jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தியா இலங்கை அணிகள் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தியா இலங்கை அணிகள் แสดงบทความทั้งหมด

நான்காவது ஒருநாள் போட்டி: இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது


இந்தியா இலங்கை மோதும் 4-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இலங்கை அணியில் ஜெயசூர்யா, பெரேரா, லக்மல் சேர்க்கப்ட்டனர். இந்தியா அணியில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக கோக்லி சேர்க்கப்ட்டார்.
டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தில்சானும் தாரங்காவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் மூன்று போட்டியை போல் இந்த போட்டியில் இலங்கை வீரர்களால் முதலில் அடித்த விளையாட முடியவில்லை.
ஜாகீர்கான் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இலங்கை அணி 8 ஓவரில் 31 ரன் எடுத்திருக்கும்போது தில்சான் 9 ரன்னில் நெக்ரா பந்தில் அவுட் ஆனார்.
இந்த ரன்னை தில்சான் 19 பந்தில் எடுத்தார். அடுத்து தாரங்காவுடன் ஜெயசூர்யா ஜோடி சேர்ந்தார். 11 ஓவரில் இலங்கை அணி 48 ரன் எடுத்திருந்தது. அடுத்து 12வது ஓவரை இ.சர்மா வீசினார். அந்த ஓவரில் தாரங்க 5 பவுண்டரி அடித்து விலாசினார்.
அடுத்த ஓவரில் ஜெயசூர்யா 15 ரன்னில் ஜாகீர்கான் பந்தில் அவுட் அனார். அடுத்து சங்ககரா தாரங்காவுடன் ஜோடி சேர்ந்தார். சங்ககரா ரன் ஏதும் எடுக்காமல் இருந்தபோது இ.சர்மா பந்தில் ஹர்பஜன் கொடுத்த கேட்சைப் பிடிக்க தவறினார். இதனால் டக் அவுட்டில் இருந்து சங்ககரா தப்பினார்.
அதன் பின் இருவரும் அடித்து விளையாடினார்கள். இலங்கை அணியின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது தாரங்க 9 பவுண்டரி1 சிக்சருடன் 50 ரன்னை கடந்தார். இலங்கை அணி 17.1 ஓவரில் 100 ரன்னை கடந்தது. 33.4 ஓவரில் ஸ்கோர் 183 ரன்னாக இருக்கும்போது தாரங்கா சதம் அடித்தார். சங்ககரா 60 ரன் எடுத்து அவுட் ஆனார்.
42.1 ஓவரில் 234 ரன் இருக்கம்போது தாரங்கா 118 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் இலங்கை அணி 49.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன் எடுத்திருக்கும்போது லைட் பிரச்சனையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அதன்பின் ஆட்டம் தொடங்கியது. குறிப்பிட்ட 50 ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் எடுத்தது.
பின்னர் 316 ரன் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்கத்திலே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியா 23 ரன் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டை இழந்தது. சேவாக் 10 ரன்னிலும் சச்சின் 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இருவருடைய விக்கெட்டையும் லக்மால் கைப்பற்றினார். அடுத்து காம்பீர் வீரட் கோக்லி தடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். அதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 15.3 ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 100ஐ தாண்டியது.
நிதானமாக விளையாடிய காம்பீரும் கோக்லியும் அரைசதம் அடித்தனர். கோக்லி 110 பந்தில் சதமும் காம்பீர் 101 பந்தில் சதமும் அடித்தனர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா 48.0 ஓவரில் 313 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றது. கடைசியில் மேட்ச்சியில் தோற்றாலும் பிரச்சினை இல்லை
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பரபரப்பான போட்டியில் இந்தியா 3 ரன்களில் வெற்றி


இந்தியா இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடந்தது

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசத் தீர்மனித்தது. துடுப்பாட்டத்தில் முதலில் களம் இறங்கிய சேவாக் - சச்சின் ஜோடி அதிரடியாக விளையாடினர். 48 பந்துகளில் சச்சின் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். 34 பந்துகளில் சேவாக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

இந்நிலையில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் பெர்னாண்டோவின் பந்து வீச்சில் சச்சின்ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்தில் சச்சின் 63 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.


இன்றைய ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் டோனி 34 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் டோனிக்கு இது 34ஆவது அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டோனி சர்வதேச போட்டியில் 5000 ஓட்டங்களை இன்று கடந்துள்ளார்.

சேவாக் 102 பந்துகளில் 146 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 17 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். அடுத்த சில நிமிடங்களில் டோனி 53 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழ்ந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

தொடர்ந்து களம் இறங்கிய கவுதம் காம்பீர் 8 பந்துகளில் 11 ஓட்டங்கள், சுரேஷ் ரெய்னா 16 ஓட்டங்கள், ஹர்பஜன் சிங் 11 ஓட்டங்கள், விராட் கோக்லி 27 ஓட்டங்கள், ரவிந்திர ஜடேஜா 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பிரவீன் குமார் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்தியா இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து இலங்கை அணி இலக்கு 415ஆக நிர்ணயிக்கப்பட்டது.தரங்காவிற்கு முதலில் கோலி கேட்ச்சை கோட்டை விட அவரும் தில்ஷானும் முதல் விக்கெட்டுக்காக 24 ஓவர்களில் 168 ரன்களைச் சேர்த்தனர். ரவிந்தர் ஜடேஜாவை விட்டு வெளுத்து வாங்கிய தரங்கா 67 ரன்களில் ரெய்னா பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். அதன் பிறகு களமிறங்கினார் சங்கக்காரா, மனம்போன போக்கில் அனைத்து பந்து வீச்சாளர்களையும் விளாசு விளாசென்று விளாசினார். 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 43 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து குமார் பந்தை புல் செய்து ஸ்கொயர் லெக் பவுண்டரியில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் 12 ஓவர்களில் தில்ஷானும், சங்கக்காராவும் இணைந்து 128 ரன்களை விளாசினர். அவர் ஆட்டமிழக்கும் போது பவர் பிளே இருந்தது. இந்திய அணியைப் போலவே பவர் பிளேயில் விக்கெட்டுகளை பறிகொடுக்கத் துவங்கியது இலங்கை அணி. சங்கக்காரா ஆட்டமிழந்தவுடன் ஜெயசூரியா 5 ரன்கள் எடுத்து ஹர்பஜன் வீசிய நல்ல பந்திற்கு ஸ்டம்ப்டு ஆனார். அடுத்ததாக 160 ரன்களை 124 பந்துகளில் 20 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் பவுல்டு ஆனார். கடைசியாக ஜெயவர்தனே இர்ண்டாவது ரன் ஓட முயன்று ரன் அவுட் ஆனார். இடையில் சில கேட்ச்கள் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 40.2 ஓவர்களில் இலங்கை 345/5 என்று இருந்தபோது, கண்டாம்பியும், மேத்யூஸும் இணைந்து ரன்களை நிதானமாக சேர்த்தனர் இருவரும் இணைந்து சில மோசமான பந்துகளை பவுண்டரிகளாக மாற்றி 48வது ஓவரில் ஸ்கோரை 401 ரன்களாக உயர்த்தினர். கடைசியில் கண்டாம்பி டெண்டுல்கரிடம் ரிஸ்க் எடுத்து ரன் அவுட் ஆனார். அப்போது 10 பந்துகளில் இலங்கைக்கு தேவை 14 ரன்களே. ஆனால் கடைசி இரண்டு ஓவர்களை அபாரமாக வீசினர் ஜாகீர் கானும் நெஹ்ராவும். இதனால் 411 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தோல்வி தழுவியது. சேவாகின் இன்னிங்ஸை ஒன்றுக்கு ஒன்று என்ற வகையில் தில்ஷான் ஈடுகட்டினார் என்று கூறவேண்டும். ஷாட் தேர்வு, இடைவெளியில் அடிப்பது, நல்ல பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டுவது, விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவது என்று அனைத்திலும் சேவாக் போன்றே தில்ஷன் செயல்பட்டார். இந்த போட்டியை இவர், மற்றும் சங்கக்காராவின் ஆட்டத்திற்காகவாவது இலங்கை வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு அபாரமானது 10 ஓவர்களில் அவர் 58 ரன்களை விட்டுக் கொடுத்து அதிரடி மன்னர்களான ஜெயசூரியா, தில்ஷான் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். உண்மையில் இது போன்ற தார்ச்சாலை பிட்ச்களில் பந்து வீச்சில் சிறப்பாக இருப்பவர்களுக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்படவேண்டும். ஆனால்... ஆட்ட நாயகனாக சேவாக் தேர்வு செய்யப்பட்டார். இந்த பரபரப்பு வெற்றியில் திளைக்கும் நாம் இன்னொரு ரெக்கார்டையும் மறந்து விடக்கூடாது. 10 ஓவர்களில் விக்கெட்டின்றி 88 ரன்களை விட்டுக் கொடுத்த ஜாகீர்கான் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த இந்திய பந்து வீச்சாளரானார். சேவாகின் நகைச்சுவை: ஆட்ட நாயகன் விருது பெற்ற சேவாக் விருது பெறும் போது ரவி சாஸ்திரி கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது கடைசி நிமிடத்தில் டென்ஷனாக இருந்தீர்களா (காயமடைந்ததால் சேவாக் பெவிலியனில் அமர்ந்திருந்தார்) என்று கேட்க, அதற்கு சேவாக், நான் இலங்கை அணி வெற்றி பெற ஆதரவு அளித்து வந்தேன், ஏனெனில் நான் ஆதரவு தெரிவிக்கும் அணி எப்போதும் தோல்வியடையும், அதனால் இந்தியா வெற்றி பெற நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று நகைச்சுவையாக பதிலளித்தார்..5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1- 0 என்று முன்னிலை வகிக்கிறது பொறுத்திருந்து பார்க்கலாம் இலங்கை அணி ரசியர்களை ?????
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates