் குழுவினருக்கும் அமெரிக்க ருத்ரகுமாரன் குழுவினருக்கும் இடையில் சொத்துக்களை பகிர்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை புலிகள் அமைப்பு வௌ;வேறு பெயர்களில் சுமார் 400 நிறுவனங்களை நடாத்தி வந்ததாக கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் விசாரணைகளின்போது தகவல் வெளியிட்டுள்ளார். புலிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிகளுக்கு உயிர்கொடுக்க சிலசக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக -திவயின தெரிவிப்பு!


யுத்தரீதியில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு உயிர்கொடுக்க சில சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் இயக்கம் மீண்டும் இயங்குவதாக வெளிகாட்டும் வகையில் உள்நாட்டில் இயங்கிவரும் சிலர் முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கடந்த 9ம்திகதி விடுதலைப்புலிகளின் தலைமையகத்திலிருந்து வெளியான செய்திகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இயங்கிவரும் விடுதலைப்புலிகளின் இணையதளங்களுக்கு குறித்த செய்தி கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் உள்ள சில ஊடகவியலாளர்கள் இந்த தகவல்களை அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் திவயின மேலும் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பில் பாரிய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் -சிங்கள ஊடகம் தகவல்! // ஸ்ரீலங்கா ரெலிகொமின் 42வீதபங்கு புலிகளுக்கு சொந்தம்..!

aniltte8ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளில் 42வீதத்தை தாம் வாங்குவதற்காக விடுதலைப்புலிகள் மலேசியாவிலுள்ள மக்ஸிஸ் ஊடாக முதலிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இலங்கை தேசிய தொலைத்தொடர்பு சேவையான ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வருவதற்காக இந்த பங்குகளை வாங்கும்படி கே.பி அனுமதிக்கப்பட்டார் எனவும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீலங்கா ரெலிகொமின் 51.23வீத பங்குகள் அரசாங்கத்துக்கு உரியன 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி மக்ஸிஸ் நிறுவனம் 320மில்லியன் ரூபா முதலிட்டு 42வீத பங்குகளை வாங்கியுள்ளது. தொலைத்தொடர்பு பிரிவின் தலைவர் ஒருவரும் அவரது சகோதரரும் இந்த வியாபாரத்தை நடத்திக் கொடுத்ததாகவும் அதற்காக மக்ஸிஸ் அவர்களுக்கு 1மில்லியன் ரூபா தரகுப்பணம் செலுத்த ஒப்புக் கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தேசிய பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் அதில் இணைந்த போது அந்த உடன்படிக்கை முறிந்து விட்டது. ஸ்ரீலங்கா ரெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரியை அவருக்கு போதிய தகுதிகள் இல்லாதபோதும் நியமனம் செய்தது மக்ஸிஸ் என்றும் அவருடைய சம்பளம் 13மில்லியன் ரூபா என்றும் ஒருசெய்தி தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு கொழும்பில் பாரிய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது பல்பொருள் அங்காடிகள், கடைத்தொகுதிகள், அடுக்குமாடி வீட்டுத்தொகுதிகள் என பல்வேறு பாரிய வர்த்தக கட்டமைப்புகளை புலிகள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த வர்த்தகர்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? என்பது குறித்த தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வர்த்தகர்கள் பெருந்தொகைப் பணத்தை புலிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates