jkr

இன்று உலக அகதிகள் தினம்

இன்று உலக அகதிகள் தினமாகும்.
உலகளாவிய ரீதியில் இடம்பெயர்ந்துள்ள 40 கோடி மக்களுக்கான அங்கீகாரத்தின் பொருட்டு இவ்வாண்டுக்கான தொனிப்பொருளாக 'வீடு'அடையாளம் காணப்பட்டுள்ளது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நெடுங்கேணியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் இராசலிங்கம் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்றபட்ட நெடுங்கேணி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த நபர்கள் மனைவியின் கையை வாளால் வெட்டியும் கணவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கடும் தாக்குதல் நடத்தியதுடன் வீட்டிலிருந்த நகைகளையும் கொள்ளையிட்டு சென்றிருந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த கணவரே சிகிச்சை பலன்றி அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி கை வெட்டுப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலும் இருவரை தேடிவருகின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அறிவியல் அறிவோம்

Posted: 05 Apr 2010 01:13 AM PDT

அறிவியல் வளர்ச்சிக்கு இன்று சிறந்த ஊன்று கோலாக இயங்குவது இணையதளம் என்றால் அது மிகையாகாது. தகவல் தேடலின் மூலமாகவும் அதன் அடிப்படையிலும், அறிவியலின் இன்றைய வளர்ச்சியையும் அது செல்லும் பாதையையும் இன்று எளிதாகக் கற்றுக் கொள்ள முடிகிறது. அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காகவே, ஆர்வம் என்பதன் ஆங்கிலச் சொல்லான Curiocity (Curiosity) என்ற பெயரில் ஓர் இணையதளம் இயங்குகிறது. ஆர்வத்திற்கு தூபம் போட்டு வளர்க்கும் ஒரு நகரமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உலகின் இயக்க நிலைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் உள்ளதா? ஏதேனும் ஒன்று எப்படி இயங்குகிறது என்ற வினா மனதில் உள்ளதா/ இந்த தளம் செல்லுங்கள். அண்டு க்ண் என்ற பிரிவில் சென்று உங்கள் கேள்வியை டைப் செய்திடுங்கள். தொடர்ந்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, பள்ளியில் உங்கள் வகுப்புநிலை,வசிக்கும் நகரம் என தகவல்களையும் கொடுங்கள். உங்களுக்கான பதில் அனுப்பப்படும். கேள்வி கேட்பது மட்டுமின்றி, ஏற்கனவே கேட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் அதில் பிரவுஸ் செய்து பார்க்கலாம்.

இந்த தளத்தில் எனக்குப் பிடித்தது பரிசோதனைச் சாலை (The Lab) பிரிவுதான். ஏதேனும் பரிசோதனை ஒன்றை செய்து பார்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதற்கான வழிமுறைகள், தேவையான பொருட்கள் ஆகியவற்றைத் தந்து எப்படி பரிசோதனையை மேற்கொள்வது என்ற வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது.

நாம் அன்றாடம் சந்திக்கும் பொருட்கள் குறித்த அறிவியல் தகவல்களைத் தருகிறது Everyday Science என்ற பிரிவு. நான் இதனைப் பார்க்கும் போது முப்பரிமாணப் படம் குறித்த தகவல்கள் விரிவாகத் தரப்பட்டிருந்தன. இன்றைய திரைப்படங்கள் மட்டுமின்றி, டிவிக்களும் முப்பரிமாணக் காட்சிக்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இது அனைவரும் அறிய வேண்டிய விஷயமாகும்.
இந்த தளத்தில் நீங்கள் எங்கு பிரவுஸ் செய்தாலும், அறிவியல் குறித்து எதனையாவது கற்றுக் கொள்வீர்கள் என்பது உறுதி.

இந்த தளம் கிடைக்கும் முகவரி http://www.curiocity.ca/
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

"மவுஸ்" மாயாஜாலம்

கையடக்க மவுஸ் எவ்வளவு வேலை செய்கிறது பார்த்தாயா! என்று அடிக்கடி வியப்பவரா நீங்கள். இதோ இந்த மவுஸ் செய்திடும் இன்னும் பல வேலைகளை இங்கே படியுங்கள். மவுஸின் மாயாஜாலம் மட்டுமல்ல, உங்களின் வேலையைக் குறைக்கும் வகையில் மவுஸ் என்ன வகை திறனெல்லாம் கொண்டுள்ளது என்று இங்கு பார்க்கலாம். உங்களிடம் ஸ்குரோல் வீல் உள்ள
மவுஸ் இருக்கிறதா; அப்படியானால் பல ட்ரிக்குகளை நீங்கள் மேற் கொள்ளலாம்.

இணையப் பக்கம் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு வீலை மெதுவாகச் சுழற்றவும். நீங்கள் சுழற்றும் திசைக் கேற்ப முன்பு பார்த்த இணையப் பக்கங்களுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப் படுவீர்கள். இதனைச் சோதிக்க இன்டர் நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பைத் திறக்கவும். அதன் வழியாக பல இணைய பக்கங்களுக்குச் செல்லுங்கள். பின் இந்த ட்ரிக்கைச் சோதித்துப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும்.

ஏதேனும் ஒரு வெப் பிரவுசர் வழியாக இணையப் பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர் களா? கண்ட்ரோல் கீயை அழுத்தி கொண்டு ஸ்குரோல் வீலைச் சுழற்றவும். சுழற்றும் திசைக்கேற்ப வெப் சைட்டின் எழுத்துக்கள் சிறியதாகவோ பெரியதாகவோ மாறுவதைப் பார்க்கலாம். நீங்கள் ஆப்பரா பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த ட்ரிக் மேற்கொள்கையில் படங்களும் பெரிது சிறிதாவதைப் பார்க்கலாம்.


பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களைப் பயன்படுத்துகையில் இணையப் பக்கங்களில் உள்ள ஹைப்பர் லிங்க்குகளின் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு கிளிக் செய்தால் லிங்க்குடன் சம்பந்தப்பட்ட தளம் புதிய டேப்பில் திறக்கப்படும். அதே போல ஒரு டேப் மீது மவுஸ் வீல் கொண்டு கிளிக் செய்தால் அந்த டேப் மூடப்படுவதுடன் அது நம் பார்வையிலிருந்து அகற்றப் படும். டேப் ஓரமாக உள்ள சிறிய பெருக்கல் அடையாளத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய் வதைக் காட்டிலும் இது எளிதல் லவா!

மவுஸ் வீலைப் பயன்படுத்தி இ�ணைய தளப் பக்கங்களில் முன்னும் பின்னும் செல்ல முடியும். பயர்பாக்ஸ் பிரவுசரில் நிறைய டேப்கள் திறந்திருக்கையில் டேப் பாரின் இரு முனைகளிலும் ஒரு அம்புக் குறி அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் மறைந்திருக்கும் பிற டேப்களைக் காணலாம். இதைக் காட்டிலும் ஓர் எளிய வழி உள்ளது. டேப் பாரில் எங்கு வேண்டுமென்றாலும் உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று வைத்து உங்கள் மவுஸ் வீலை மேலும் கீழுமாக நகர்த்தவும். மறைந்துள்ள டேப்கள் காட்டப்படும்.

உங்கள் மவுஸ் பாய்ண்டர் ஸ்கிரீனில் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிப்பது கஷ்டமாக இருக்கிறதா? மவுஸ் பாய்ண்டர் ஸ்கீமைத் திறந்து பாய்ண்டரைப் பெரிதாகவோ அல்லது வேறு வடிவிலோ மாற்றிக் கொள்ளலாம். இதற்கு Start /Settings/Control Panel /Mouse எனச் செல்லவும்.

இங்கு Pointers டேபில் கிளிக் செய்திடவும். மேல் பிரிவில் புதிய பாய்ண்டர் ஒன்றை கீழ் விரியும் மெனுவில் இருந்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் இது போன்ற வேறு மவுஸ் பாய்ண்டர் ஸ்கீம் கிடைக்கவில்லை என்றால் http://support.microsoft.com/default.aspx?scid=kb;ENUS;q154500 என்ற தளத்திற்குச் செல்லவும். இந்த தளத்திலிருந்து எட்டு வெவ்வேறு மவுஸ் பாய்ண்டருக்கான திட்டத்தினை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

கிளிக் லாக் என்றொரு அருமையான வசதியை விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் எம்.இ. ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் காணலாம். இதன் விசேஷம் என்ன? பொதுவாக டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்திட அதன் தொடக்க இடத்தில் கர்சரை அழுத்திப் பிடித்துக் கொண்டு பின் அழுத்தியவாறே அப்படியே தேர்ந் தெடுக்கபட வேண்டிய இடம் வரை இழுத்து வந்து முடியும் இடத்தில் விட்டுவிடுவோம். டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிடும்.




கிளிக் லாக் வசதியை இயக்கிவிட்டால் இது போல அழுத்திப் பிடித்துக் கொண்டே இழுக்கும் வேலை இல்லை. டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் ஒரு கிளிக்; முடிவில் ஒரு கிளிக். காரியம் முடிந்தது. டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிட்டது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள நேரத்தையும் நீங்கள் கிளிக் லாக் மூலம் செட் செய்திடலாம்.


இதை எங்கிருந்து பெறுவது? என்று தேட வேண்டாம். உங்கள் சிஸ்டத்திலேயே உள்ளது. Settings/Control Panel/Mouse செல்லவும். பின் Button டேப் கிளிக் செய்திடவும். கீழாக உள்ள "Turn on Click Lock" என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். மீண்டும் கிளிக் செய்து அழுத்தியவாறே பழையபடி வேண்டும் என்றால் Settings பட்டன் அழுத்தவும்.

அடோப் போட்டோ ஷாப் அப்ளிகேஷன் புரோகிராமில் ஒன்றை ஸூம் செய்திட என்ன செய்கிறீர்கள்? டூல் பாரிலிருந்து ஸூம் டூலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறீர்கள். அல்லது கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் ஸூம் செய்திட உங்களுக்குக் கை கொடுக்கிறது. ஆல்ட் + ஸ்பேஸ் பார் அழுத்தினால் ஸூம் குறைகிறது. இவற்றை எல்லாம் மறந்திடுங்க! படத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு ஜஸ்ட் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்துங்க.


வெப் பிரவுசிங் செய்திடுகையில் பயர்பாக்ஸ் பிரவுசரில் தேவையற்ற டேப் ஒன்று திறக்கப்படுகிறதா? அதன் உள்ளே என்ன உள்ளது என்று பார்க்கக் கூட உங்களுக்கு விருப்பம் இல்லையா? தேவையற்ற டேப் மீது உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். இப்போது மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தி ஒரு கிளிக் செய்திடுங்கள். டேப் அதனுடன் இணைந்த தளம் எல்லாம் காணாமலே போயிருக்கும்.


இணையதளத்தில் உள்ள டெக்ஸ்ட்டை ஒவ்வொரு வரியாகப் பொறுமையாகப் படிப்பவரா நீங்கள்! உங்களுக்கு உதவ மவுஸ் தயாராக உள்ளது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸ் ஸ்குரோல் வீலை நகர்த்துங்கள். ஒவ்வொரு வரியாகத் தள்ளப்படும். பயர்பாக்ஸில் பல புக்மார்க்குகளை ஏற்படுத்தி விட்டீர்கள். உங்கள் புக் மார்க்குகள் எல்லாம் நான்கு அல்லது ஐந்து வகைப் பட்ட பொருள் குறித்தவையாக உள்ளன. எடுத்துக் காட்டாக கம்ப்யூட்டர் டிப்ஸ் குறித்த தளங்களுக்கான புக்மார்க்குகள், ஆன் லைனில் பத்திரிக்கைகளைப் படிப்பதற்காக சில புக்மார்க்குகள், ஹார்ட் அட்டாக் வராமல் இருப்பதற்கான தளங்களுக்கானவை எனப் பல உள்ளன.

இவற்றை ஒவ்வொரு வகைக்கான போல்டர்களை உருவாக்கி அந்த போல்டர்களுக்குள் இவற்றை வகைப்படுத்தி போட்டு வைத்தால் புக் மார்க்குகளின் நீண்ட பட்டியலில் ஒவ்வொன்றாகத் தேடித் தேடி திறக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட போல்டர்களைத் திறந்து தேவையான புக் மார்க்குகளின் மீது கிளிக் செய்து திறந்து படிக்கலாம். சரி, போல்டர் ஒன்றில் ஒன்றுக்கொன்று சார்ந்த தளங்களின் பெயர்கள் தானே இருக்கப் போகின்றன. எப்படியும் அனைத் தையும் பார்க்க வேண்டும்.

மொத்தமாக இவற்றைத் திறக்க முடியுமா? முடியும் என்கிறது பயர்பாக்ஸ். சம்பந்தப்பட்ட போல்டர் மீது மவுஸ் ஸ்குரோல் வீல் கொண்டு கிளிக் செய்தால் அந்த போல்டரில் உள்ள அனைத்து புக்மார்க்குகளுக்கான அனைத்து இணைய தளங்களும் திறக்கப் படும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கம்ப்யூட்டர் தியேட்டர் "விண் ஆம்ப்"

Posted: 27 Mar 2010 02:57 AM PDT

வீட்டினுள் தியேட்டரையும், ஆடியோ அரங்கையும் கொண்டு வந்ததில் வீடியோ பிளேயருக்கு அடுத்தபடியாகக் கம்ப்யூட்டரைச் சொல்ல வேண்டும். இதற்கு அதிகம் பயன்படும் சாப்ட்வேர் தொகுப்பு விண் ஆம்ப் ஆகும். விண்டோஸ் இயக்கத் தொகுப்புடன் மீடியா பிளேயர் என்ற ஆடியோ, வீடியோ தொகுப்பு கிடைத்தாலும், பெரும்பாலானவர்கள் இன்றும் விண் ஆம்ப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொகுப்பு கட்டணம் கட்டியும் பெறலாம் என்றாலும், இலவசமாக டவுண்லோட் செய்யக் கூடிய தொகுப்பிலேயே பல வசதிகள் இருப்பது இதற்குக் காரணமாகும்.

விண் ஆம்ப் புரோகிராமை மீடியா பிளேயர் என வகைப்படுத்துகிறோம். இங்கு மீடியா என்பது ஆடியோ மற்றும் வீடியோவினைக் குறிக்கிறது. இது இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம் என்பது இதன் சிறப்பு. இதனை www.winamp.com என்ற இணைய தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். மேலும் சில தளங்களும் இந்த புரோகிராமை இறக்கிக் கொள்ள உதவுகின்றன. எடுத்துக்காட்டாக www.download.com என்ற தளத்தைக் கூறலாம். இந்த தளம் சென்று Get Basic என்ற இடத்தில் கிளிக் செய்து பின் எந்த அளவில் வேண்டும் என்பதில் Full என்பதைத் தேர்ந்தெடுத்தால் முழு புரோகிராமும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துவிடும். இதனை பாதுகாப்பான ஒரு டைரக்டரியில் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.


அங்கிருந்தவாறே இதற்கான செட் அப் பைலை இயக்கினால் விண் ஆம்ப் புரோகிராம் பதியப்படும். இன்ஸ்டால் செய்திடும்போதே எந்த வகை ஐகான் இருக்க வேண்டும், எந்த வகை பார்மட் பைல்களை இது இயக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்து இன்ஸ்டால் செய்திடலாம். உங்கள் இன்டர்நெட் கனெக்ஷன் எப்படிப்பட்டது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தர வேண்டும். பின்னர் விண் ஆம்ப் புரோகிராமின் தோற்றத்தை முடிவு செய்திடும் "ஸ்கின்' என்பதையும் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். இன்ஸ்டால் செய்துவிட்டால் புரோகிராம் இயங்குவதற்கு ரெடியாகிவிடும்.

உங்கள் டெஸ்க் டாப்பில் விண் ஆம்ப் ஷார்ட் கட் ஐகான் ஒன்று உருவாக்கப்பட்டு பதியப்பட்டிருக்கும். இதனைக் கிளிக் செய்தால் விண் ஆம்ப் இயங்கத் தயாராயிருக்கும். முதன் முதலில் விண் ஆம்ப் தயாராகும் போது யூசர் இன்பர்மேஷன் விண்டோவினைக் காணலாம். இதில் Do not ask me again until next install என்ற இடத்திலும் Later என்பதிலும் கிளிக் செய்திடவும். இப்போது Media to Library என்பதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் பாடல்கள் மற்றும் வீடியோ பைல்கள் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டலாம். இதன் மூலம் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மீடியா பைல்கள் அனைத்தையும் கொண்ட லைப்ரேரி ஒன்றை உருவாக்க இடம் அளிக்கிறோம். இது வேண்டாம் என்றால் Do not show me this again என்பதில் கிளிக் செய்து வெளியேறலாம். விண் ஆம்ப் புரோகிராமில் Playlist Editor, Media Library and Video என்ற பகுதிகளும் உள்ளன. இவற்றைத் தேவைப்படும்போது இயக்கி விரித்துப் பார்க்கலாம்.


விண் ஆம்ப் பல வகையான பார்மட்களில் உள்ள மீடியா பைல்களை இயக்கும் திறன் கொண்டதாக உள்ளது. எடுத்துக் காட்டாக ஆடியோ என எடுத்துக் கொண்டால் .wav .mp3 போன்ற பல வகை பைல்களை இயக்கும் திறன் கொண்டது. ஒரு பாடல் பைலை பாட வைக்க வேண்டும் என்றால் அதற்குப் பல வழிகள் உள்ளன. கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்களைத் தேர்ந்தெடுத்து போல்டர்களில் உள்ள பாடல் பைலைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது அந்த பைலின் மீது இரு முறை கிளிக் செய்தால் பாடல் வடிவத்தினை ஏற்கனவே இன்ஸ்டால் செய்திடும்போது அமைத்து விட்டதால் உடனே விண் ஆம்ப் திறக்கப்பட்டு பாடல் இயக்கப்படும்.

இன்னொரு வழியும் உண்டு. பிளே லிஸ்ட் எடிட்டர் என்பதில் கிளிக் செய்து ஒரு பட்டியலைத் தயார் செய்திட வேண்டும். இதில் கிளிக் செய்தால் புதிய லிஸ்ட்டுக்கான பெயர் கேட்கப்படும். இதில் யாருக்காக அல்லது எந்த வகை பாடல்கள் என எந்த பெயரை வேண்டு மென்றாலும் வைத்துக் கொள்ளலாம். இந்த லிஸ்ட்டின் பெயரில் கிளிக் செய்து அதன் பின் பாடல்கள் உள்ள டைரக்டரியிலிருந்து இதில் நீங்கள் விரும்பும் பாடல்களைக் கொண்டு வந்து அவை பாடப்பட வேண்டிய வரிசைப்படி அடுக்கலாம். அதன் பின் எப்போது வேண்டுமானாலும் இந்த பிளே லிஸ்ட்டை திறந்து பாடல்களைக் கேட்கலாம். இந்த லிஸ்ட் பிடிக்கவில்லை என்றால் பாடல் பைல்கள் உள்ள டைரக்டரியைத் திறந்து எந்த எந்த பாடல்கள் இசைக்கப்பட வேண்டுமோ அவற்றை கண்ட்ரோல் அழுத்தி முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். செலக்ட் ஆன பின்னர் அதன் மீது ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Add to play List என்று கிடைக்கும். இதனைத் தேர்ந் தெடுத்தால் அவை பிளே லிஸ்ட்டில் சேர்க்கப்படும் ; அல்லது இசைக்கப்படும்.


விண் ஆம்ப் .MPEG மற்றும் .AVI போன்ற வீடியோ பைல்களையும் இயக்கும். வீடியோ பைல்களையும் மேலே ஆடியோ பைல்களை இயக்க குறிப்பிட்ட வழிகளிலேயே இயக்கலாம். அல்லது பைலின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Play in Winamp என்பதில் கிளிக் செய்தால் பைல் விண் ஆம்ப் புரோகிராமில் இயங்கி ஆடல் பாடலைக் காட்டும்.

திறக்கப்படும் வீடியோ விண்டோவில் ரைட் கிளிக் செய்தால் விண்டோவின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அதன் மூலைகளில் கர்சரை வைத்து இழுத்து அமைப்பதன் மூலம் அமைக்கலாம். பிளே லிஸ்ட்டில் என்ன என்ன பாடல்களைத் தொகுத்து வைத்திருக்றீர்கள என அச்சிட்டு பார்க்க விரும்புகிறீர்களா? இதில் தெரியும் Misc என்ற பட்டனை அழுத்தவும். இதில் Generate HTML playlist என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது வெப் பிரவுசர் ஒன்றின் விண்டோ திறக்கப்பட்டு அதில் பிளே லிஸ்ட்டில் உள்ள பாடல் மற்றும் ஆடல் பைல்கள் காட்டப்படும். பின் வழக்கம்போல் File மெனுவினைத் திறந்து அதில் Print என்பதைத் தேர்ந்தெடுத்து பிரிண்ட் செய்திடலாம். விண் ஆம்ப் புரோகிராமை நீங்கள் மூடிப் பின் திறக்கும்போது இறுதியாக எந்த பிளே லிஸ்ட்டை இயக்கிக் கொண்டிருந்தீர்களோ அந்த பிளே லிஸ்ட் திறந்தபடி விண் ஆம்ப் திறக்கப்படும்.


விண் ஆம்ப் புரோகிராம் முதலில் நல்சாப்ட் (Nullsoft) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பின் அதனை ஏ.ஓ.எல்.நிறுவனம் வாங்கி யது. தற்போது மீண்டும் அது நல்சாப்ட் நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப் பட்டு அதன் வசமே இருக்கிறது. விண் ஆம்ப் புரோகிராம் 1997ல் ஜஸ்டின் பிராங்கெல் என்பவரால் ஷேர்வேர் புரோகிராமாக வெளியிடப் பட்டது. அதன்பின் இதில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப் பட்டன. தற்போது ஸ்ட்ரீமிங் வீடியோ இயக்கும் வகையில் உயர்ந்துள்ளது. நல்சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாதந்தோறும் 6.5 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகையில் உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் மீடியா பிளேயர்களில் மூன்றாவது இடத்தை விண் ஆம்ப் பெற்றுள்ளது.


சிறப்பு அம்சங்கள்


* மிகச் சிறிய அளவிலான பைலாக இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். Lite 1.2 MB, Full 5 MB மற்றும் Bundle 12 MB என மூன்று அளவுகளில் இது முதலில் தரப்பட்டது. இப்போது Full– 9.08 MB, Free+ Bonus MP3 12.2.MB என்ற அளவில் இலவசமாகக் கிடைக்கிறது. கட்டணம் செலுத்தி சில கூடுதல் வசதிகள் உள்ள புரோகிராமினையும் பெறலாம்.


* விண் ஆம்ப் புரோகிராமிற்காகத் தரப்படும் ஸ்கின்கள் அனைவரும் பேசப்படும் வகையில் மற்றவற்றிலிருந்து வேறுபடும்.

* ஆடியோவில் பல வகைப் பார்மட்டுகளைக் கையாள்கிறது. MP3, WMA, M4A/AAC, OGG, FLAC MIDI, MOD, MPEG1 என்ற பார்மட்டுகளைக் கையாள்வதுடன் இவற்றிடையே மாற்றிக் கொள்ளும் வசதியையும் அளிக்கிறது. வீடியோ பைல்களைப் பொறுத்த வரை AVI,ASF,MPEG,NSV ஆகிய பார்மட்டுகளைக் கையாள்கிறது. பலவகையான இன்டர்நெட் ரேடியோ ஸ்டேஷன்களைப் பெறலாம்.

* தற்போது விண் ஆம்ப் லேட்டஸ்ட் பதிப்பாகக் கிடைக்கிறது. இதனையும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். இதில் ஐபாட் சாதனத்துடன் டேட்டாவினை இணைக்கும் வழிகள் தரப்பட்டுள்ளன. புதிய ஐ –ட்யூன் லைப்ரேரியை இறக்கிப் பயன்படுத்தலாம். புதிய ஆன்லைன் சர்வீஸ் காலரி தரப்பட்டுள்ளது.


------------------- நன்றி -------------------

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வரவேற்கும் அபாயங்கள்

Posted: 28 Mar 2010 04:21 AM PDT

அபாயங்கள் நம்மை வரவேற்கின்றனவா? அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா! என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை இரண்டும் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நம் வாழ்வோடு இரண்டறக் கலந்த கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள் குறித்து, அறிந்து அதற்கான தற்காப்பு வழிகளை நாம் மேற்கொண்டிருந்தாலும், சில அபாயங்களை நாம் அறியாமலேயே நாம் வரவேற்று மாட்டிக் கொள்கிறோம். கிராமப் புறங்களில் வேலியில் போகும் ஓணான் என்று ஒரு பழமொழி தொடங்கும். அந்த வகையில் தான் நாம் நம்மை அறியாமலேயே கம்ப்யூட்டரில் பல அபாயங்களை வரவழைத்துக் கொள்கிறோம். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

1. அடோப் பலவீனங்கள்: மைக்ரோசாப்ட் புரோகிராம்களுக்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அடோப் நிறுவன அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது உறுதி. பிளாஷ் (Flash) அக்ரோபட் ரீடர் (Acrobat Reader) அல்லது ஷாக்வேவ் (Shock Wave) என ஏதாவது ஒன்றினை நாம் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கிறோம். கம்ப்யூட்டரைக் கெடுக்கும் மால்வேர் தொகுப்புகளால் இவை எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் பழைய பதிப்புகளை நீங்கள் பயன்படுத்திவந்தால், அவற்றில் உள்ள பலவீனமான இடங்களைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம்கள் நுழைவது எளிது என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அப்டேட் செய்யப்பட்ட பதிப்புகளில் தான் இந்த பலவீனமான இடங்கள் சரி செய்யப்பட்டு இருக்கும். பழைய பதிப்புகள் எனில் அவை மால்வேர் புரோகிராம்கள் எளிதாக நுழைய இடம் தருவதாக அமையும். இதில் இன்னொரு வகை பிரச்னை என்னவென்றால், இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், உங்கள் அடோப் பிளாஷ் பிளேயர் பழையதாக உள்ளது. அப்டேட் செய்திட இங்கே கிளிக் செய்திடுங்கள் என்று ஒரு செய்தி வரும். கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் முடங்கிப் போய்விடும். (என் சொந்த அனுபவம் இது). அல்லது பிரச்னை இருப்பதாகவும், அது குறித்த விளக்கத்தினையும், தீர்வையும் இந்த பைலில் பார்க்கலாம் என்று ஒரு பி.டி.எப். பைலுக்கான லிங்க் தரப்படும். கிளிக் செய்தால் அவ்வளவுதான். மீண்டும் ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்திடும் அளவிற்குக் கொண்டு செல்லும்.
இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? அடோப் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டு கிடைப்பதாக இருந்தால், அடோப் நிறுவனத்தின் தளம் சென்று அந்த முயற்சியில் ஈடுபடுங்கள். வேறு தளங்கள் தரும், குறிப்பாக பாப் அப் விண்டோக்கள் தரும் லிங்க் மூலம் செல்ல வேண்டாம். அடோப் தளத்தைப் பார்த்து அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.

2. பயர்பாக்ஸ் ஆட் ஆன்: பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்பு புரோகிராம்கள் அபாயத்திற்கான அழகான திறவுகோல்களாகும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஆக்டிவ் எக்ஸ் ப்ளக் இன் போல மோசமானது இல்லை என்றாலும், ஆபத்தை விளைவிப்பதில் இவையும் சளைத்தவை இல்லை. பல மால்வேர் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் பிரவுசரின் முதன்மை செயல்பாட்டில் சென்று வழி தேடாமல், ஆட் ஆன் தொகுப்புகளைத்தான் பார்த்து நுழைகின்றன.

பிளாஷ் பிளேயர், ஆன்லைன் மியூசிக் பிளேயர் என ஏதாவது ஒன்றுக்கான ஆட் ஆன் என்ற செய்தியுடன் இவை உங்களது கவனத்தை ஈர்க்கும். சரி எனக் கிளிக் செய்தால் மாட்டிக் கொள்வோம்.

இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்புவது சிரமம் தான். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை தரும் வசதிகளும் பிரமாதமாய் இருக்கின்றன. முதலில் பயன்படுத்துகையில் இவை எந்த தீங்கும் விளைவிக்காமல் தான் இருக்கின்றன. பின் இவற்றைக் கண்காணித்து மால்வேர் புரோகிராம்கள், இவற்றைப் பயன்படுத்தி நுழைகின்றன.
இவற்றிலிருந்து தப்பிக்க பயர்பாக்ஸ் பிரவுசரை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல், ஏதேனும் பிளாஷ் டிரைவ் மூலம் போர்ட்டபிள் பிரவுசரைப் பயன்படுத்தலாம்.

3. மேக் சிஸ்டம்: பலர் இது போன்ற வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகள் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழையாது என்று எண்ணுகின்றனர். இது ஒரு காலத்தில் உண்மையாக இருந்தது. ஏனென்றால் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், வைரஸ்களைப் பரப்புபவர்கள் மேக் பக்கம் கவனத்தைச் செலுத்தவில்லை. இப்போது நிலை மாறிவிட்டது. மேக் சிஸ்டம் வழியாகவும் மால்வேர்கள் பரவத் தொடங்கிவிட்டன. இந்த சிஸ்டத்திலும், பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை அவ்வப்போது அப்டேட் செய்திட்டால், மால்வேர்கள் நுழைவது தடுக்கப்படலாம்.

4. ஆப்பிள் சாதனங்கள்: விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் நாம் ஆப்பிள் நிறுவன சாதனங்களைப் (சாப்ட்வேர்கள்) பயன்படுத்தி வருகிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். இவற்றையும் மற்ற அப்ளிகேஷன்கள் போலவே நாம் கண்காணிக்க வேண்டும். பல கம்ப்யூட்டர்களில் குயிக் டைம் மற்றும் ஐ ட்யூன்ஸ் ஆகிய ஆப்பிள் நிறுவன சாப்ட்வேர்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் குயிக் டைம் சாப்ட்வேர் தொகுப்பைப் பயன்படுத்தி பல வைரஸ்கள் பரவியது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இது அதிகம் இருந்தது. இதனை உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது இதற்கான தடுப்பு அப்டேட் பைல்களைத் தானாகவே அனுப்பி சரி செய்தது.எனவே அப்டேட் செய்வதுதான் இங்கும் பாதுகாப்பு வழியாகும்.

5. குழப்பும் யு.ஆர்.எல்.கள்: மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்க்குகள் வழியாக மால்வேர்கள் நுழைவது தற்சமயம் அதிகரித்து வருகிறது. சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://longurl.org/ இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக் கூடியதா என அறிந்து கொள்ளலாம்.

6. டி.என்.எஸ். ஹைஜாக்: எண்களில் அமைந்துள்ள முகவரிகளை, நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களில் அமைக்கும் பணியினை டி.என்.எஸ். சர்வர்கள் மேற்கொள்கின்றன. இந்த மாற்றத்தில் ஈடுபடுகையில் ஏதேனும் ஒரு மால்வேர் புரோகிராம், டி.என்.எஸ். சர்வர் தர இருப்பதனை ஹைஜாக் செய்து, தன்னுடைய மோசமான லிங்க்கைத் தரும் வேலை தற்போது நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்ப நாம் எந்த முயற்சியும் எடுக்க முடியாது. டி.என்.எஸ். சர்வர்களை இயக்குபவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.

மேலே சொன்னவை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டிய கம்ப்யூட்டர் சாதனங்கள் தரும் தீய விளைவுகளாகும். இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. எனவே கூடுதல் கண்காணிப்பும், மேலே பரிந்துரைக்கும் வழிகளுமே பாதுகாக்கும் கவசங்களாக இருக்கும்.



------------------- நன்றி -------------------

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நியூசிலாந்தில் இந்திய டாக்சி டிரைவர் குத்திக் கொலை


நியூசிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தப் போவதாக நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கூறியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஹிரென் மோகின் (39), 6 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ஆக்லாந்து பகுதியில் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

டாக்சி டிரைவராக வேலை செய்துவந்த இவர், மவுன்ட் ஈடன் பகுதியில் நேற்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டார். கட்டணம் தொடர்பாக பயணியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கழுத்து மற்றும் உடலின் பல பகுதிகளில் கத்தியால் குத்திய மர்ம நபர், ஹிரெனின் காரை அருகில் உள்ள மரத்தில் மோதவிட்டு விபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்.

பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே இச்சம்பவத்துக்கு நியூசிலாந்தின் டாக்சி உரிமையாளர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டாக்சி டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், டாக்சிகளில் பாதுகாப்பு கெமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து பிரதமர் ஜான் கீ கூறுகையில்,

"கடந்த 14 மாதங்களில் டாக்சி டிரைவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் 2 முறை நடந்துவிட்டன. அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிடாது. டாக்சிகளுக்கான கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு நிச்சயம் பரிசீலிக்கும்' எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நியூசிலாந்திலும் இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தல் வெற்றியை அடுத்து இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் பிரிகேடியர் ஒருவர் பொலிஸ் காவலில் ; மேலும் பலர் கைதாகலாம்


செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இட மாற்றத்திற்குள்ளான இராணுவ அதிகாரிகளில் பலர் யுத்தத்தில் வெற்றி கண்ட இராணுவத் தளபதியும் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர்களாவர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு, தமக்கு விசுவாசமான பல சிரேஷ்ட அதிகாரிகள் சேவையிலிருந்து விலக்கப்பட அல்லது இடை நிறுத்தி வைக்கப்பட இருக்கிறார்கள் என்று தாம் கேள்விப்படுவதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்திருந்த வேளையில் இந்த திடீர் இட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அம்பாறை இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கமாண்டர் பிரிகேடியர் துமிந்த கெபெற்றிவலான வெள்ளிக்கிழமை புலன் விசாரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெனரல் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரிகேடியர் கெபெற்றிவலான இராணுவ உதவியாளராக சேவையாற்றி வந்தார். மேலும் இளைப்பாறிய 20 அதிகாரிகளும், சிப்பாய்களும் ஏற்கனவே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள்.

தற்போதைய மாற்றங்களில் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் பாதுகாப்பு அமைச்சில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தார்.

ஏற்கனவே பாதுகாப்புப் படையினரின் பிரதானியாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டு கூட்டுத் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தொண்டர் படைப் பிரிவின் கமாண்டர் ஆக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே பாதுகாப்புப் படையினரின் பிரதம அதிகாரியின் அலுவலகத்தில் பொது அதிகாரிகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இராணுவ நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அருணா ஜயதிலக தற்போது தொண்டர் படை கமாண்டர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய மாற்றங்களில் பிரிகேடியர் ஏ. ரி. டீ. சற் அபேசேகர நிர்வாக பிரிவுக்கான புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தலைமையகக் காரியாலயத்தில் பொது பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்ஷ பாதுகாப்பு படையினரின் பிரதம அதிகாரி அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாஸ்டர் ஜெனரல் ஓர்டினன்ஸாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அதுல ஜயவர்த்தன முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகள் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முந்திய பதவிக்கு மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்போத நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் கிழக்கு பிராந்திய பாதுகாப்பு படைகள் கமாண்டராக பணியாற்றி வந்தார். இந்தப் பதவிக்கு தற்போது பிரிகேடியர் சுசில் உடுமல்கல நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் எல். ஏ. டி. அமரதுங்க 59 ஆவது படைப் பிரிவின் கட்டளையிடும் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த காலாட்படை தளபதி பதவிக்கு இதுவரை யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைகள் கமாண்டராக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் எல். பி. ஆர். மார்க்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காலாட் படை தளபதியாக தற்போது மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க வகித்து வந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைகள் கமாண்டர் பதவிக்கு பிரிகேடியர் சந்தன ராஜகுரு நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பாதுகாப்பு படைகள் கமாண்டர் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா இராணுவத்தின் 11 ஆவது பிரிவு ஜெனரல் ஒபீஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் 65 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜனக வல்கம பாதுகாப்பு அமைச்சில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் பதவிக்கு பிரிகேடியர் குமார் ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

53 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் மேஜர் சாகி கலகே இராணுவ தலைமைக் காரியாலயத்தில பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ராஜித சில்வா பாதுகாப்புப் படைகள் பிரதம அதிகாரி அலுவலகத்திலிருந்து விலக்கப்பட்டு 58 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

செய்தியறிக்கை

செய்தியறிக்கை
ஐ.நா தலைமை செயலர் பான் கீ மூன்
ஐ.நா தலைமை செயலர் பான் கீ மூன்

போரில் பாலியல் பலாத்காரம் குறித்து ஐ.நா தலைமை செயலர் கவலை

போரில் பாலியல் பலாத்காரமும் ஒர் ஆயுதமாக பயன்படுத்துவதை கண்டு தான் கடும் கோபமுற்றுள்ளதாக ஐ.நா தலைமை செயலர் பான் கீ மூன் ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் இடையே தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவில் ஆப்ரிக்க ஒன்றிய கூட்டத்தில் உரையாற்றிய அவர், மோதல் இடம்பெறும் இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக விசேட தூதர் ஒருவரை தான் நியமிக்கவுள்ளதாகவும் பான் கீ மூன் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய கமிஷனின் முன்னாள் துணை தலைவர் மார்காட் வால்ஸ்ட்ராம் இந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஆப்ரிக்க அரசுகளை ஜனநாயக மரபுபடி அல்லாமல் மாற்றும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது குறித்து தனக்கு கவலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவராக கடாஃபி நீடிக்கப் போவதில்லை

கடாஃபி
கடாஃபி

ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவராக தொடர்ந்து நீடிப்பதற்கு லிபிய தலைவர் முவாமர் கடாஃபி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஆப்ரிக்க ஒன்றியத்தின் புதிய தலைவராக மலாவியின் பிங்கு வா முதரிகா ஆப்ரிக்க ஒன்றிய நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆப்ரிக்க ஒன்றிய தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு கர்னல் கடாஃபி மிகவும் தயங்கியதாகவும், இதனால் மற்ற ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் இடையே கோபம் ஏற்பட்டதாகவும் கூட்டம் நடைபெறும் அடிஸ் அபபாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.


யெமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் மோதல்

யெமன் வரைப்படம்
யெமன் வரைப்படம்

யெமனின் வடக்கில் இருக்கும் இரு பிராந்தியத்தில் நடைபெற்ற மோதலில் இருபது ஷியா கிளர்ச்சியாளர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக யெமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யெமன் இராணுவம் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டால், தாங்கள் அரசாங்கத்தின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்த ஒரு சில மணிநேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆனால், கிளர்ச்சியாளர்களின் நிபந்தனைகளை தாங்கள் ஏற்பதில்லை என கூறி, கிளர்ச்சியாளர்களின் கூற்றை அரசாங்கம் நிராகரித்தது.

ஹவுதீஸ் என்று அழைக்கப்படும் இந்த கிளர்ச்சியாளர்கள் தங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் எவ்விதமான உபயோகமான அரசியல் தீர்வையும் பெற முடியாது என்று கூறியிருக்கின்றனர்.


ஹெய்ட்டியில் குழந்தைகளை எடுத்து செல்ல முயன்ற அமெரிக்கர்கள் தடுத்து வைப்பு

ஹெய்ட்டி குழந்தைகள்
ஹெய்ட்டி குழந்தைகள்

ஹெய்ட்டியில் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் முப்பது இளம் சிறார்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல முயன்ற அமெரிக்கர்கள் குழு ஒன்றை ஹெய்ட்டி அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர்.

இந்த சிறார்கள் நிலநடுக்கத்தால் அனாதையானர்கள் என்பதற்கானா ஆதாரமோ அல்லது வெளிநாட்டு கொண்டு செல்வதற்கான அனுமதியோ இந்த பத்து அமெரிக்கர்களிடம் இல்லை என ஹெய்ட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் அமெரிக்காவில் உள்ள தேவாலயம் ஒன்றை சேர்ந்தவர்கள் என்று கூறும் இந்த குழுவினர், அண்டைய நாடான டோமினிகன் குடியரசில் தாங்கள் அனாதை ஆசிரமம் ஒன்றை நிறுவ திட்டமிடுவதாக தெரிவித்துள்ளனர்.

தத்து எடுப்பது தொடர்பில் ஹெய்ட்டி புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பெற்றோர் இல்லாத குழந்தைகளை கடத்தி அவர்களை தத்தெடுப்பவர்களுக்கு விற்பது, வீட்டு வேலை செய்ய விற்பது அல்லது பாலியல் அடிமைகளாக விற்பது போன்றவை இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்த பின்னர் இந்த கட்டுப்பாடுகள் வந்துள்ளது.

செய்தியரங்கம்
இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

காலக்கெடு முடிவடைந்தும் முகாம்களில் மக்கள்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்த காலத்தில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசின் இடைத்தங்கல் முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படி தங்கியவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இந்தக் காலக்கெடு ஞாயிற்றுகிழமையுடன் முடிவடைந்துள்ள நிலையில் இன்னமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பல முகாம்களில் தங்கியுள்ளனர். தாங்கள் உடனடியாக தங்களது இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மக்கள் முன்னர் தங்கியிருந்த பகுதிகளில் இன்னமும் மிதிவெடிகளை முழுமையாக அகற்றும் பணி முடிவடையாததே அவர்களை மீள்குடியேற்ற முடியாததற்கு காரணம் என்று இலங்கை அரசின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.

தாங்கள் எதிர்பார்த்ததை விட மிதிவெடி அகற்றும் பணி மெதுவாகவே நடைபெற்று வருகிறது என்றும், மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்றும் அவர் கூறுகின்றார்.

உயர் பாதுகாப்பு வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவம் அமைச்சர் தெரிவிக்கிறார்.


யாழ்குடாவில் அழுத்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் வரைப்படம்
யாழ்ப்பாணம் வரைப்படம்

இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் தங்களது எதிர்காலத்தையும் வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு சமூக ஆர்வலர்களால் அழுத்தக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் தலைமகள் மற்றும் போராளிக் குழுக்களின் தீர்மானங்களே தம் மீது திணிக்கப்பட்டதாகவும் அப்படியான செயற்பாடுகள்தான் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்று இந்த அழுத்தக் குழுவினர் கூறுகிறார்கள்.

இந்தக் குழுவில் எதிர்வரும் காலத்தில் முஸ்லிம் மக்களையும் இனைத்துக் கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு பகுதியில் சிறுபான்மையினர் தொடர்பான அரசியல் மற்றும் அபிவிருத்தி பணிகளில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது சமூக மட்டக் குழுக்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோருகிறார்கள்.

இந்த அழுத்தக் குழுவில் பல்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளார்கள். வடபகுதியில் இருக்கும் அனைத்து மாவாட்டங்களில் இருந்தும் பலர் இந்த அழுத்தக் குழுவில் இணைந்துள்ளனர்.

யாழ்மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் தவரட்ணம் அவர்களின் தலைமையில் இந்த அழுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


தேர்தல் முடிந்தும் தொடரும் அச்சுறுத்தல்கள் - த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை
டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடை பெற்று முடிந்துள்ள போதிலும் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் தமது கூட்டமைப்பைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை கூறுகின்றார்.

இதன் காரணமாக தேர்தல் காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய இரண்டு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உட்பட 4 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்திற்கு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியுள்ள இவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் இது வரை எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை

தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் இதனை தாம் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமது மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவொன்றினாலே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.


தமிழக முதல்வருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்

இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர் மேனன் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது போன்ற விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பான மரண சான்றிதழ் இந்தியாவுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை என இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை இதுவரை கையளிக்கவில்லை: இந்திய புலனாய்வு பிரிவு


இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கையளிக்கப்படவில்லை என்று இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று இலங்கை அரசு அறிவித்தவுடன் அவரது இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் ஊடாக இலங்கை அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது இறப்புச் சான்றிதழ் இதுவரை சி.பி.ஐ.க்கு கிடைக்கவில்லை என்றும் மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

அதில்,பிரபாகரன் இறந்ததாக தகவல் வந்ததை அடுத்து உரிய வழிகளில் இலங்கைக்கு தகவல் அனுப்பி அவருடைய இறப்பு சான்றிதழை கேட்டோம். இந்திய வெளியுறவு துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரை பிரபாகரன் மரண சான்றிதழை இலங்கை அரசு தரவில்லை. இதற்காக இன்று வரை காத்திருக்கிறோம். மரண சான்றிதழை பெறுவதற்கு அதற்குரிய வழிமுறைகளின்படி தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த தடா கோர்ட்டில் அனுமதி பெற்று தேவையான விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

இதில் மரண தண்டனை பெற்ற பேரறிவாளன், சுகந்த ராஜா, ஸ்ரீஹரன், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர்.

மற்ற குற்றவாளிகள் ரவிச்சந்திரா, பிரகாசம் ஆகியோர் மதுரை சிறையில் உள்ளனர் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் பொட்டு அம்மானும் சேர்க்கப்பட்டார்.

இந்த இருவரும் பிடிபடாததால், இவர்கள் இருவரும் வழக்கிலிருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு தனி வழக்காக மாற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை கூறியது. இதையடுத்து வழக்கை முடிக்க மரணச் சான்றிதழைக் கோரியுள்ளது இந்திய அரசு. ஆனால் இதுவரை அதுகுறித்து இலங்கை அரசு பதிலளிக்காமல் மெளனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ்மக்களை சாக்கடைக்குள் வீழ்த்திய சம்பந்தன் கோஸ்டியினர்… -யாழ் மயில்வாகனம்


வடக்குகிழக்கு தமிழ்மக்களை தனிப்பட்ட நலன்களுக்காக சாக்கடைக்குள் தள்ளி விட்டிருக்கிறார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். பிரபாகரன் எப்படி கடைசியாக மாவிலாறு அணையைப்ப+ட்டி தன்தலையிலும் தமிழ்மக்களின் தலையிலும் மண்ணை அள்ளிப்போட்டு எல்லாவற்றையும் அழித்து தானும் சரணாகதி அடைந்து அழிந்து போனாரோ அதேபோல சம்பந்தனும் எவ்வித சாணக்கியமும் இல்லாமல் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் வடக்குகிழக்கு மக்களை சாக்கடைக்குள் வீழ்த்தி விட்டிருக்கின்றார். எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் ஏகாதிபத்தியவாதிகளிடம் சரணடைந்திருக்கிறார் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில் எவரையும் தமிழர்கூட்டமைப்பு ஆதரிக்காமல் தமிழர்தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டுமெனவும் அல்லது தமிழ்மக்கள் விரும்பிய வேட்பாளருக்கு தேர்தலில் வாக்களிக்குமாறு அறிக்கை விடுவது தான் தமிழ்மக்களின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும் எனவும் யார் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வருகிறார்களோ அவர்களுடன் ஓரு உறவை ஏற்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் தெரிவித்த ஆலோசனைகளுக்கு சம்பந்தனும் சுரேஸ்பிறேமச்சந்திரனும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். இதனால் உடனடியாக இப்போது எந்த முடிவையும் எடுக்கமுடியாது எனக் கூட்டத்தை ஒத்திவைத்தாராம் சம்பந்தன். இதனால்தான்; கூட்டமைப்பிற்குள்; முரண்பாடுகள் ஏற்படக் காரணமாயிருந்ததாம்.

சம்பந்தனுக்கும் சுரேஸ்பிறேமச்சந்திரனும் சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்து விட்டார்கள் என்பதை அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து அறியக்கூடியதாகவும் இருந்தது எனவும் தமிழ்மக்களையும் ஏனைய கூட்டமைப்பு எம்.பிக்களையும் ஏமாற்றுவதற்காகவே. யாரை ஆதரிப்பது என்ற முடிவு இன்னும எடுக்கப்படவில்லை என சம்பந்தன்கோஸ்டி நாடகம் ஆடியதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த 50வருடங்களாக தமிழ்மக்களின் நலன்களில் இருந்து முடிவுகள் எடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு தமது நலன்களுக்காக எடுத்த முடிவுகள்தான் தமிழ்மக்களை இன்று அழிவுக்குள் தள்ளி விட்டிருக்கின்றது. இந்தத் தேர்தலிலும் சம்பந்தன்கோஸ்டி எடுத்த முடிவானது ஓரு இனத்தையே பாதிக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றது. இந்த சம்பந்தன் கோஸ்டியினர் தேர்தல் காலங்களில் வருவார்கள் பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று உல்லாசமாக காலத்தை கழிப்பார்கள். இவர்கள் வாக்குப் போடச்சொன்ன சரத்பொன்சேகாவும் ஒருவேளை அமெரிக்காவுக்கோ அல்லது பிரிட்டனுக்கோ சென்று செட்டில் ஆகிவிடுவார். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியவர்கள் வடக்குகிழக்கு வாழ் மக்கள் தான்.

மகிந்தாவை மாற்ற வேண்டும் என்று அடம்பிடித்த சம்பந்தன் அதற்காக ஏன் சரத்பொன்சேகாவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டது தமிழ்மக்களின் நலனுக்காக அல்ல என்பதை தமிழ்மக்கள் இப்போது நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். சரத் பொன்சேகாவினால் சிங்களத்தில் வெளியி;டப்பட்ட தேர்தல் பிரசுரத்தில் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததை கண்டிக்காமல் கண்டுகொள்ளாமல்; கண்ணை மூடிக்கொண்டு சரத் பொன்சேகாவுக்கு வாக்களியுங்கள் என்று தன்நலத்திற்காக ஆதரித்து தமிழ்மக்களை இப்போது சாக்கடைக்குள் வீழ்த்தி விட்டனர் சம்பந்தன் கோஸ்டியினர்..!!
-யாழ் மயில்வாகனம்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நபரும் கைது செய்யப்படுவார் - அமைச்சர் கெஹலிய


நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படும் எந்த நபர் என்றாலும் அவரை கைது செய்ய நேரிடும் என அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேசத்தின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எஸ்.எம்.எஸ் மூலம் அல்லது வேறும் வழியிலான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் எந்தவொரு நபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கிய காரணிகளின் அடிப்படையிலேயே லங்கா பத்திரகை சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்படுவோர் தொடர்பில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வடக்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 7 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை


வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் ஏழு லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக வடமாகாணத்தில் 988334 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டடிருந்த போதிலும், 292812 பேர் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 721359 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 185132 பேரும் வன்னி மாவட்டத்தில் 266975 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 107680 பேர் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 1989ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது என பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. 1989ம் ஆண்டில் பதிவு செய்துகொண்ட பலர் புலம்பெயர்ந்தும் மரணித்தும் இருக்கலாம் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும் - வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து


ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கி ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு செல்ல வேண்டுமென ஜனாதிபதி ஆலோசகரும் புதிய இடதுசாரி முன்னனியின் செயலாளருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவி வந்த ஐயப்பாடு இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்பட்டுள்ளமையால் அனைத்து இன மக்களிடையேயும் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் அவசியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அரசுடன் இணைந்து செயற்படும் வகையில் சிறுபான்மை மக்கள் மத்தியில் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனவும் இதனூடாக ஜனாதிபதி மஹிந்தவின் அரசுக்கும் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கும் இடையிலான இடைவெளியை மட்டுப்படுத்தி இன ஐக்கியமும் புரிந்துணர்வும் ஏற்படுத்தப்படுவது அவசியமெனவும் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு உட்பட மலையகத்தின் பல பகுதிகளிலும் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதை தவிர்த்திருந்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தல் முறைக்கேடுகள் குறித்து விசாரிப்பது அவசியம் -ஐரோப்பிய ஒன்றியம்.



இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளில் அரசாங்கம் மாற்றம் செய்து விட்டதாகவும் இத்தேர்தல் முடிவை ஏற்க முடியாதென்றும் எதிரணி சார்பாக போட்டியிட்ட சரத்பொன்சேகா தெரிவித்திருந்தது தெரிந்ததே. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணும்பணி ஆரம்பித்தவுடனேயே சரத்பொன்சேகா ஜனாதிபதியை கொல்லும் சதியில் ஈடபட்டுள்ளார் என அரசு ஒரு புரளியை கிளப்பிவிட்டு சரத்பொன்சேகா வெளியில் நடமாட முடியாதபடி ஹோட்டலுக்குள்ளேயே முடக்கியது இதற்காக 300-400 படையினரைக் கொண்டு சரத் பொன்சேகாவை சுற்றி வளைத்திருந்ததும் தெரிந்ததே. இவ்வாறு தம்மை முடக்கி வைத்து விட்டு தமக்கு விழுந்த வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ தனக்காக மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டியுள்ள சரத்பொன்சேகா இத்தேர்தல் முடிவை ரத்துச் செய்ய வேண்டும் என கேட்டிருந்தார் இந்நிலையில் இலங்கை தேர்தல் முறைகேடுகள் குறி;த்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். ஐ.ஓ. வெளிநாட்டு கொள்கை அதிகாரி கந்தரின் ஆஷ்டன் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளதோடு தோற்கடிக்கப்பட்ட எதிர்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகள் மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து பணியாற்றத் தயார் என்றாலும்கூட தேர்தலின் போது தேர்தல் கண்காணிப்பாளர்களால் புகாரளிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையான நிகழ்வுகள் குறித்து தாம் கவலை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்படி முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் பிரச்சார பணியாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பெரும்பான்மையோரின் அங்கீகாரத்துடனேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு


இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்டபோதே மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அச்செவ்வியில் அவர் மேலும் கூறுகையில்:

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடி யாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 ஆவது அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான் மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் இருந்தனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன் சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர் இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்ற சரத் பொன்சேகாவின் குற்றச்சாட் டுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். "இக்குற்றச்சாட்டுக்கு அவர் நீதி மன்றத்தில் பதில் தேடிக்கொள்ள முடியும். பிரஜைகளின் 58 சதவீத வாக்குகள் கிடைத் திருப்பது போதிய ஆதாரமாகும். அந்தளவு வாக்குகள் முறைகேடுகள் மூலம் எப்படி கிடைக்கும்'' என ஜனாதிபதி கேள்வி கூறியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜே.வி.பி.யின் கோரிக்கை ஐ.தே.க.வினால் நிராகரிப்பு


நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தினோம். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு எம்மைக் கோருவது வேடிக்கையானதொரு விடயம்.

இந்த நாட்டில் சக்திவாய்நத கட்சியாகவும் வாக்குப் பலமிக்கதாகவும் எமது ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. எமது யானைச் சின்னம் கூட மக்கள் மனதில் பதிந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க உட்பட மேலும் பலர் எமது கட்சியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆகவே இவர்களை விட்டு வெளியே வேறு யாரையும் தேட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அது போன்றே எமது கட்சிச் சின்னத்தை நாம் அழிந்து போக விட மாட்டோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி அதனுடன் கூட்டுச் சேரும் கட்சிகளுடன் இணைந்து யானைச் சின்னத்திலேயே போட்டியிடும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எம்முடன் இணைந்து போட்டியிடும் கட்சிகளுக்குச் சில இடங்களை விட்டுக் கொடுப்பது என்பது வேறு விடயம்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதனைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் ஜே.வி.பி. க்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. தெற்கில் அவர்களது கோட்டைகள் சரிந்துள்ளன.

அவர்களது சரிவை எமது கட்சியே இன்று சமப்படுத்தியுள்ளது இந்த உண்மையை அவர்கள் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. எம்மைக் கோருவதானது அவர்களது தோல்வியை மறைக்க எம்மைப் போர்வையாகப் பயன்படுத்தும் ஒரு முயற்சியே இது ஒரு போதும் நடக்காது என்றும் கூறினார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சுதந்திரதினத்தையொட்டி புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களின் கண்காட்சி!


பெப்ரவரி 4ம் திகதி இலங்கையில் 62வது சுதந்திரதினம் இடம்பெறவுள்ளது அதனையொட்டி இடம்பெறும் கண்காட்சியில் தாம் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கண்காட்சியில் வைக்கத் தீர்மானித்துள்ளனர் படையினர் தியட்ட கிருல கண்காட்சி கண்டி பல்லேகலவில் வரும் 4ம்திகதி அன்று தொடங்கி 7நாட்கள் நடைபெறவுள்ளது இக்கண்காட்சியில் முப்படையினர் மற்றும் பொலிஸார் தமது ஒட்டுக்குழுக்கள் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கண்காட்சிக்கு வைக்கவுள்ளனர் இந்த கண்காட்சியானது 51ஏக்கர் தளத்தில் இடம்பெறவுள்ளது அதில் சுமார் 9ஏக்கரை பொலிஸ_ம் படையினரும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் கடந்த மேமாதம் போர் ஓய்வுக்கு வந்தபின்னர் நடக்கும் முதலாவது கண்காட்சி இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

செய்தியறிக்கை


ஏவுகணைகள்
ஏவுகணைகள்

அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை - சீனா

தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிக்க போவதாக சீனா கூறியுள்ளது. தாய்வானுக்கு ஆறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதை தொடர்ந்து சீனா இதனை தெரிவித்துள்ளது.

பீஜீங்கில் இருக்கும் அமெரிக்க தூதரை வரவழைத்து இந்த முடிவால் முக்கியமான பல விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா கூறியுள்ளது. அத்தோடு இராணுவ விஜயங்களை நிறுத்துவதாகவும் சீனா கூறியுள்ளது. இந்த இராணுவ விஜயங்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன் இருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

இறுதியாக தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் தடை விதிக்கப் போவதாகவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த தடைகளால் அந்நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

தாய்வான் பிரிந்து சென்ற மாகாணம் என்று கருதும் சீனா, அமெரிக்கா பிடிவாதமாக தவறான முடிவை எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளது.


டோகோ கால்பந்து அணிக்கு தடை

டோகோ அணியினர்
டோகோ அணியினர்

அங்கோலாவில் நடைபெற்று வரும் ஆப்ரிக்க கால்பந்து கோப்பை போட்டியில் இருந்து டோகோ விலகியதற்காக அடுத்ததாக நடைபெறவுள்ள இரு ஆப்ரிக்க கால்பந்து கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு டோகோ அணிக்கு தடை விதிப்பதாக ஆப்ரிக்க கால்பந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது நடைபெற்று வரும் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக டோகோ அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதனை அடுத்து டோகோ அணி போட்டியில் இருந்து விலகியது.

அங்கோலாவின் கபிண்டா பகுதியில் டோகோ அணியின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து வீரர்கள் விரும்பினாலும், பாதுகாப்பு காரணங்களால் தன்னுடைய வீரர்கள் போட்டியில் பங்கேற்க்க மாட்டார்கள் என்று டோகோ அரசு கூறியது.


வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்

ஆளில்லா விமானம்
ஆளில்லா விமானம்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இராணுவ சோதனைச்சாவடி அருகே தற்கொலைத்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தப்பட்சம் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும், இந்த சம்பவத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கின்ற பஜூர் பழங்குடியின பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் ஆயுததாரிகளின் வளாகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சோமாலியாவில் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை -சோமாலிய அதிபர்

ஆயுததாரிகள்
ஆயுததாரிகள்

சோமாலியாவின் தென்பகுதியில் பெரிய நிலப்பரப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக இவ்வருடம் பெரும் இராணுவ நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கப் படைகள் தயாராக இருப்பதாக சொமாலிய அதிபர் ஷேக் ஷரீஃப் அகமது கூறியுள்ளார்.

தனது ஆட்சியின் முதலாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கம் அல் ஷபாப், அரசாங்கம் போன்ற பயங்கரவாதக் குழுக்களை தோற்கடித்து, சொமாலியாவில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் என்று அரசு வானொலியில் உரையாற்றிய அதிபர் சூளுரைத்துள்ளார்.

இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் இஸ்லாத்தைக் காப்பதற்காகப் போராடவில்லை; மாறாக வெளிநாட்டு நலன்களைக் காப்பதற்காகவே செயலாற்றுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் மொகதிஷுவில் கடுமையான மோதல்கள் நடந்துவந்ததன் காரணமாக நேற்றைய அதிபரின் உரை இன்றுதான் வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருந்தது.

செய்தியரங்கம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மீது குற்றச்சாட்டு
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மீது குற்றச்சாட்டு

'லங்கா' வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘லங்கா’ வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை குறை கூறியது தொடர்பாக இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெள்ளிகிழமையன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.


ஐ.பி.சி.சி குழுவின் அறிக்கைகள் குறித்து விமர்சனம்

ஐ.பி.சி.சி தலைவர் ராஜேந்திரா பச்சோரி
ஐ.பி.சி.சி தலைவர் ராஜேந்திரா பச்சோரி

உலக பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசாங்கங்கள் இடையிலான நிபுணர் குழு - ஆங்கிலத்தில் சுருக்கமாக ஐ.பி.சி.சி. என்று அழைக்கப்படும் இக்குழுவானது, தமது அறிக்கைகளுடைய விஞ்ஞான அடிப்படையின் ஆதாரம் தொடர்பில் மேலும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

தென் அமெரிக்காவின் அமேஸான் மழைக்காடுகளுக்கு பருவ நிலை மாற்றத்தால் எழுந்துள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஐ.பி.சி.சி. வழங்கிய ஆதாரங்கள், ஒழுங்கான ஆராய்ச்சிக் முடிவுகளில் இருந்து எடுக்கப்படாமல், சுற்றாடல் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெறப்பட்டுள்ளன என்று தற்போது விபரங்கள் வெளியாகியுள்ளன.

இமாலயப் பனி ஏரிகள் அடுத்த நாற்பது ஆண்டுகளில் உருகிவிடும் என்று தாம் எச்சரித்திருந்ததும் தவறு என்று ஐ.பி.சி.சி. சென்ற வாரம் ஒப்புக்கொள்ள நேர்ந்திருந்தது.

பருவநிலை மாற்றத்தின் விளைவாக அமேஸான் காடுகள் வேகமாக அழியும் என்று தெரிவதாக எச்சரித்து ஐ.பி.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வன உயிர் நிதியம் என்ற தொண்டு நிறுவனத்தின் கூற்றுக்களே இடம்பெற்றுள்ளன என்பதை மழைக்காடுகள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தற்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இமாலய பனி ஏரிகள் விரைவில் உருகும் என்ற தவறான எச்சரிக்கையின் பின்னணியிலும் இந்த தொண்டு நிறுவனம் தந்த விபரங்களே அடங்கியுள்ளன.

ஐ.பி.சி.சி.யின் எச்சரிக்கைகளில் பிழைகள் உள்ளன என்ற இந்த விடயம், பருவநிலை மாற்றத்தால் மனித குலம் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று முன்வைக்கப்படுகின்ற அறிவியல் வாதத்தை பலவீனமடையச் செய்யுமா என்று தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆர்வலர் கருணாகரனைத் தொடர்புகொண்டு சாதாத் கேட்டதை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மஹாத்மா காந்தி அஸ்தி கரைக்கப்பட்டது

மஹாத்மா காந்தி
மஹாத்மா காந்தி

இந்திய தேசப்பிதா மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் 62ஆவது நினைவு தினமான சனிக்கிழமையன்று, டர்பன் அருகே அஸ்திக் கரைப்பு வைபவம் நடந்துள்ளது.

அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓத, கடலில் மலர்கள் தூவப்பட்டு நடந்த இந்த வைபவத்தில் இருநூறு பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

1948ல் காந்திபடிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது அஸ்தி பல கலசங்கங்களில் பகிர்ந்து அடைக்கப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

அவ்வாறு தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதி குடும்ப நண்பர் ஒருவரால் இவ்வளவு காலமும் பாதுகாக்கப்பட்டிருந்தது என்று காந்தியின் பேத்தி இலா காந்தி பிபிசியிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates