jkr

படித்ததில் பிடித்த

மணல் குறிப்புகள் - 1

ஒரு கோமாளியின் முகமூடியுடனிருந்த நானும் பெருங்கருணைக்குரிய பெண்ணின் முகம் வரைந்த நீயும் சந்தித்த அந்த நாளின் நாட்குறிப்பு ஒரங்கள் மடிக்கப்பட்டு வர்ணப் பேனாக்களால் அடிக்கோடிடப்பட்ட வாசகங்களைக் கொண்டிருந்தது. தற்செயலுக்கு முன் தீர்மானிக்கபட்ட அற்புதம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம் .அணுக்கம் பெருக்க கனவுகள்,வர்ணங்கள்,இசை வடிவங்கள்,புத்தகங்கள்,பாடல்கள்,திரைப் படங்கள்,பருவகாலங்கள் மற்றும் சிந்தனைகள் அனைத்திலும் நாம் ஒத்தவர்களாக பிணைக்கபட வேண்டிய இரண்டு குரோமோசோம்களாக அறிவித்துக் கொண்டோம்.துடிப்பை உணர மார்பு வெளியில் அலைபேசி வைத்து அழுத்தி காட்டும் அபத்த இரவுகளை இரையாக்கி நமதேயான செல்லுலோஸ் இழைக்கப்பட்ட அரக்கு உலகை உருவாக்கினோம்.அங்கு மெழுகினால் ஆன கற்கள் இரைந்து கிடந்தன பனிப்பாறைகளிடயே பெருகி வரும் வென்னீர் ஊற்றுகளின் கண்ணாடி கரைகளில்.பருவங்கள் ஒரே நாளில் நிகழ்ந்து மாறும் பூக்களை உடைய தோட்டங்களை சிந்தசைஸ் செய்த பறவைகளின் குரல்கள் நிரப்பின.

நமது பழைய அகராதிகள் எரிக்கப்பட்டு புதிய சொற்களால் ஆன மென்பொருள் தகடுகளைப் பரிமாறிக் கொண்டோம்.டுவிட்டரின் சங்கேதங்களை விஞ்சுவதாய் இருந்தன பொது வெளியில் நமதேயானதாய் நவின்று பிதற்றிய நார்சிச சொற்கள்.முந்தைய காதல்கள் பன்றிக் காய்ச்சல் வந்து இறந்த பிரேதம் போல் அறுவைக்கு உட்பட்டது.பிளாக்பெர்ரியின் சமிக்ஞை கோடேறாத அலுவலக பட்டறை ஒன்றின் பொழுதில் முன்னொரு நூற்றாண்டில் மூழ்கிய கப்பலுக்குள் சிறையிருப்பது போலவும் சாம்பல் உதிரும் பிரம்மாண்ட எலும்புக் கூடாய் உலகம் மாறிப் போனது போலவும் நெடுஞ்சாலையின் தார் எந்திரமாய் நுரையீரல் கருக்கினோம்.

பிரார்த்தனை முடிந்த பெருஞ்சபையின்
கடைசியாய் பிரியும் விரல்கள்
மெழுகுவர்த்தி மேடையில் பற்ற வைத்து
போகின்றன காலியான சிரிஞ்சை

புறாக்களுக்கான தானியங்கள் விசிறியபடி
பேசத் துவங்குகின்றன
யாருமற்றதாகிவிட்ட
தொலை பேசி எண்ணை அழைத்து

இருந்த நதியின் மணல் வெளி
கிளர்த்தப் பெற்று
தீராத வெம்மையை சுமக்கும் பின்னிரவு
பெண்ணுடலாய்

அந்தியின் இறுதிப் பறவை நிழல்
மின் கம்பங்கள் மலர்த்திய பின்னும்
தாழ்ந்துயரவில்லை
சிரிப்பது போல் குரலிருக்கும்
பறவையின் கூடிருக்கும்
அந்தக் கிளை


ஆலிவ் பழங்கள் புதினா இலைகள் மிதக்க எலுமிச்சை கவ்விய வோட்கா கோப்பை ஒன்றின் தொடர்ந்த போதையில் உனது ஆய்வறிக்கையின் கையெழுத்துக்கு உரிய பேராசிரியனுடனான பட்டறை இராவின் பின்
ஐ பாட் உடன் ஐ பில் அட்டையும் கைப்பையின் ரகசிய அறைகளை கைப்பற்றியது.மூணாற்றின் படகு வீடுகளில்.இந்திய ரயில்வேயின் "பேலஸ் ஆன் வீல்ஸ்"சில் கொல்லேகால் கொனே நீர்வீழ்ச்சிகளில் நானும்.ஆனால் பிக்சல் அளவும் பிசகாத பாசாங்குகள் நுரைத்தபடி இருந்தன நம் உரையாடல்களில்.

பழவேற்காட்டின் செல்வந்த சினேகிதன் அழைத்த கூத்து நாள் மாலையில் ஆய்வறிக்கை சமர்பிக்கும் நேர்முகம் நீடிப்பதால் அழைக்க வேண்டாமென்ற குரல் செய்தி அனுப்பியிருந்தாய்.படகு விருந்துக்கு கல்லூரிப் பெண்ணொருத்தி வருவதாகவும் சென்ற முறை அவள் சிணுங்கல் பேச்சும் செய்நேர்த்தியும் செவ்வனே இருந்ததால் மீண்டும் அழைப்பதாகவும் புதைத்த பானத்தின் போதையில் பேசிக் கொண்டிருந்தான் பெருவயிற்று புரவலன்.ஆடும் படகும் இலைப் புகைத்த போதையும் நிலவறை இருட்டில் ஆனந்த உறக்கத்தில் புரண்டு கிடந்தேன்.அனைவரும் முடித்தாயிற்றென்றும் மிஞ்சி இருப்பது என் முறை என்றும் எலுமிச்சை சாறோடு எழுப்பிய கூட்டுக்காரன் கைகாட்டிய திசையில் தற்காலிகத் திரை கடந்து... கடந்து..... ஐ-பாட் தோடுடை நீ....
பிறகான பொழுதுகளில் ஐ பில் பொய்த்த உன் கருக்கலைப்பு படிவத்தில் கையெழுத்திட அழைத்த போதும் எனக்கான காவல் நிலைய பிணைப் படிவத்தில் உன் ஒப்பம் கேட்ட போதும் நம் கைபேசிகள் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தன .எல்லாப் பிழைகளுக்கும் அப்பால் நிரூபிக்க கேட்கப்படும் பிரியத்தில் படிந்திருந்தது சந்தேகத்தின் நிழல்கள்.தன் அசுத்தங்களை மறைக்க எதிராளியின் குற்றங்களை ருசுப்படுத்துவதிலேயே குரூரங்கள் வளர்த்து திரியத்துவங்கின பச்சை உதிரம் ருசித்து பழகிய விலங்கின் பழுப்பு நிற பற்களைப் போல....

சாம்பல் மேட்டில் கிடைக்கப் பெறும்
எலும்புகள் பிணைக்கும் தகடுகளாகி விட்டன
பிரியத்தின் சொற்கள்

பழக்கப்பட்ட மிருகம்
நிரூபித்தாக வேண்டியிருக்கிறது
பிரதி நொடிதோறும்

பிடிபட்ட போராளியின் நிர்வாணத்திற்கு
பிறகும் ஆயுதங்கள் தேடும் கரங்கள்
தம் ஆயுதங்களை இயக்கத் துவங்குகின்றன

மாமிசம் மெல்லத் தேடும் செயற்கை பல்வரிசை
அங்கீகாரம்

நுண்ணுயிர் யுத்தம் நிகழ்த்தும்
ரசாயன கரங்களில் இருந்து விடுவித்துக் கொண்ட
இன்னாளில்

கிளையை இரை போல் பற்றி
பாடுகிறது தன் வனமடைந்த பறவை

பென்சில் மரப் பூ

சட்டமிட்ட வெய்யில் தொங்கும் சுவர்
ரேகை கிளை விரிக்காத கரங்களின்
அடீமஸ் இசைச்சுவடி

ஒளியின் கல்லறை மேகம்
கால்மிதியின் உப்புக்கறை


ஜரிகை எறும்புச் சாரைக்கு
எதிர்வரிசை
வெற்றிடம்
கிடக்கும் உடல்

வெளியேறுகையில் கடைசியாகவும்
நுழைகையில் உடலை முந்தியும் நுழையும்
நிழலை பழக்கியிருக்கும் இவ்வீட்டில்

இருளில் இருந்து
பகிரப்பெறும் சூதாட்ட அட்டைகளாய்
வெளியேறிக் கொண்டிருக்கின்றன நிழல்கள்

கடிகாரம் மட்டும் பேசும் வீட்டில்
பூனையின் கால் நகக் கால் இசைக்கும் பியானோ
குரல்கள்

போடாக்ஸ் சூழ் உலகு

புத்தகொக்குகளின் இமை மீது
மிதக்கும் மண்

வெட்கம் அதிகமுள்ள யானைகளின்
அரவமற்ற தரைஉறக்கம்

மின்மயானத்தில் சவரக் கண்ணாடி
மீது படிகிறது சாம்பல்

வெல்வெட் சியா வளர்த்துக்கொண்டிருக்கிறேன்
பாலை வாசம் மாறாமல்

நீல வளைய ஆக்டோபஸாக விரல்கள்
வளரத்துவங்கிய இரவில்
பாட்டிளினியம் நிறம் மாற்றத் தவறவில்லை


பசலை மாறாமல் புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்
போட்டாக்ஸ் கசிய

புகையிரதம் - 1.

கிடங்குகளில் கொலையுறும்
நாய்களின் ஓலத்துடன் இரைகிறது
நிற்கும் ரயில்
முதல் பாதம் தாங்கு கட்டையை தொடர்கிறது

இரையோடு குனியும் தாய்ப் பறவைக்கு
ஒரு சேர திறக்கும் கூட்டின் அலகுகள்
ரோமம் முளைத்து கண்களாய்

அன்பின் தொழுகைக்குப் பிறகான அணைப்பாய்
மீதமிருக்கும் ரயிலுடன் தேகம் தருகிறார்கள்
காத்திருக்க கரங்கள் வாய்த்தவர்கள்

கடைசி நிறுத்தம் என்பதை எழுப்பிச்
சொல்லிகொண்டிருக்கிறாள் துப்புரவுப் பெண்
மரக் கிடங்கின் கீழ் வரிசை மரம் ஒன்றுக்கு


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நேய நாயகி

உடல்களை தின்பது குறித்த
கரையான்களுடனான உரையாடலின்
போது யட்சி வந்தாள்
முனீஸ்வரனுக்கு படைத்த சாராய
புட்டியை திருடிக் கொண்டு

கைமாற்றிய மிடறில் துரு வாசனை அடித்தது

இறந்த குழந்தை வளர்ந்த படி இருக்கும்
கனவுடையவளின் கூடலை ஆசிர்வதித்தாள்

பெரு வியாதிக்காரனின் மரணத் திகதியை
தாயம் ஆறுக்கு மாற்றி வைத்தாள் ஆட்டத்துக்கு
நடுவே

பின் இருவரும் சன்னாசி அப்பன் திடலுக்கு சென்று
தலைச்சன் பிள்ளை தலை மழிக்கும் விருந்தில்
கிடா இரத்தம் குடித்துக் கொண்டிருந்தவனிடம்
சுருட்டு வாங்கி குடித்தோம்

சித்தன் ஆடைகளை பிழிந்து தோள் மீது
போட்டுக் கொண்டு ஓட்டை மடையில்
குடலை சைக்கிள் டியுபில்
பஞ்சர் பார்ப்பது போல் கழுவிக் கொண்டிருந்தான்
யட்சி தொடையில் கிள்ளி கண்ணடித்து
இரண்டையும் இடம் மாற்றினாள்

அடியே கருவாச்சி வந்துட்டியா
எங்க மூக்குச் சில்லு ஒடயாத பயலோட
என்றான் சித்தன் திரும்பாமலே

கரட்டுப் பக்கம் முனியாட்டம் பார்க்கலாமுன்னுதென்
என்றாள் தோளோடு அணைத்தபடி

சன்னாசியும் அய்யனும் குருத பூட்டுர
சாமமாச்சுது பொழுதோட போ தாயி என்றான்

மூன்றாம் சாமமிருக்கும் படுக்கையில்
புரண்ட போது சலங்கையொலிக்க குதிரைக் குளம்படி
பெரும் செருமலுடன் கடந்தது

பானக வாசத்தில் ப்ரம்ம வேளையில் விழித்த பொது
கழுத்தில் யட்சியின் கருகமணி

தங்கை பூட்டின வீட்டிற்குள்
எப்படி நுழைகிறேனென்ற ஆதிக்கேள்வியை இன்றும்
துவங்கிய போது மஞ்சள் குளித்த பிள்ளைக் கனவுக்காரி
வாசல் கடந்தாள்
சுழித்த புன்னகையுடன்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தம்தம்தம் தம்தம் தததம்


ராஜாவின் பாடல்களில் பிடித்தது எதுவென்று கேட்ட போது ஆளுக்கொரு படம் சொன்னது நினைவிருக்கிறதா? கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடிப் பார்த்தேன் என்ற கவிப்பேரரசு, அடுத்த வரியாக ராஜாவின் பாடலில் சிறந்ததை பாடிப் பார்த்தேன் என்று சேர்த்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்க கூடும்தானே!!

நம் மனநிலைக்கு ஏற்ப அவ்வபோது ராஜாவின் ஏதோ ஒரு பாட்டு நம்மை ஆட்கொண்டு விடும். அந்த வகையில் சில வாரங்களாக என்னை இயக்கிக் கொண்டிருக்கும் பாட்டு

“சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது”

ஆட்டோ ராஜா என்ற கேப்டனின் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் பின்னால் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. இந்தப் பாட்டு முதலில் மலையாளத்தில் வந்தது என்றும், இந்த மெட்டுக்கு சொந்தக்காரர் சங்கர்- கணேஷ் என்றும் பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலவுகிறது. எனக்கு தெரிந்த சில விஷயங்கள்

இந்த மெட்டு முதலில் மூன்றாம் பிறை பிண்ணனி இசையில் ராஜா உபயோகித்தது. இதை மிகவும் ரசித்த பாலு மகேந்திரா ஓலங்கள் என்ற மலையாள படத்தில் ராஜாவை பாடலாக்க சொன்னார். தும்பி வா என எஸ்.ஜானகி தனியாக பாடிய பாடலது. அதேப் பாடலை பின் தமிழில் டூயட்டாக மாற்றினார் ராஜா. தும்பி வா பாடலின் ஸ்ருதியும் இதுவும் வேறு வேறு. இதை ராஜா தொடங்கும் போதே ஒரு காதல் ஏக்கத்தை காண்பித்திருப்பார். ஆனால் மலையாளத்தில் அப்படி இருக்காது.

அதேப் போல இந்தப் பாடலை எழுதியது புலமைப்பித்தன் என்றும், கங்கை அமரன் என்றும் சொல்கிறார்கள். எனக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பாடலின் வரிகளை கவனித்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும். எனக்கு மிகவும் பிடித்த வரி. (பின்னூட்டத்தில் இதை எழுதியவர் வைரமுத்து என்கிறார் அப்துல்லா.)

”அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை”

ஒவ்வொரு வரியும் இலக்கிய ரசம் சொட்டும். புலமைப்பித்தனாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைத்தாலும், கங்கை அமரனும் இதை எழுதும் திறன் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்தப் பாட்டு பின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளுக்கும் சென்று வென்றது. ஹிந்தியில் மட்டும் ராஜா இசை இல்லையென நினைக்கிறேன். சமீபத்தில் கூட சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஸ்ரேயா தோன்ற இதன் இசை ரீமிக்ஸ் செய்யப்பட்டு அமர்க்களமாக வந்தது. நான் கூட ஒரு பதிவில் இது என்னப் பாட்டு என்று கேட்டிருந்தேன். யாரும் சொல்லவில்லை. யூட்யூபில் தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு நாள் ஹலோ எஃப்.எம்முக்கு அழைத்து, ”ஹலோ... எஃப்ம்மா” என்று இந்தப் பாடலைக் கேட்டால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அது எஃப்.எம் தானாம். அந்தப் பாடலை இல்லையென்று சொல்லிவிட்டார்கள். எப்படியாவது இந்தப் பாடலையும் எஃப்.எம்மில் ஹிட்டாக்க வெண்டும் என்பதே என் அடுத்த ஆசை.

மலையாள பாடல்:

ராஜா ஒரு live concertல் இந்தப் பாடலை பாடியதைக் கேட்டால் ஏதோ ஒரு நிறைவான தருனத்தை கடந்தது போல் இருக்கும். அதுவும் அந்த வயலின்... வாவ்!!!.. இந்த வீடியோவில் 47வது செகண்டில் ஆரம்பிக்கும் வயலின் பிட்டை கேளுங்கள். அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கும். இதை ரிங்டோனாக மாற்றி வைத்துக் கொண்டால் உங்கள் ஆயுள் சில நாட்கள் நீடிக்கக்கூடும்.

இதோ அந்த காலத்தால் அழியாப் பாடல். கேப்டனை கான சகிக்காதவர்கள் இங்கே தரவிறக்கி கேளுங்கள்.

பாடல் வரிகள்:

சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது


கையென்றே செங்காந்த மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....


அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே


ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்


தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்; புதிய ஆய்வில் தகவல்


தொழில் சம்பந்தமான பணிகளால் இரவில் நன்றாக தூங்கவில்லையா? இரவில் வெகுநேரம் கண்விழித்து படிக்கிறீர்களா? இது பிற்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

மூளையின் நுட்பமான பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.

அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது.
எனவே இரவில் சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்; புதிய ஆய்வில் தகவல்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

157 பேரை சுட்டு தள்ளிய கினியா ராணுவம்-பெண்கள் கற்பழிப்பு


கினியாவில் ராணுவ ஆட்சியாளருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் சுமார் 157 பேரை ராணுவம் சுட்டு கொன்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பல பெண்களின் கற்பு சூறையாடப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவின் அதிபராக இருந்த லன்சானா கோன்டே கடந்த டிசம்பரில் மரணமடைந்தார். இதையடுத்து ராணுவ தளபதியாக இருந்த மௌசா டாடிஸ் காமரா அதிபராக பதவியேற்று கொண்டார்.

அப்போது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அவர் தான் தேர்தல் வரைக்கும் தான் பதவியில் இருக்க போவதாகவும், மேலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் உறுதியளித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் தான் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தேர்தலின் போது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி ஆட்சியை மீண்டும் பிடிக்க திட்டமிட்டிருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின.

இதையடுத்து நேற்று முன்தினம் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு கோனக்ரி நகரில் காமராவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் அமைதியாக ஒரு மைதானத்தில் கூடியிருந்த போது, அங்கு வந்த ராணுவம் அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டது.

இதில் சுமார் 157 பேர் இறந்தனர். அவர்களில் 128 பேரின் உடல்கள் அந்நகர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1200 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணுவ வீரர்கள் பல பெண்களிடம் அநாகரீக நடந்து கொண்டதாகவும், பலரையும் தூக்கி சென்று கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டு நாள் துக்கம்…

ஆனால், அதிபர் கூறுகையில்,

இந்த தாக்குதலுக்கு நான் உத்தரவிடவில்லை. கூட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக ராணுவம் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிகளின் தலைவர்கள் சிலர் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட உள்ளனரா?


இலங்கை அரசின் தடுப்புக் காவலில் கொழும்பில் உள்ள புலித் தலைவர்கள் சிலர் தமிழர்களின் தேசிய அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசியல்தீர்வின் கொழும்பு-அமெரிக்கா கூட்டுமுறையில் இணைந்து செயற்பட இணங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத சில அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், வெளிநாட்டு அமைச்சர் ரோகித பொகொல்லகமவும் இதுகுறித்து அமெரிக்காவுடன் விளக்கமாக கலந்துரையாடவே சென்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. புலிகளமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிறைகளிலுள்ள சந்தேக நபர்கள் விவகாரங்களை அமெரிக்கா கையாளவேண்டும் என்றும் இவர்கள் இருவரும் கேட்டுள்ளனர்.

இதேவேளை செப்டம்பர் 21 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்பட இருந்த அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற மீறல் அறிக்கையானது கோத்தபாயவின் தலையீட்டைத் தொடர்ந்தே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிறெஸ் அறிக்கை கூறியுள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டப்படத்தக்கது.

போர்க்காலத்தில் பணியாற்றிய 5 வன்னி மருத்துவர்களையும் பெருமதிப்புக் கொடுத்து கௌரவிக்கவேண்டிய கட்டத்தில், இலங்கையரசு அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்ற வாக்குமூலத்தைப் பெற்றபோது சர்வதேசம் வாய்கட்டி வேடிக்கை பார்த்தது. இதற்குள் பயங்கரவாதத்தை அமெரிக்கா எவ்வாறு கையாண்டது என அறிவதற்காக இலங்கை சட்டமா அதிபர் அமெரிக்கா பயணமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தடுப்புக்காவலில் உள்ள சுமார் 15,000 புலிகளையும் சிறப்பு நீதிமன்றங்களில் நிறுத்தி விசாரணை செய்வதே இலங்கை அரசின் திட்டம் என உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.

ஆனால், போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்கொள்ள முனையும் இலங்கைத் தலைமையோ தற்போது புதியதொடு முறைப்படி அமைந்த அரசியல் தீர்வுத் திட்டத்துடன் அமெரிக்காவை அணுகுவதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து அமெரிக்காவின் பதில் என்ன என்பது இன்னமும் தெரிய வரவில்லை. ஆனால் ஐ.நா நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹொன “வெற்றியீட்டியவர்களை தொந்தரவு செய்யமுடியாது’ எனக் கூறியதில் இருந்து அவர்களின் தாம் கூறுவதை அனைவரும் ஏற்க வேண்டும் என உள்ள மனப்போக்கு புரிகின்றது.

இதற்கிடையில் கொழும்பு-அமெரிக்கா தீர்வு குறித்து இந்தியாவும் கவலை கொள்வதாகத் தெரிகிறது. இந்தியாவை எப்போதுமே விரோதமாகப் பார்த்தார்கள் சிங்களவர்கள், இப்போது ஈழத்தமிழர்களும் அப்படியே பார்ப்பதால் இந்தியாவுக்கு ஏதேனும் சமூக நலன்கள் கிடைப்பதென்பது கடினமாக இருக்கும் எனவும் அவதானிகள் கூறுகிறார்கள்.

சுற்றியுள்ள நாடுகளின் நிலைப்பாடு என்னவென்றாலும், இப்போதைய செய்தி உண்மையென்றால், இதுவரை காலமும் தமிழர்களின் தேசிய அபிலாஷைகளுக்காகப் போராடிய தேசியத் தலைவரின் வழியில் சென்ற, இப்போது அரசின் பிடியிலுள்ள தலைவர்களில் யார் யார் எமது மக்களுக்கு விரோதமாக அரசு காட்டும் பதவி மோகத்துக்கு மசியப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வந்துவிடும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு ஐநா உதவி


வடபகுதியில் கண்ணிவெடி அப்புறப்படுத்தும் பணிகளுக்கு 10 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் அந்தோனியோ கெட்டஸுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் போதே மிதிவெடி அகற்றும், ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இயந்திரங்களை வழங்க இணக்கம் காணப்பட்டது.

ஜெனீவாவில் நடைபெறும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொண்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாட்டின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்க எவருக்கும் உரிமையில்லை : கெஹெலிய ரம்புக்வெல

நாட்டின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட எந்தவொரு நாட்டுக்கும் உரிமை கிடையாதென தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடந்த வைபமொன்றில் உiரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்கின்றது. அதன் தலைவர் முப்படைகளுக்கும் தளபதியாவார். எனவே இறைமையுள்ள நாடொன்றுக்கு வெளியிலிருந்து அழுத்தம் பிரயோகித்து பக்கச் சார்புடன் நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.

சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் இத்தகைய அழுத்தங்களைப பிரயோகிக்க முயலுகின்றன. இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க இத்தகைய சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழகத்தில் புலி ஆதரவாளர்களுக்குக் குடியுரிமை : சுப்பிரமணிய சுவாமி கடும் எதிர்ப்பு

புலிகளின் ஆதரவாளர்களுக்குத் தமிழ் நாட்டில் குடியுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு தான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாக இந்திய ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புலிப் பயங்கரவாதிகள் இலங்கையில் முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உலகின் பலபாகங்களிலும் ஒன்றிணைந்து மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயன்று வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் சட்டவிரோதமான முறையில் இவர்களுக்கு குடியுரிமை வழங்க முன்வந்தால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கூட்டொப்பந்தம் குறித்து தொழிலாளர்களுக்குத்தெளிவில்லை :தொழில் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்


- தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பெருந்தோட்டக்கம்பனிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் முழு விபரங்களையும் தோட்டத்தொழிலாளர்கள் தமது தாய்மொழியில் அறிந்து கொள்வதற்கு தொழில் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

புதிதாக செய்து கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தம் இவ்வருடம் ஏப்பரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகின்றது.இந்த ஒப்பந்தத்தில் அடிப்படைச்சம்பளம் 200 ரூபாவிலிருந்து

285 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏப்பரல் மாதம் தொடக்கம் 85 ரூபாவுக்கான ஊழியர் சேமலாப நிதி ,ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கட்டாயமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இவ்விடயம் தொடர்பாக கூட்டொப்பந்த தரப்புக்கள் தொடர்ந்து மொளனம் சாதித்து வருகின்றன.

இத்துடன் கூட்டொப்பந்தத்தி;ல் குறிப்பிட்டுள்ள ஏனைய விடயங்கள் குறித்தும் தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது.

இந்த நிலையில் கூட்டொப்பந்தத்தினை சட்டமூலமாக்கும் பொறுப்பு தொழில் ஆணையாளருக்கு இருப்பதால் கூட்டொப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்து தொழிலாளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது தொழில் ஆணையாளரின் பொறுப்பாகும். என்று இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கி.மா. சபை உறுப்பினர்களுக்கு 'லெப்டொப்' விநியோகம்

கி.மா. சபை உறுப்பினர்களுக்கு 'லெப்டொப்' விநியோகம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு ரூபா ஒரு லட்சத்து 75 ஆயிரம் பெறுமதியான 'லெப் டொப்' வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று முதலமைச்சர் செயலகத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களிடம் இவற்றை நேற்று கையளித்தார்.

சபை முதல்வர் வை.எம்.எம்.பாயிஸ், எதிர்க்கட்சித் தலைவர் சேகு தாவூத் பசீர் உட்பட சபையின் சகல உறுப்பினர்களும் மேற்படி கணினிகளைப் பெற்றுக் கொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்


earthquake_300இந்தோனேஷிய, சுமத்ராவில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிச்டர் அளவில் இது 7.9 ஆகப் பதியப்பட்டுள்ளது.

இது மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தை அடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சேத விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சமாவோ தீவில் இன்று காலை ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கேரளா தேக்கடியில் படகு விபத்து - சுற்றுலா பயணிகள் பலர் பலி


தேக்கடி சுற்றுலா ஏரி
தேக்கடி சுற்றுலா ஏரி

கேரளா தேக்கடியில் படகு விபத்து - சுற்றுலா பயணிகள் பலர் பலி

கேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

பிரபல சுற்றுலா மையமான தேக்கடியில் உள்ள ஏரியில் தினசரி மாலை 4 மணிக்கு சுற்றுலாப் பயணிகளுக்காக படகு சவாரி நடத்தப்படும். அதன்படி, இன்று ஒரு படகில் 74 பயணிகள் ஏறினார்கள். இரண்டு அடுக்குகள் கொண்ட அந்தப் படகில் மேல் அடுக்கிலும் பயணிகள் இருந்தார்கள்.

அடர்ந்த வனப்பகுதியான அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பயணிகள் படகில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மணக்கப்பாரா என்ற இடத்தில், காட்டு எருமைகள் நிற்பதை சிலர் பார்த்தனர். அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், படகின் மேல் அடுக்கில் இருந்த பயணிகள் அனைவரும் ஒருபுறமாக சேர்ந்தபோது, நிலை தடுமாறி படகு கவிழ்ந்தது.

அதையடுத்து, படகில் இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கினார்கள். இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தப்படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

அந்தப் பகுதியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால், மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பிகார் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த இரண்டு படகு விபத்துக்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.


ஏர் இந்தியா விமான சேவை வழமைக்குத் திரும்பியது

ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செலவு வெட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய விமான ஓட்டிகள் அதனை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்த சர்ச்சைக்கு காரணமான விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சுமார் 200 விமான ஓட்டிகள் சுகவீன விடுப்பு போராட்டத்தை ஆரம்பித்ததை அடுத்து சனிக்கிழமை முதல் பல விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.

இந்த மாத முற்பகுதியில், மற்றுமொரு விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமான ஓட்டிகளும் இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டதால், 5 நாட்களுக்கு விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.


இலங்கையின் கிழக்கில் அபிவிருத்திக்குட்படாத கிராமங்கள்

கிழக்கு கிராம வாசிகள்
கிழக்கு கிராம வாசிகள்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பரவலாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் சில பிரதேசங்களில் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்ற வாகரைப் பிரதேசத்திலிருந்து தொலைவாக அமைந்துள்ள கட்டுமுறிவு, ஆண்டான்குளம், மருதன்கேணிகுளம்,கிரிமிச்சை போன்ற கிராமங்களில்
எந்தவிதமான மருத்துவ வசதிகளும் இன்றி மக்கள் பெரும் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.

வாகரையிலிருந்து சுமார் 25 மைல் தூரத்திலுள்ள இந்த கிராமங்களுக்கு சீரான பேருந்து சேவையும் இல்லாதுள்ளதாகவும், மாகாண அமைச்சர்கள் அங்கு சென்று பார்ப்பது கூட இல்லையெனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சசிதரன் கவலை தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் கேட்டபோது, அதிகாரிகள் குழு ஒன்றினை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைத்து அங்குள்ள நிலைமையை கண்டறிந்து,
தேவையானால் அங்கு வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.


இந்தியாவில் கடும் வறட்சி

நீரின்றி வறண்ட நிலங்கள்
நீரின்றி வறண்ட நிலங்கள்
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை, சராசரி அளவைவிட 23 சதம் குறைவாகப் பெய்திருப்பதை அடுத்து, கடந்த 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது.

நான்கு மாத பருவமழைக் காலம் இன்றுடன் முடிவடைவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, இந்தக் காலகட்டத்தில் சராசரி அளவைவிட 23 சதம், மழை குறைவாகப் பெய்துள்ளது.

அதிகபட்சமாக, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் 36 சதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. குறைந்தபட்சமாக, தென்மாநிலங்களில் ஏழு சதம் அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஜூன் மாதத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் கணிசமாக பருவமழை பெய்தது. இருந்தபோதிலும், சராசரி அளவுக்கு மழை கிடைக்கவில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஒரு குழந்தையின் அபுர்வ நடனம் !

ஒரு குழந்தையின் அபுர்வ நடனம் இந்த குழந்தையின் நடனத்தை பார்க்க மைக்கல் ஜாக்சன் இல்லை ஜாக்சனை விஞ்சும் நடனம் மைக்கல் ஜாக்சன் இன்று நம்மிடையே இல்லை, ஆனால் இனி ஒரு மைக்கல் ஜாக்சன் வரப்போவதில்லை என்பதே உண்மை.ஆனால் இதோ ஒரு ஜாக்சன் இது ரசிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Facebookஆல்

Facebookஆல் வந்த வினை – உண்மைச் சம்பவம்

Facebook ஆனது Social network களில் முதலிடம் வகிக்கின்றது. இதனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்பதால் இதை அலுவலக நேரங்களில் அலுவலகத்தில் பயன்படுத்த பல கம்பனிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில், படுத்துக்கொண்டு தனது iphone இல் Facebook பாவித்ததற்காக வேலையை இழந்திருக்கிறார் ஒரு பெண்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முனியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலியால் (migraine) அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தன்னால் கணிணியைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி, அலுவலகத்தில் தனது கணிணி வேலையிலிருந்து வேறு துறைக்கு மாறியதுடன், தனக்கு இருளான அறை வேண்டும் என்றும் கேட்டு வாங்கியிருக்கிறார்.
ஆனால் இவர் Facebook பாவிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. இதை அவதானித்து வந்த இவரது நிறுவனம் இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டது. Facebook பயன்படுத்த ஒற்றைத்தலைவலியுடன் முடியுமானால் வேலை செய்ய ஏன் முடியாது எனவும் இது கேள்வி எழுப்பியுள்ளது.
இது எவ்வாறு சாத்தியமானது தெரியுமா? போலியான பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்கிய இவர் வேலைபார்க்கும் நிறுவனம் தனது ஊழியர்களை நண்பர்களாக இணைத்துள்ளது. அதன் மூலமாக Facebookஇல் அவர்களது நடவடிக்கைகளை அவதானித்தும் வந்துள்ளது.
முன்ன பின்ன தெரியாதவங்களை Facebookல Friendஆ வச்சிருக்கிறவங்க பாத்துப் பத்திரமா இருங்கப்பா!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

படித்ததில் பிடித்தது : செக்ஸ் பிரச்னையை போக்குமா? யோகா

படித்ததில் பிடித்தது : செக்ஸ் பிரச்னையை போக்குமா? யோகா

பல நூற்றான்டுகளுக்கு முன்பே இந்திய அளவில் காமசுகத்தை{பாலியல் இன்பத்தை} வெளிப்படுத்தும் வகையில் பல விசையங்கள் உண்டு அதில் ஒன்று தான் காமசூத்திரா.கோவில்,அரன்மனை,சில பொது இடங்கள் இவைகளில் எல்லாம் அந்த காலத்திலேயே காமசுகத்தை விவரிக்க கூடிய சிற்பங்கள் பல உண்டு.
மேலை நாடுகளில் எல்லாம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை செக்ஸ் என்றால் அசிங்காமான விசையம் என்ற கலாச்சாரம் தான் இருந்து.அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட.பெண்கள் எல்லாம் இன்று போல் சகஜமாக உடல் வேளிப்படுத்தும் உடை அணிய முடியாது. காமத்தை வெளிப்படையாக கொண்டாடும் ஆற்றல் மனிதர்கள் அளவுக்கு எந்த மிருகத்துக்கும் இல்லை.இது இன்று மேலை நாடுகள் ஒற்றுக்கொள்ளும் விசையம். ஆணால் தமிழ்{பத்திரிகைகள், சினிமா}இவைகள் தான் காதலையும், காமத்தையும் வெளிப்படையாக கொன்டாடுவது மிருகத்தனம் போல் லாஜிக் இல்லாத டையலாக்குகள் பேசும். "நொடிபொழுதில் சூடாகி, சூடேற்றி, அணைந்தும் விட்டாய் தீக்குச்சி போல ஆனால் நீ சூடேற்றிய கனல், சூடார நேரம் ஆகும் என்பதை ஏன் அறியாமல் போனாய்! இது உன் குற்றமா? அவள் குற்றமா? இல்லை படைத்தவன் குற்றமா? அல்லது எல்லாம் மாயையா? " 64 வகை இன்பங்களை முழுமையாக அநுபவித்து, ஒரு நல்ல முழு
குழந்தையைப் பெறுவதற்காக என எடுத்துக் கொள்ளலாமே? அவசர அவசரமாக முதல் இரவிலேயே பெண்களுக்கு காமம் புரிவதற்க்குல், அவர்களின் காமம் முழுமைப் பெருவதற்க்குள், காம குமிழை போட்டுடைத்து, முன்றே மாதங்களில் குழந்தை பேற்றை எட்டியவர்களின் லிஸ்ட் மிகப் பெரியது. அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடவில்லையானாலும், வெறுத்து வருத்தப்பட்டது உண்மை. யோக கலை என்பது ஒரு சர்வ ரோக நிவாரணி, அதை ஒழுங்காக கடை பிடிக்கும் பட்ஷத்தில். நாடிசுத்தி,மூச்சு பயிற்சி,பிரணயாமம் இத்துடன் யோகாவையும் முறையாக கடைபிடித்து வருபவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு எந்த பிர்ச்சினையும் வராது. இதில் பெண்ணை வலது புறத்தில் படுக்க வைத்து, சூரிய கலையில் மூச்சுக்காற்று ஓடும் போது கூடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும். இதை அப்படியே உல்ட்டாவாக செய்தால் பெண்குழந்தை பிறக்கும் என்றும் கூறுவார்கள். யோககலை என்பது 108 நாடிகளையும் கன்ட்ரோல் செய்து ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் ஒரு அதி அற்புதமான விஷயம். ஒரு சரியான குருவிடம் கற்றுக்கொண்டு செய்வது உசிதம். "அறியாமைதான் இங்கு பேரின்பம் பெண்ணே... காதல் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே" - வைரமுத்து (அந்நியன் படத்தில்) " சொல்லி தெரிவதில்லை மன்மத கலை" - பழமொழி - இது சரியா ? என்னை பொருத்தவரை இருவருக்குமே அறியாமை என்பது ஓ.கே . தேடல் துவங்கியதே என பாடிக் கொண்டே மற்றதை பாக்கலாம். பெண்ணும்க்கு தெரியாவிட்டாலும் கூட ஓ.கே. ஆனால் நான் இன்னும் திருப்தியடையவில்லை என்றே சொல்ல பயப்படும் நம் பெண்களிடையே, ஆண் அறியாமையிலும், பெண்ணும் எல்லாம் அறிந்து சொல்லத் தயங்குவதாயும் இருந்தால் பொழப்பு கிழிஞ்சுடும். வாஷிங்டன் : செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும்,
பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்; அமெரிக்காவில் லேட்டஸ்ட் மவுசு இது! இந்தியாவில், பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட யோகக் கலை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பின்னரே, சமீப காலமாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. இன்னும் பலருக்கு யோகா, இந்தியாவில் பிறந்தது என்றும், பதஞ்சலி முனிவர் தான் அதை உருவாக்கினார் என்பதும் கூட தெரியாது. அமெரிக்கா கண்டுபிடித்தது போலத்தான் சொல்வர். மேலும், யோகாவை, பல மதத்தினரும் உரிமை கொண்டாடி, அவர்கள் தனியாக பெயர் வைத்தும் யோகாவை பிரபலப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், யோகாவை வியாபாரமாக்கி கோடிகோடியாக அள்ளி வருகின்றன. அமெரிக்க மக்களுக்கு பிட்சா மோகமும், வார இறுதி ஜாலியும் கூட இப்போது குறைந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லா திருப்தியும் கிடைக்கவும், உடல் ஆரோக்கியத்துக் கும்
யோகா முக்கியமான அபூர்வ கலை என்று உணர ஆரம்பித்துவிட்டனர். இதை பயிற்சி பெற ஆயிரக்கணக்கில் செலவழிக் கின்றனர். யோகா பற்றி நிபுணர்கள் ஆராய்ச்சிகளையும் செய்து வருகின்றனர். அதில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சியில்,"செக்ஸ் பலத்தை யோகா பயிற்சி தருகிறது; யோகா செய்தால் ஆண், பெண்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாடு நீங்கி விடும்' என்று கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில்,"செக்ஸ் மீதான ஆர்வத்தை
பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்' என்று கூறியுள்ளனர். கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் "செக்ஸ் ஜர்னல்' என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில்,"68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்' என்று எழுதப்பட்டுள்ளது. மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர். அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. "யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும்' என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கலவியின்பம் தான் ஒரு ஆணையும்,பெண்ணையும் இல்வாழ்க்கையில் இணைத்து வைக்கிறது. சம்சார படகிலேறி, சதிராடும் வாழ்க்கை நீரில், திண்டாடும் மானிடர்கள் அவ்வப்போது இளைப்பாறிக்கொள்ளும் இடமே சிற்றின்பக்கூடம்.ஆண்டவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம் தான் தாம்பத்யம். ஆணின் குறியும்,பெண்ணின் யோனியும் இணைந்தது தான் சிவலிங்க தத்துவம் அல்லது சிவ சக்தி தத்துவம். செக்ஸை யோக வடிவில் பயிலும்போது அங்கே சக்தி இழப்புக்கு இடமில்லை. இருப்பினும் காம சூத்திரத்தின் எல்லா நிலைகளையும் ஒருவன் ஏக காலத்தில் அனுபவித்திட முடியாது. அதற்கு தேக பலம் அவசியம். முழு ஆரோக்கியமான ஆணும்,பெண்ணுமே இதை நடைமுறை படுத்த இயலும் இடைவெளி விட்டு. தற்கால தாம்பத்ய உறவு அரை மணிக்கு மேல் நீடித்தால் அது பெரிய விஷயம். 64 கலைகளையும் கடந்து விட்டேன் இனி எனக்கு மோகமில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. ஏனென்றால் 'அழுக்கு தீர குளித்தவனும் கிடையாது - ஆசை தீர அனுபவித்தவனும் கிடையாது".
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அற்புதமான யோகா புகைப்படங்கள்


Yoga is an ancient Indian body of knowledge that dates back more than 5000 years ago. The word "Yoga" came from the Sanskrit word "yuj" which means "to unite or integrate. Yog is a system of exercises for the physical & mental well being. It combines stylised poses with deep breathing and meditation. Yoga positions are the best among all exercises for toning muscles, lubricating joints and massaging the body.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
இந்திய உயர்ஸ்தானிகர் வவுனியா முகாமிற்கு விஜயம்:கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்த இந்தியா உதவும் என தெரிவிப்பு
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் நேற்று காலை வவுனியாவில் உள்ள மனிக்பாம் நலன்புரி முகாமிற்கு சென்று நேரடியாக பார்வையிட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரும் அவருடன் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ர்ஸ் மற்றும் வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அதிகாரியாக செயற்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் இலங்கை அதிகாரிகள், உயர்ஸ்தானிகருக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பருவப்பெயர்ச்சி காலத்தின் போது ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பருவபெயர்ச்சி காலத்துக்கு முன்னர், மக்களை மீள் குடியேற்றும் வழிமுறைகள் குறித்தும் இந்த சந்திப்புகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மேலும் பல நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்து தேர்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு பாடநூல் மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார். இதுவரை இந்திய உயர்ஸ்தானிகரகம் இப்படியான 6 ஆயிரம் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு கால், கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய வைத்தியர் குழுவை அனுப்பி அகதிகளுக்கு ஆறுமாதகாலம் வைத்திய சேவையை வழங்கியதாகத் தெரிவித்த தூதர் அலோக் பிரசாத், போரினால் கை,கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்த ஜெய்ப்பூர் காலணி நிறுவனத்தில் இருந்து குழு ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இலங்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை இலங்கை அரசு உறுதிப்படுத்தியதும் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் கூறினார்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இன்று நடைபெறவிருந்த ஹிஸ்புல்லாஹ் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஒத்திவைப்பு


கிழக்கு மாகாணசபையில் இன்று சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இன்று விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைவர்களுக்கு இடையில் இணக்கமின்மை காரணமாக இந்த விவாதம் இன்று நடைபெறவில்லை. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தின் பிறிதொரு தினத்திற்கு அந்த விவாதம் பிற்போடப்படவுள்ளது.

எனவே இன்று ஹிஸ்புல்லாஹ் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமன விடயத்தில் தலையிட்டமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தப்பட்ட நிலையில் அவர் மீது ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கையில் பணியாற்றிய இந்திய விமானி சடலமாக மீட்பு

இலங்கை விமான சேவைகள் நிறுவனம் ஒன்றில் விமானியாக பணியாற்றிய இந்திய நாட்டவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் நீர்கொழும்பில் அவர் வசித்து வந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜோய் ராமன் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ள விமானியாவார்.

நீர்கொழும்பு, கனத்தை வீதியில் உள்ள அவரின் வீட்டின் மாடிப்படியில் இரத்த வெள்ளத்தில் விழுந்திருந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதிக்கு பின்னர் கொலையுண்டவர் அவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு வேலைக்கு வராததை அடுத்து வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்தே இறந்தவரின் சடலம் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்ற நீர்கொழும்பு மேலதிக நீதிவான் உபுல் ராஜகருண விசாரணை நடத்தினார்.

சம்பவத்தில் இறந்த விமானியின் அறையிலிருந்து இரத்தக் கறை படிந்த கத்தியொன்றும், கையடக்கத் தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த அறையில் இருந்த தண்ணீர் பாத்திரமொன்றில் இரத்தம் இருந்துள்ளது.

நீர்கொழும்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
நியூஸிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜெஸ்ஸி ரைடர் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி ஜெஸ்ஸி ரைடருக்கு பதில் அரோன் ரொட்மன்ட் சாம்பியன்ஸ் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இணைக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணிக்காக இதுவரை 7 டெஸ்ட் மற்றும் 3 இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ள ரொட்மன்ட் இதுவரை ஒருநõள் சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக செயல்பட்ட ரைடருக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த இந்த போட்டியில் 74 ஓட்டங்களை பெற்ற ரைடர் ஆட்டமிழந்து அரங்கு திரும்பியதன் பின் உடைமாற்றும் அரையில் இருந்த நாற்காலியை தனது துடுப்பாட்ட மட்டையால் தாக்கி உடைத்துள்ளார்.

இது ஐ.சி.சி. ஒழுங்கு விதி 1.2 ஐ மீறும் செயலாகும். இதனால் ரைடருக்கு ஐ.சி.சி. மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீனாத், போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 வீதம் அபராதம் விதித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெஸ்ஸி ரைடர் காயம் காரணமாக நீக்கம் ஐ.சி.சி. அபராதத்திற்கும் உள்ளானார்

நியூஸிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜெஸ்ஸி ரைடர் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி ஜெஸ்ஸி ரைடருக்கு பதில் அரோன் ரொட்மன்ட் சாம்பியன்ஸ் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இணைக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணிக்காக இதுவரை 7 டெஸ்ட் மற்றும் 3 இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ள ரொட்மன்ட் இதுவரை ஒருநõள் சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக செயல்பட்ட ரைடருக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த இந்த போட்டியில் 74 ஓட்டங்களை பெற்ற ரைடர் ஆட்டமிழந்து அரங்கு திரும்பியதன் பின் உடைமாற்றும் அரையில் இருந்த நாற்காலியை தனது துடுப்பாட்ட மட்டையால் தாக்கி உடைத்துள்ளார்.

இது ஐ.சி.சி. ஒழுங்கு விதி 1.2 ஐ மீறும் செயலாகும். இதனால் ரைடருக்கு ஐ.சி.சி. மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீனாத், போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 வீதம் அபராதம் விதித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்


இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கொண்டிருந்த போது கண்ணுற்றேன் விடுவேனா ! உடனே எழுதி முடித்துவிட்டேன் எனினும் ஏனைய திரைப்படங்களின் முழுமையான விபரம் கிடைக்கவில்ல

1 ) சமுதாயம் (1962)

2) தோட்டக்காரி (1963)

3) கடமையின் எல்லை (1966) இயக்குனர் : எம். வேதநாயகம்
தயாரிப்பாளர் : எம். வேதநாயகம்
கதை : வில்லியம் ஷேக்ஸ்பியர்
திரைக்கதை : வித்துவான் ஆனந்தராயர்
நடிப்பு : தேவன் அழகக்கோன் , எம். உதயகுமார் , பொனி ரொபேர்ட்ஸ் , ஏ.,ரகுநாதன் , ஐராங்கனி , ஜி. நிர்மலா , ஆர். அமிர்தவாசகம் , எஸ். ரி. அரசு , கே. துரைசிங்கம் , ஆர். காசிநாதன் , எஸ். பஸ்தியாம்பிள்ளை

* யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்(Hamlet) என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும்.

4) பாச நிலா (1966)

5) டாக்சி டிறைவர் (1966)

6) நிர்மலா (1968 )

7) மஞ்சள் குங்குமம் (1970)

8) வெண் சங்கு (1970)

9) குத்துவிளக்கு (1972) இயக்குனர் : மகேந்திரன்
தயாரிப்பாளர் : எஸ். துரைராஜா
நடிப்பு : ஆனந்தன் , ஜெயகாந்த் , லீலா நாராயணன் , பேரம்பலம் , எம். எஸ். ரத்தினம் , எஸ். ராம்தாஸ் , நாகேந்திரா

பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் வடமராட்சியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்தார்

10) மீனவப் பெண் (1973)

11) புதிய காற்று (1975)

12) கோமாளிகள் (1976)

13) பொன்மணி(1977) இயக்குனர் : தர்மசேன பத்திராஜா
நடிப்பு : பாலச்சந்திரன் , சுபாஷினி , சித்திரலேகா மெளனகுரு , எம். எஸ். பத்மநாதன் , கலாநிதி செ. சிவஞானசுந்தரம்(நந்தி) , கைலாசப்தி

* சிங்களத் திரைப்பட இயக்குனரான தர்மசேன பத்திராஜாவினால் இயக்கப்பெற்றது.

14) காத்திருப்பேன் உனக்காக (1977) இயக்குனர் : எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் : எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜ்
கதை : எம். செல்வராஜ்
திரைக்கதை : நவாலியூர் நா. செல்லத்துரை
நடிப்பு : என். சிவராம்,கீதாஞ்சலி , ரவி செல்வராஜ்,விஸ்வநாதராஜா ,நவாலியூர் நா. செல்லத்துரை ,ருக்மணி தேவி,எம். எம். ஏ. லத்தீப் , தர்மலிங்கம்

* சிறந்த நடிப்பு,இனிய பாடல்கள், நல்ல திரைக்கதை என்று இருந்தபோதிலும், நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

15) நான் உங்கள் தோழன் (1978)
இயக்குனர் : எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் : வி. பி. கணேசன்
கதை : கலைச்செல்வன்
நடிப்பு : வி. பி. கணேசன் , சுபாஷினி , எஸ். ராம்தாஸ் , எம். எம். ஏ. லத்தீப் , கே. ஏ. ஜவாஹர் , கலைச்செல்வன் , ஹரிதாஸ் , ருக்மணி தேவி , ஜெனிடா , சந்திரகலா , எஸ். என். தனரட்னம் , விமல் சொக்கநாதன் , ஜெயதேவி

1978ம் ஆண்டு இலங்கை திரைப்பட உலகிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் மொத்தம் 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.

* கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்ப்டிப்பு நடத்தினார்கள்.

* அக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.

16) வாடைக்காற்று (1978) இயக்குனர் : பிரேம்நாத் மொறாயஸ்
தயாரிப்பாளர் : ஏ. சிவதாசன், ஆர். மகேந்திரன், எஸ். குணரட்னம்
கதை : செங்கை ஆழியான்
திரைக்கதை : செம்பியன் செல்வன், கே. எம். வாசகர்
நடிப்பு : ஏ. இ. மனோகரன் , கே. எஸ். பாலச்சந்திரன் , Dr.கே. இந்திரகுமார் , சந்திரகலா , ஆனந்தராணி , இராசரட்னம் , எஸ். ஜேசுரட்னம் , ஏ. பிரான்சிஸ் , கே. ஏ. ஜவாஹர் , எஸ். எஸ். கணேசபிள்ளை , ஜெயதேவி , லடிஸ் வீரமணி , டிங்கிரி கனகரட்னம் , சிவகுரு , சிவபாலன் , நேரு

கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.

* பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து ரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.

* 'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், போக்குவரத்துச்சிரமங்களின் காரணமாக அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.

* இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.

* வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மேலும் விபரங்களுக்கு கானாபிரபா அண்ணாவின் வாடைக்காற்று பற்றிய பதிவு

17) தென்றலும் புயலும் (1978) இயக்குனர் : எம். ஏ. கபூர்
தயாரிப்பாளர் : மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம்
திரைக்கதை : எஸ். ஆர். வேதநாயகம்
நடிப்பு : சிவபாதவிருதையர் , ஹெலன்குமாரி , சாம்பசிவம் , எஸ். ஆர். வேதநாயகம் , சித்தி அமரசிங்கம் , ஏ. ஜவாஹர் , டீன் குமார் , செல்வம் பெர்னாண்டோ , சந்திரகலா , தனரட்னம

யாழ்ப்பாணத்தில் ஒரேநேரம் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "வாடைக்காற்று" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது மிகவும் அரிதானதென அந்தக்கால இளைஞர்கள் கதைத்தனர்

18) தெய்வம் தந்த வீடு (1978)

19) ஏமாளிகள் (1978) இயக்குனர் : எஸ். இராமநாதன்
தயாரிப்பாளர் : ஏ. எல். எம். மவுஜூட்
கதை : கே ஏ எஸ். ராம்தாஸ்
நடிப்பு : என். சிவராம் , ஹெலன்குமாரி , ராஜலட்சுமி , ரி. ராஜகோபால் , எஸ். செல்வசேகரன் , கே. ஏ. ஜவாஹர் , இரா பத்மநாதன்
இசை : கண்ணன் - நேசம்

கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.

20) அனுராகம் (1978)
இயக்குனர : யசபாலித்த நாணயக்கார
தயாரிப்பாளர் : யசபாலித்த நாணயக்கார
திரைக்கதை : பி. எஸ். நாகலிங்கம்
நடிப்பு : என். சிவராம் , சந்திரகலா , அனோஜா , எஸ். என். தனரட்னம் , எஸ். விஸ்வநாதராஜா , டொன் பொஸ்கோ , செல்வம் பெர்னாண்டோ

* சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே கதை படமாக்கப்பட்டது .கீதிகா என்ற பெயரில் சிங்களப் படமாக தயாரித்தார்கள்.பிரதான பாத்திரங்களில் சிங்களப் படத்தில் விஜய குமாரணதுங்கவும், மாலினி பொன்சேகாவும் நடித்தார்கள்.

* இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல இரண்டு மொழிகளிலும் படமாகிய நாடு போற்ற வாழ்க திரைப்படத்தையும் இயக்கியவர். இவர் இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

21) எங்களில் ஒருவன் (1979)

22) மாமியார் வீடு (1979)

23 ) நெஞ்சுக்கு நீதி (1980)

24) இரத்தத்தின் இரத்தமே (1980)

25) அவள் ஒரு ஜீவநதி (1980 )
இயக்குனர் :ஜே. பி. ரொபேர்ட், ஜோ மைக்கல்
கதை :மாத்தளை கார்த்திகேசு
நடிப்பு : கே. எஸ். பாலச்சந்திரன் , டீன் குமார் , விஜயராஜா , எம். ஏகாம்பரம் , கார்த்திகேசு , திருச்செந்தூரன் , அனுஷா , ஆர். சிதம்பரம் , சீதாராமன் , , கந்தையா , ஸ்ரீதர் , மோகன்குமார் , சந்திரகலாஈழத்து ரத்தினம், சி. மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, இசை அமைப்பாளர் எம். எஸ். செல்வராஜா இசை அமைக்க, வி. முத்தழகு, கலாவதி, எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, சுஜாதா அத்தனாயக்க, ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் பாடினார்கள்.

26) நாடு போற்ற வாழ்க (1981) இயக்குனர் : யசபாலித்த நாணயக்கார
கதை : எஸ். என். தனரட்ணம்
நடிப்பு : வி. பி, கணேசன் , கே. எஸ். பாலச்சந்திரன் , கீதா குமாரதுங்க , ஸ்வர்ணா மல்லவராச்சி , எஸ். ராம்தாஸ் , ஏ. லத்தீப் , எம். ஏகாம்பரம் , உபாலி செல்வசேகரன் , டொன் பொஸ்கோ , மணிமேகலை , புஸ்பா , ரஞ்சனி

* இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.

* ஒரே நேரத்தில் இந்தக்கதை 'அஞ்சானா' என்ற பெயரில் சிங்களப் படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் பிரபல நடிகர்களான விஜய குமாரதுங்க ரொபின் பெர்னாண்டோ இருவரும் முக்கிய பாத்திரங்களில் ந்டித்தார்கள்.

27) பாதை மாறிய பருவங்கள் (1982)

28) ஷார்மிளாவின் இதய ராகம் (1993) இயக்குனர் : சுனில் சோம பீரிஸ்
தயாரிப்பாளர் : பேராதனை ஜுனைதீன், ஜெக்கியா ஜுனைதீன்
கதை : ஜெக்கியா ஜுனைதீன்
திரைக்கதை : பேராதனை ஜுனைதீன்
நடிப்பு : சசி விஜேந்திரா , வீணா ஜெயக்கொடி , கே. ஏ. ஜவாஹர் , எஸ். ராம்தாஸ் , கே. எஸ். பாலச்சந்திரன் , எம். எம். ஏ. லத்தீப் , ஜோபு நசீர் , எஸ். விஸ்வநாதராஜா , எஸ். என். தனரட்ணம், கமலஸ்ரீ , ராஜம் , திவானி , ஜெயப்பிரியா , பாத்திமா , சுஸ்பிகா

* இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம்.
* 1989ல் த்யாரித்து முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 4 வருடங்கள் கழிந்தபின்னரே 1993ல் திரைக்கு வந்தது.

* இத்திரைப்படம் "ஒப மட்ட வாசனா" என்ற தலைப்பில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இப்போது தமிழ்ப்படங்கள் முற்றிலுமாக வெளிவருவது இல்லை காரணம் அயல்மொழி திரைப்படங்களின் காரணமாயிருக்குமா ?
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கையில் இருக்கிறம்".

"இலங்கையில் இருக்கிறம்". Print E-mail
தாசன்


இலங்கையில் இருந்து இளையதம்பி தயானந்தாவை ஆசிரியராக கொண்டு இருக்கிறம் என்னும் பெயரில் இருமாத இதழ் ஒன்று வெளிவரத் தொடங்கி உள்ளது.

இலங்கையில் ஜனரஞ்ச இதழ்கள், சிறு சஞ்சிகைகள், பத்திரிகைகள் என வருவது அவை சில பிரசுரங்களுடன் நின்று விடுவது ஒரு சாபக்கேடு. மிகப் பெரிய பத்திரிகை நிறுவனமான வீரகேசரி கூட, 70களில் வெளியிட்டு வந்த வீரகேசரி மாதாந்த நாவலை கூட நிறுத்தி விட்டு இருந்தது இதற்கு மிக சிறந்த உதாரணம்.

எனினும் இருக்கிறம் சற்று நம்பிக்கையோடு வெளி வருவது போல் தெரிகின்றது. இளையதம்பி தயானந்தா இவ்வாறான சில பிரசுரங்களுடன் நின்று விடுவது குறித்து தனது இரண்டாவது இதழில் குறிப்பிட்டு இருப்பது அதற்கான அவரது தயார் படுத்தலை குறிக்கிறது.

விற்பனையை அதிகரிப்பதற்கு முதல் பிரசுரத்தில் “சிவாஜி” ரஜியினின் படத்தையும், இரண்டாவது பிரசுரத்தில் ஐஸ்வர்யா ராயின் படத்தை போடுவதை தவிர வேறு வழிகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கின்கிறார்.

எனினும் ஆக்கங்களில் சோரம் போகவில்லை. முதல் இதழ் கைவசம் இல்லாத காரணத்தினால் இரண்டாவது இதழில் வந்தவற்றை குறிப்பிடுகின்றேன். த.ஜெயசீலன், கவிஞர் செ.குணரத்தினம், தி.திருக்குமரன் ஆகியோரின் கவிதைகளும். கிண்ணியா அமீர் அலி, சரவணன், அமிர்தகழியான், ஆகியோரின் சிறுகதைளும், கே.எஸ். பாலச்சந்திரனின் வானொலி கால நினைவுகள், பனையடிப்பக்கம், சோக்கெல்லோ சண்முகத்தின் பட்சமுள்ள ஆச்சிக்கு என்பன தொடராக வருகின்றன. பசீனா சலீம், பிரபா ஆகியோரின் கட்டுரைகளும், ஐஸ்வர்யா ராய் நடித்த provoked திரைப்படம் பற்றிய பார்வையும், ஏராளம் துணுக்களும் வந்திருக்கின்றது.

பக்க வடிவமையிலும் அசத்தி இருக்கின்றார்கள். அனைத்தும் வர்ணபக்கங்களில் வந்திருக்கிறது.அறிமுக விலை 40 இலங்கை ரூபாய்கள்.

இரண்டாவது இதழில் சக பதிவரான தமிழ்நதியின் வாசகர் கடிதமும் வந்திருக்கிறது.

மேலதிக விபரங்கள்

ஆசிரியர்
இளையதம்பி தயானந்தா

நிர்வாக ஆசிரியர்
மனோ ராஜசிங்கம்

ஆசிரியர் குழு
எஸ்.ரஞ்சகுமார்
சாந்தி சச்சிதானந்தம்
அப்துர் ரகுமான்
வ.சிவஜோதி

தொடர்புக்கான முகவரி
3டொரிங்டன் அவனியூ
கொழும்பு-07 .

தொலைபேசி
0094602150836


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியா முகாம் ஒன்று
வவுனியா முகாம் ஒன்று

முகாம் மக்கள் மீள்குடியேற்றப்படாவிட்டால் கசப்புணர்வு ஏற்படும்'- ஐ.நா தலைமைச் செயலர்

இலங்கையின் வடக்கே இடைத்தங்கல் முகாம்களில் மிகவும் மோசமான நிலையில் தங்கியுள்ள சுமார் மூன்று லட்சம் மக்களை மிக விரைவாக மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அங்கு மேலும் கசப்புணர்வுகள் உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்கவிடம் ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளதாக ஐ. நா வின் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.

இலங்கையில் பருவ மழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இது தொடர்பில் உடனடி நடவடிக்கை தேவை என்கிற தனது கவலையை பான் கீ மூன் அவர்கள் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்கவுடன் நியூயார்க்கில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் இலங்கையில் போருக்கு பிறகான சவால்களை சந்திக்க இலங்கை அரசு எடுத்து வரும் முயற்சிகளை அவர் வரவேற்றுள்ளார்.

வவுனியாவில் பான் கி மூன்
வவுனியாவில் பான் கி மூன்
இலங்கை ஜனாதிபதியுடன் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடத்திய உரையாடல்களின் போது, மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு மற்றும் இணக்கப்பாட்டுக்கான வழிமுறைகள், மற்றும் அங்கு நீண்ட காலம் இடம்பெற்ற இனப் போரில் எற்பட்ட வன்முறைகள் ஆகியவை குறித்த விசாரணைகள் தேவை என்பவை பற்றி தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளதாகவும் பான் கீ மூன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மானிக் ஃபார்ம் பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அங்கு இருப்பவர்களிடையே ஏற்பட்டுள்ள விரக்தியை வெளிக்காட்டுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் அனைத்து இடம்பெயர்ந்த மக்களையும் மீள்குடியேற்றம் செய்ய அரசு முன்னர் கொடுத்திருந்த உறுதிமொழிகளை நடைமுறைபடுத்த இலங்கை அரசு ஆர்வமாக உள்ளதாக அதன் பிரதமர், பான் கீ மூன் அவர்களிடம் உறுதியளித்துள்ளதாகவும் ஐ நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரட்ணஸ்ரீறி விக்கிரமநாயக்க
ரட்ணஸ்ரீறி விக்கிரமநாயக்க
இந்தச் சந்திப்பின் போது வடபகுதியில் இருக்கும் மக்களின் நம்பிக்கையை அரசு பெறுவது மிகவும் முக்கியம் என்றும், அப்படி செய்யத் தவறுவது ஒரு இணக்கப்பாட்டுக்கான சாத்தியக் கூறுகளை குறைத்து மதிப்பிடுவது போல ஆகிவிடும் என்றும் பான் கீ மூன், ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த இலங்கை பிரதமர் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பில் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நெருங்கிச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளதாகவும் ஐ. நா செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

போர்க் காலங்களில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக ஒரு சுயாதீனமான விசாரணை தேவை என்கிற கருத்தையும் பான் கீ மூன் இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பாக இருக்கும் என்றும் ஐ. நா வின் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி வெளியீடு கூறுகிறது.

வால்டர் கெலின்
வால்டர் கெலின்
இதனிடையே இலங்கையின் வடக்கேயுள்ள முகாம்களில் ஜன நெருக்கடியை குறைக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என்று ஐ நா வின் தலைமைச் செயலரின் சிறப்புத் தூதராக இலங்கை சென்று திரும்பியுள்ள பேராசிரியர் வால்டர் கெலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் முகாம்களில் மிகவும் அபாயகரமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது மிகவும் அவசியமானது என்றும் வால்டர் கெலின் கூறியுள்ளார்.

மன்னார் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள பெருமளவிலான கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் அரசு எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும் அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates