jkr
แสดงบทความที่มีป้ายกำกับ மைக்கேல் ஜாக்சன் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ மைக்கேல் ஜாக்சன் แสดงบทความทั้งหมด

மைக்கேல் ஜாக்சன் இறுதிச் சடங்கு செலவு ரூ. 5 கோடி!


சமீபத்தில் மரணமடைந்த ‘பாப் கிங்’ மைக்கேல் ஜாக்சனின் இறுதிச் சடங்கிற்கு ரூ.5 கோடி செலவாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் அவரது குடும்பத்தினர். பாப் இசையுலகின் பிதாமகனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சன், கடந்த ஜூன் 25 ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். ஐம்பது வயதே ஆன ஜாக்ஸனின் மரணம் உலக முழுதும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரணத்துக்குப் பின், மைல்கேல் ஜாக்சனின் உடல் 70 நாட்களுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் ஜாக்சனின் உடலை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டி உள்ளிட்ட பொருள் ரூ.35 ஆயிரத்துக்கும், பூக்கள் மட்டுமே ரூ.16 ஆயிரத்துக்கும் வாங்கப்பட்டதாக ஜாக்சன் குடும்பத்தார் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. செலவில் பெரும் தொகை ஜாக்சனை அடக்கம் செய்த இடத்துக்கே அளிக்கப்பட்டு விட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜக்சினின் ஆவியுடன் பிரபல உளவியல் திறனாளியான ஜேன் வலஸ் உரையாடல்


மருந்துகளிற்கு அடிமையானமைதான் தனது மரணத்திற்கு காரணம் என பிரபல பொப்பிசைப் பாடகர் மைக்கிள் ஜக்சனின் ஆவி தெரிவித்ததாக பிரபல உளவியல் திறனாளியான ஜேன் வலஸ் நடத்திய ஆவியுடனான உரையாடல் நிகழ்ச்சியின் பின்னர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வானது லன்டனில் கடந்த வெள்ளிக்கிழமையிரவு 10 மணி முதல் 12 மணிக்கிடையிலான நேரத்தில் ஆவிகளுடன் உரையாடும் இணையத்தளம் வாயிலாக இடம்பெற்றுள்ளது.

உங்கள் மரணத்திற்கு யார் பொறுப்பாளி என ஜேன் வினவியபோது, அதற்கு ஜக்சனின் ஆவி, எவரும் பொறுப்பல்ல. மருந்துகளை நான் மிதமிஞ்சி பாவிப்பது குறித்தும் அதனால் எதிர்கொள்ளக்கூடிய எதிர்மறையான விளைவுகள் குறித்தும் பலதடவை எச்சரிக்ககை செய்யப்பட்டேன்.

எனினும் நோயின் உக்கிரம் தாங்க முடியாததாலும் மருந்துகளின்றி உயிர்வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாலும் மருத்துவர்களின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தவில்லை எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவரது திஸ் இஸ் இட் என்ற திரைப்படம் வெளியானதையிட்டு ஜக்சன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், தான் பல முகங்களை கொண்டதோர் மனிதனாகவே வாழ்ந்ததால் உண்மையான தனது முகத்தை தானே ஒருபோதும் அறிந்திருக்கவில்லை எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates