jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி แสดงบทความทั้งหมด

நம்பகத்தன்மையற்ற பொன்சேகா மக்களிடமிருந்து அந்நியமாகிறார்: இன்று சொல்வதை நாளை மறுப்பவர் - ஐ.ம.சு.மு அமைச்சர்கள்


தான் முதலில் தெரிவித்த கருத்தை 24 மணி நேரத்திற்குள் மாற்றிச் செல்லும் சரத் பொன்சேகாவின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு பிரதேச சபை உறுப்பினருக்குள்ள அரசியல் ஞானம் கூட கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தலைவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த முயற்சிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்குத் தேவையான சாட்சிகளை பொன்சேகா வழங்கி வருவதாகவும் வாக்குப் பெறுவதற்காக இராணுவத்தைக் ‘காட்டிக்கொடுக்கும் இத்தகையோருக்கு ஜனவரி 26ஆம் திகதி மக்கள் தக்க பதிலை வழங்குவர் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (15) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூறியதாவது:-

தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதாக சில ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள பொன்சேகா பாரதூரமான செய்தியை வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தொடர தயங்குகிறார். இவர் வெளியிட்ட கூற்று தவறுதலாக பிரசுரிக்கப்படவில்லை. திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது.

இவர் நவம்பர் 16ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்த போதும் ஆறு மாதங்களுக்கு பின்னரே ஐ. தே. க.வுடனும் ஜே. வி. பியுடனும் இவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த இரகசியமாக பேசி வந்துள்ளதாகத் தெரிகிறது. பதவியில் இருக்கையிலே தனது உயரதிகாரிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட இவர் சதி செய்துள்ளார். தான் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ள போன்சேகாவுக்கு பிரதேச சபை உறுப்பினருக்கு உள்ள அரசியல் ஞானம் கூட கிடையாது என்றார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது:-கீர்த்தி மிக்க இராணுவத்தளபதியான பொன்சேகா இன்று கீழ்த்தரமான அரசியல்வாதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்காக எத்தகைய மோசமான காரியத்திலும் இறங்கும் நிலைக்கு வந்திருக்கிறார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இவர் இலங்கையில் இருக்கவில்லை. அதனை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். அவரின்றியே இறுதிக்கட்ட யுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

ஊடகவியலாளர் ஒருவர் வழங்கிய தகவல்படியே சரணடைய வந்த புலித்தலைவர்களை படையினர் கொலை செய்ததாக தான் கூறியதாக பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் ஆலோசனைப்படியா இவர் யுத்தத்தை முன்னெடுத்தார்.

இவர் ஜனாதிபதியானால் கூட உடகவியலாளர்கள் சொன்ன விடயங்களை அறிவிக்க ஊடகவியலாளர் மாநாடு நடத்துவார். பின்னர் அதனை மறுக்க மாநாடு நடத்துவார்.

மேற்படி குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை பாதுகாப்பு செயலாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க முடியும். தான் கூறிய கூற்றை 24 மணி நேரத்தில் மாற்றிக்கூறும் பொன்சேகாவின் நம்பகத் தன்மை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவரின் கூற்று காரணமாக பொன் சேகாவுக்குக் கிடைக்க விருந்த வாக்குகளை இழக்க நேரிட்டுள்ளது.

குடும்ப அரசியலை ஒழிக்கவே போட்டியிடுவதாக பொன்சேகா கூறியுள்ளார். ஆனால் பசில் வடக்கு, கிழக்குப் பகுதிகளை சிறப்பாக அபிவிருத்தி செய்து வருவதோடு கோட்டாபே யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தார்.

தான் கூறிய கூற்றைத் தானே மறுப்பதன் மூலம் பொன்சேகாவின் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போயுள்ளது. அவரின் கருத்துக்கள் செல்லாக் காசுகளாகிவிட்டன என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

35 ஆயிரத்து 646 கோடி ரூபாவிற்கான கணக்கு வாக்கெடுப்பு நாளை சமர்ப்பிப்பு-வியாழன் மாலை 5.30 மணிக்கு வாக்கெடுப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 2010 ஆம் ஆண்டில் நான்கு மாதங்களுக்கான செலவிற்கென 35 ஆயிரத்து 646 கோடியே 550 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவிற்கான கணக்கு வாக்கெடுப்பை பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கவிருக்கின்றது. 2010 ஆம் ஆண்டில் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதனால் அரசாங்கம் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கõமல் கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்தது. கணக்கு வாக்கெடுப்பிற்கான செலவு விபரங்களை பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவே சபையில் சமர்ப்பிக்கவிருக்கின்றார்.

கணக்கு வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறுவதுடன் சபையமர்வுகள் மாலை 6.30 மணிவரையும் தொடரும். இதன் மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நடைபெறும். அடுத்தவருடத்தில் முதல் நான்கு மாதகால செலவிற்கென அரசாங்கம் 35 ஆயிரத்து 646 கோடியே 550 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவை மதிப்பிட்டுள்ளதுடன் அதில் பாதுகாப்பு அமைச்சுக்கென 210 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாவை கோரியிருக்கின்றது. ஜனாதிபதியின் செயன்முறை மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கென 230 கோடியே 32 இலட்சம் ரூபாவும் தேர்தல்கள் திணைக்களத்திற்கென 36 கோடியே 62 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கணக்கு வாக்கெடுப்பின் பிரகாரம் பிரதம அமைச்சர் அலுவலகத்திற்கு 65 கோடியே 41 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவும் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு 17 கோடியே 79 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு கோரியுள்ள 210 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாவுடன் இலங்கை தரைப்படைக்கு 345 கோடி ரூபாவும் கடற்படைக்கு 116 கோடி ரூபாவும் விமானப்படைக்கு 78 கோடி ரூபாவும், பொலிஸ் திணைக்களத்திற்கு 124 கோடி ரூபாவும் , சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 297 கோடி ரூபாவும், கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்திற்கு 1கோடியே 66 இலட்சம் ரூபாவும் கோரியுள்ளது.

2010 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்கென மீண்டுவரும் செலவினமாக 1970 கோடி ரூபாவும், மூலதனச் செலவினமாக 1580 கோடி ரூபாவும், முற்பனக் கொடுப்பனவுகளுக்கென 60 கோடி ரூபாவும் செலவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இதேவேளை, கணக்கு வாக்கெடுப்பில் அவசர தேர்தல்கள் நிமிர்த்தம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் தேர்தலொன்று அறிவிக்கப்படுமாயின் குறைநிரப்பு பிரேரணையின் மூலமாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates