jkr

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும் - வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து


ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கி ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு செல்ல வேண்டுமென ஜனாதிபதி ஆலோசகரும் புதிய இடதுசாரி முன்னனியின் செயலாளருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவி வந்த ஐயப்பாடு இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்பட்டுள்ளமையால் அனைத்து இன மக்களிடையேயும் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் அவசியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அரசுடன் இணைந்து செயற்படும் வகையில் சிறுபான்மை மக்கள் மத்தியில் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனவும் இதனூடாக ஜனாதிபதி மஹிந்தவின் அரசுக்கும் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கும் இடையிலான இடைவெளியை மட்டுப்படுத்தி இன ஐக்கியமும் புரிந்துணர்வும் ஏற்படுத்தப்படுவது அவசியமெனவும் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு உட்பட மலையகத்தின் பல பகுதிகளிலும் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதை தவிர்த்திருந்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தல் முறைக்கேடுகள் குறித்து விசாரிப்பது அவசியம் -ஐரோப்பிய ஒன்றியம்.



இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளில் அரசாங்கம் மாற்றம் செய்து விட்டதாகவும் இத்தேர்தல் முடிவை ஏற்க முடியாதென்றும் எதிரணி சார்பாக போட்டியிட்ட சரத்பொன்சேகா தெரிவித்திருந்தது தெரிந்ததே. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணும்பணி ஆரம்பித்தவுடனேயே சரத்பொன்சேகா ஜனாதிபதியை கொல்லும் சதியில் ஈடபட்டுள்ளார் என அரசு ஒரு புரளியை கிளப்பிவிட்டு சரத்பொன்சேகா வெளியில் நடமாட முடியாதபடி ஹோட்டலுக்குள்ளேயே முடக்கியது இதற்காக 300-400 படையினரைக் கொண்டு சரத் பொன்சேகாவை சுற்றி வளைத்திருந்ததும் தெரிந்ததே. இவ்வாறு தம்மை முடக்கி வைத்து விட்டு தமக்கு விழுந்த வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ தனக்காக மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டியுள்ள சரத்பொன்சேகா இத்தேர்தல் முடிவை ரத்துச் செய்ய வேண்டும் என கேட்டிருந்தார் இந்நிலையில் இலங்கை தேர்தல் முறைகேடுகள் குறி;த்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். ஐ.ஓ. வெளிநாட்டு கொள்கை அதிகாரி கந்தரின் ஆஷ்டன் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளதோடு தோற்கடிக்கப்பட்ட எதிர்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகள் மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து பணியாற்றத் தயார் என்றாலும்கூட தேர்தலின் போது தேர்தல் கண்காணிப்பாளர்களால் புகாரளிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையான நிகழ்வுகள் குறித்து தாம் கவலை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்படி முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் பிரச்சார பணியாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பெரும்பான்மையோரின் அங்கீகாரத்துடனேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு


இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்டபோதே மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அச்செவ்வியில் அவர் மேலும் கூறுகையில்:

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடி யாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 ஆவது அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான் மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் இருந்தனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன் சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர் இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்ற சரத் பொன்சேகாவின் குற்றச்சாட் டுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். "இக்குற்றச்சாட்டுக்கு அவர் நீதி மன்றத்தில் பதில் தேடிக்கொள்ள முடியும். பிரஜைகளின் 58 சதவீத வாக்குகள் கிடைத் திருப்பது போதிய ஆதாரமாகும். அந்தளவு வாக்குகள் முறைகேடுகள் மூலம் எப்படி கிடைக்கும்'' என ஜனாதிபதி கேள்வி கூறியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜே.வி.பி.யின் கோரிக்கை ஐ.தே.க.வினால் நிராகரிப்பு


நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தினோம். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு எம்மைக் கோருவது வேடிக்கையானதொரு விடயம்.

இந்த நாட்டில் சக்திவாய்நத கட்சியாகவும் வாக்குப் பலமிக்கதாகவும் எமது ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. எமது யானைச் சின்னம் கூட மக்கள் மனதில் பதிந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க உட்பட மேலும் பலர் எமது கட்சியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆகவே இவர்களை விட்டு வெளியே வேறு யாரையும் தேட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அது போன்றே எமது கட்சிச் சின்னத்தை நாம் அழிந்து போக விட மாட்டோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி அதனுடன் கூட்டுச் சேரும் கட்சிகளுடன் இணைந்து யானைச் சின்னத்திலேயே போட்டியிடும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எம்முடன் இணைந்து போட்டியிடும் கட்சிகளுக்குச் சில இடங்களை விட்டுக் கொடுப்பது என்பது வேறு விடயம்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதனைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் ஜே.வி.பி. க்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. தெற்கில் அவர்களது கோட்டைகள் சரிந்துள்ளன.

அவர்களது சரிவை எமது கட்சியே இன்று சமப்படுத்தியுள்ளது இந்த உண்மையை அவர்கள் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. எம்மைக் கோருவதானது அவர்களது தோல்வியை மறைக்க எம்மைப் போர்வையாகப் பயன்படுத்தும் ஒரு முயற்சியே இது ஒரு போதும் நடக்காது என்றும் கூறினார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சுதந்திரதினத்தையொட்டி புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களின் கண்காட்சி!


பெப்ரவரி 4ம் திகதி இலங்கையில் 62வது சுதந்திரதினம் இடம்பெறவுள்ளது அதனையொட்டி இடம்பெறும் கண்காட்சியில் தாம் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கண்காட்சியில் வைக்கத் தீர்மானித்துள்ளனர் படையினர் தியட்ட கிருல கண்காட்சி கண்டி பல்லேகலவில் வரும் 4ம்திகதி அன்று தொடங்கி 7நாட்கள் நடைபெறவுள்ளது இக்கண்காட்சியில் முப்படையினர் மற்றும் பொலிஸார் தமது ஒட்டுக்குழுக்கள் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கண்காட்சிக்கு வைக்கவுள்ளனர் இந்த கண்காட்சியானது 51ஏக்கர் தளத்தில் இடம்பெறவுள்ளது அதில் சுமார் 9ஏக்கரை பொலிஸ_ம் படையினரும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் கடந்த மேமாதம் போர் ஓய்வுக்கு வந்தபின்னர் நடக்கும் முதலாவது கண்காட்சி இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

செய்தியறிக்கை


ஏவுகணைகள்
ஏவுகணைகள்

அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை - சீனா

தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிக்க போவதாக சீனா கூறியுள்ளது. தாய்வானுக்கு ஆறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதை தொடர்ந்து சீனா இதனை தெரிவித்துள்ளது.

பீஜீங்கில் இருக்கும் அமெரிக்க தூதரை வரவழைத்து இந்த முடிவால் முக்கியமான பல விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா கூறியுள்ளது. அத்தோடு இராணுவ விஜயங்களை நிறுத்துவதாகவும் சீனா கூறியுள்ளது. இந்த இராணுவ விஜயங்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன் இருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

இறுதியாக தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் தடை விதிக்கப் போவதாகவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த தடைகளால் அந்நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

தாய்வான் பிரிந்து சென்ற மாகாணம் என்று கருதும் சீனா, அமெரிக்கா பிடிவாதமாக தவறான முடிவை எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளது.


டோகோ கால்பந்து அணிக்கு தடை

டோகோ அணியினர்
டோகோ அணியினர்

அங்கோலாவில் நடைபெற்று வரும் ஆப்ரிக்க கால்பந்து கோப்பை போட்டியில் இருந்து டோகோ விலகியதற்காக அடுத்ததாக நடைபெறவுள்ள இரு ஆப்ரிக்க கால்பந்து கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு டோகோ அணிக்கு தடை விதிப்பதாக ஆப்ரிக்க கால்பந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது நடைபெற்று வரும் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக டோகோ அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதனை அடுத்து டோகோ அணி போட்டியில் இருந்து விலகியது.

அங்கோலாவின் கபிண்டா பகுதியில் டோகோ அணியின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து வீரர்கள் விரும்பினாலும், பாதுகாப்பு காரணங்களால் தன்னுடைய வீரர்கள் போட்டியில் பங்கேற்க்க மாட்டார்கள் என்று டோகோ அரசு கூறியது.


வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்

ஆளில்லா விமானம்
ஆளில்லா விமானம்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இராணுவ சோதனைச்சாவடி அருகே தற்கொலைத்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தப்பட்சம் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும், இந்த சம்பவத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கின்ற பஜூர் பழங்குடியின பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் ஆயுததாரிகளின் வளாகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சோமாலியாவில் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை -சோமாலிய அதிபர்

ஆயுததாரிகள்
ஆயுததாரிகள்

சோமாலியாவின் தென்பகுதியில் பெரிய நிலப்பரப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக இவ்வருடம் பெரும் இராணுவ நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கப் படைகள் தயாராக இருப்பதாக சொமாலிய அதிபர் ஷேக் ஷரீஃப் அகமது கூறியுள்ளார்.

தனது ஆட்சியின் முதலாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கம் அல் ஷபாப், அரசாங்கம் போன்ற பயங்கரவாதக் குழுக்களை தோற்கடித்து, சொமாலியாவில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் என்று அரசு வானொலியில் உரையாற்றிய அதிபர் சூளுரைத்துள்ளார்.

இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் இஸ்லாத்தைக் காப்பதற்காகப் போராடவில்லை; மாறாக வெளிநாட்டு நலன்களைக் காப்பதற்காகவே செயலாற்றுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் மொகதிஷுவில் கடுமையான மோதல்கள் நடந்துவந்ததன் காரணமாக நேற்றைய அதிபரின் உரை இன்றுதான் வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருந்தது.

செய்தியரங்கம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மீது குற்றச்சாட்டு
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மீது குற்றச்சாட்டு

'லங்கா' வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘லங்கா’ வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை குறை கூறியது தொடர்பாக இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெள்ளிகிழமையன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.


ஐ.பி.சி.சி குழுவின் அறிக்கைகள் குறித்து விமர்சனம்

ஐ.பி.சி.சி தலைவர் ராஜேந்திரா பச்சோரி
ஐ.பி.சி.சி தலைவர் ராஜேந்திரா பச்சோரி

உலக பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசாங்கங்கள் இடையிலான நிபுணர் குழு - ஆங்கிலத்தில் சுருக்கமாக ஐ.பி.சி.சி. என்று அழைக்கப்படும் இக்குழுவானது, தமது அறிக்கைகளுடைய விஞ்ஞான அடிப்படையின் ஆதாரம் தொடர்பில் மேலும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

தென் அமெரிக்காவின் அமேஸான் மழைக்காடுகளுக்கு பருவ நிலை மாற்றத்தால் எழுந்துள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஐ.பி.சி.சி. வழங்கிய ஆதாரங்கள், ஒழுங்கான ஆராய்ச்சிக் முடிவுகளில் இருந்து எடுக்கப்படாமல், சுற்றாடல் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெறப்பட்டுள்ளன என்று தற்போது விபரங்கள் வெளியாகியுள்ளன.

இமாலயப் பனி ஏரிகள் அடுத்த நாற்பது ஆண்டுகளில் உருகிவிடும் என்று தாம் எச்சரித்திருந்ததும் தவறு என்று ஐ.பி.சி.சி. சென்ற வாரம் ஒப்புக்கொள்ள நேர்ந்திருந்தது.

பருவநிலை மாற்றத்தின் விளைவாக அமேஸான் காடுகள் வேகமாக அழியும் என்று தெரிவதாக எச்சரித்து ஐ.பி.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வன உயிர் நிதியம் என்ற தொண்டு நிறுவனத்தின் கூற்றுக்களே இடம்பெற்றுள்ளன என்பதை மழைக்காடுகள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தற்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இமாலய பனி ஏரிகள் விரைவில் உருகும் என்ற தவறான எச்சரிக்கையின் பின்னணியிலும் இந்த தொண்டு நிறுவனம் தந்த விபரங்களே அடங்கியுள்ளன.

ஐ.பி.சி.சி.யின் எச்சரிக்கைகளில் பிழைகள் உள்ளன என்ற இந்த விடயம், பருவநிலை மாற்றத்தால் மனித குலம் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று முன்வைக்கப்படுகின்ற அறிவியல் வாதத்தை பலவீனமடையச் செய்யுமா என்று தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆர்வலர் கருணாகரனைத் தொடர்புகொண்டு சாதாத் கேட்டதை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மஹாத்மா காந்தி அஸ்தி கரைக்கப்பட்டது

மஹாத்மா காந்தி
மஹாத்மா காந்தி

இந்திய தேசப்பிதா மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் 62ஆவது நினைவு தினமான சனிக்கிழமையன்று, டர்பன் அருகே அஸ்திக் கரைப்பு வைபவம் நடந்துள்ளது.

அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓத, கடலில் மலர்கள் தூவப்பட்டு நடந்த இந்த வைபவத்தில் இருநூறு பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

1948ல் காந்திபடிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது அஸ்தி பல கலசங்கங்களில் பகிர்ந்து அடைக்கப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

அவ்வாறு தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதி குடும்ப நண்பர் ஒருவரால் இவ்வளவு காலமும் பாதுகாக்கப்பட்டிருந்தது என்று காந்தியின் பேத்தி இலா காந்தி பிபிசியிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் கொழும்பு வருகை


இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்பு வரவுள்ளதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் அண்மையில் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று மீண்டும் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ள நிலையில், சிவ்சங்கர் மேனனின் கொழும்பு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அவரது கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், நலன்புரி மையங்களில் உள்ள தமிழர்களை மீள்குடி யேற்றுவது, அவர்களுக்கான புனர்வாழ்வுக் கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்தும் மேனன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

மேனனின் வருகையை அடுத்து, இலங்கையிலிருந்து முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று புதுடில்லி சென்று அடுத்தக்கட்ட ஆலோசனைகளில் ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கிறது


அமெரிக்காவில் வெளிவரும் வோல் ஸ்றீட் ஜேர்னலில் தெரிவிப்பு

தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்ட ரீதியாக கோரும் உரிமைகளை வழங்குவ தில் மெத்தனப் போக்கே தொடர்கிறது. அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும் என அமெரிக்காவில் வெளியாகும் வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் பத்திரிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் புலிகள் மீது ராணுவத்தை வைத்து குண்டு மழை பொழிந்த போது "ராஜபக்ஷவிற்கு இது மிகப் பெரிய சவால்" என வருணிக்கப்பட்டது. மே 2009இல் புலிகளை அழித்து குண்டு மழை முற்றிலும் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவிய போது ராஜபக்ஷ அந்தச் சவாலில் வெற்றி பெற்றார். இப்போது போர் வெற்றியோடு தேர்தல் வெற்றியும் சேர்ந்து ஸ்ரீலங்காவை எப்படியான ஒரு நாடாக ஆக்க வேண்டும் என்ற பொறுப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ராஜபக்ஷ இருக்கின்றார்.

கடந்த செவ்வாயன்று நடந்த தேர்தலில் 58 சதவீத வாக்குகளை பெற்று மிகப் பெரிய வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட புலிகளைப் போரில் வென்ற முன்னாள் இராணுவ தளபதியை தோற்கடித்தாலும் தேர்தல் இதற்கு முன் போல் இல்லாமல் அமைதியாகவே நடைபெற்றது.

கடும் குறைபாடுகளுக்கு மத்தியிலும் தேர்தல் சில நன்மைகளை கொண்டு வந்துள்ளது. மிக முக்கியமாக இரண்டு சிங்கள தலைவர்களும் தமிழர் வாக்கு ளுக்காக போட்டியிடும் சூழ்நிலை உருவானது. முன்னதாக பொன்சேகா மிகப் பெரிய தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி ஏற்படுத்தினார். இதுதானாக தமிழர் வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ராஜபக்ஷவை தள்ளியது.

இதன் விளைவாக அரசு தமிழ் அகதி முகாம்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. தேர்தல் அரசியல் சிங்கள இனவெறிக்கு எதிராக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷவின் முதல் முடிவு தொடர்ந்தும் இதே பாதையில் பயணிப்பதா இல்லையா என்பது தான். பயணிப்பார் என்பதையே அறி குறிகள் காட்டுவதாக உள்ளன.

கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகள் வசம் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் போரின் போது அடித்து நொறுக்கப்பட்ட மற்றும் சிதிலமடைந்த கட்ட மைப்புகளை மீண்டும் புனரமைப்பதில் கொழும்பு பணத்தை வாரி இறைத்தது.

அதிபரும் இந்த புனரமைப்புக்கள் தொடரும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததோடு நேர்மையாக நடப்பதாகவே காட்டிக் கொண்டுள்ளார். இருப்பினும் தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்டரீதியாக கோரும் உரிமைகளில் மெத்தனமே தொடர்கிறது.

அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் அரசின் கவனம் ஆட்சியை கொழும்பில் இருந்து மாற்றுவதிலும் அதற்கான அரசியல் சட்டத்தை மாற்றியமைப்பதிலும் உள்ளது.

இதற்கு மாற்றாக தேர்தல் பிரச்சாரங்களின் போது பொருளாதார வளர்ச்சி சுட்டிக்காட்டப்பட்டது. இந்த சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஏப்ரலில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தெரியும்.

பலதரப்பட்ட முறைகளை அமுல்படுத்தி பார்த்த பின்னரே எந்த முறை சரியாக வரும் என்பதை பல வருடங்களுக்கு பின் முடிவு செய்ய முடியும். ராஜபக்ஷவின் இரண்டாவது முக்கிய பொறுப்பு இலங்கைக்கான அரசியல் திட்டத்தை வரையறுப்பது. சுதந்திரமான பத்திரிகைகள் மற்றும் ஆரோக்கியமான எதிர்கட்சிகள் கொண்ட முறையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது.

பத்திரிகை சுதந்திரம் இலங்கையில் எப்போதும் மோசமாகவே உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த பல பத்திரிகை நிருபர்களும் ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டதே இதற்கு சான்று.

தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த வலைத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பரந்த மனப் பான்மையுடன் விவாதிப்பதே வேறுபாடுகளை அமைதியான முறையில் களைய வழிவகுக்கும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மஹாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கரைக்கப்பட்டது


மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் 62ஆவது நினைவு தினமான சனிக்கிழமையன்று, டர்பன் அருகே அஸ்திக் கரைப்பு வைபவம் நடந்துள்ளது.அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓத, கடலில் மலர்கள் தூவப்பட்டு நடந்த இந்த வைபவத்தில் இருநூறு பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

1948 இல் காந்திபடிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது அஸ்தி பல கலசங்கங்களில் பகிர்ந்து அடைக்கப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

அவ்வாறு தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதி குடும்ப நண்பர் ஒருவரால் இவ்வளவு காலமும் பாதுகாக்கப்பட்டிருந்தது என்று காந்தியின் பேத்தி இலா காந்தி பிபிசியிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன்: சரத் பொன்சேகா எச்சரிக்கை

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தம்மிடம் ஆவணங்கள் இருந்ததாகவும், எனவேதான் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தம்மை பயமுறுத்துவோர் தேர்தலின் போது மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதனை மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

தமது அலுவலகத்தில் தேடுதல் நடத்துவது, பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை, நெருங்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை போன்ற செயல்களில் இறுதியாக தம்மை படுகொலை செய்வதற்கே அரசாங்கம் தயாராகி வருவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு பாதுகாப்பளித்த 90 படைவீரர்களுக்கு பதிலாக தற்போது 4 பொலிஸ்காரர்கள் கைத்துப்பாக்கிகளுடன் மாத்திரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படைகளில் இருந்து சட்டரீதியாக வெளியேறிய 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், மற்றும் 2 கேணல்கள் தமக்கு ஆதரவளித்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் சண்டேலீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் சமபந்தப்பட்டவர்கள் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது பொய்யான தகவலாகும். நேற்று மாத்திரம் தமது அலுவலகத்தில் இருந்த 20 பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் 23 கணணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் நீதிமன்ற ஆணையின்றியே இடம்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைத்தும் உடைந்துபோய் உள்ளது. யாரும் பொலிஸிற்கோ நீதிமன்றத்திற்கோ செல்லமுடியாது. எந்த நேரத்திலும் யாரும் கைதுசெய்யப்படலாம். இந்தநிலையில் நாட்டில் அனைவரும் தமது பணிகளை உரியமுறையில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர், தமது உயிரை பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தானும் தமது குடும்பத்தினரும் ( மனைவி வெளிநாட்டில் படிக்கும் இரண்டு மகள்மார்) நாட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு விமானநிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தாம் தமது பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்ததாக கூறிய அவர், இதன் போது அரசாங்கம் தன்னையோ அல்லது எதிர்க்கட்சி தலைவரையோ கொலை செய்ய திட்டமிடுவதாக செய்தி தனக்கு கிடைத்ததாக குறிப்பிட்டார்.

எனினும் இதனை மறைப்பதற்காகவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய தாம் திட்டமிட்டதான செய்தியை அரசாங்கம் பரப்பிவிட்டது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதம்


தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் பணியாற்றும் ஊடகவியலாளர்களைக் கைது செய்தல் மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெற்றியாளராக பிரகடனம் செய்யப்பட்டு இரண்டு தினங்களின் பின்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னரான இத்தகைய வன்முறை அலைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவி நிலை ஆரம்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையும் என்றும் எதிர்வரும் வருடங்களில் அரசியல் சூழ்நிலைக்கு கெடுதி விளைவிப்பதாகவும் இருக்கலாம் எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அத்துடன் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பையும் மற்றும் ஈரான், டூனிஸியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் தணிக்கை முறையையும் அதன் பிந்திய செயற்பாடான ஊடக சுதந்திர சுற்றிவளைப்பையும் அந்த அமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களின்போது ஊடக ஆதரவு தொடர்பில் விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் அறிக்கைகளை ஞாபகப்படுத்தியுள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, 2008 ஒக்டோபரில் அதன் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயக தேர்தல் ஒன்றின் போது அதற்கு முன்னரும் வேட்பாளர் ஒருவர் குறித்து செய்திகள் வெளியிடுவது தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் ஏனைய ஊடகவியலாளர்களும் வழமையாக மேற்கொள்ளும் நடைறைப் பணிகளாகும்.

ஆனால் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் அவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்பதற்கு இல்லை இவ்வாறு ஊடக சுதந்திர அமைப்பு மேலும் தெவித்துள்ளது.

பொலிஸாரும் இனம் காணப்படாத குழுவினரும் ஊடகங்களை இலக்கு வைத்துள்ளார்கள். விசேடமாக முன்னணி எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்த ஊடகங்கள் மீது அவர்களின் இலக்கு உள்ளது என்று தெரிவித்துள்ள இலங்கையின் ஐந்து பிரதான ஊடகவியலாளர்கள் அமைப்புகள், தேர்தலுக்குப் பின்னரான ஊடக அடக்குறை குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஊடக சுதந்திரத்திற்கு எதிரான பின்வரும் மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

1.ஜனவரி 26 ஆம்திகதி பிரசுக்கப்பட்ட கட்டுரையொன்று தொடர்பில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணி ஆதரவிலான லங்கா பத்திகையின் ஆசியர் சந்தன சிறிமல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கென அழைக்கப்பட்ட போதே அவர் கைதுக்கு உள்ளாகியுள்ளார்.

2.சிவில் உடையணிந்த சிலர் அனுமதி பெற்ற இலக்கத் தகட்டுடனான காரில் வந்து நேற்று முன்தினம் மாலை லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலக நுழைவாயிலை சீல் வைத்துள்ளனர். அவர்கள் இதற்கு முன் அலுவலகத்தில் சோதனையும் நடத்தியுள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த இணையத்தளத்தை தன் வாடிக்கையாளர்களை பார்வையிடமுடியாதவாறு சிறிலங்கா ரெலிகொம் தடைசெய்துள்ளது.

3.கொழும்பை தளமாகக் கொண்ட டெயிலி மிரர் பத்திகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அமைச்சர் ஒருவர் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட செய்திப் பத்திரிகையான உதயன் மீது தெளிவாகக் குறிப்பிடப்படாத வகையில் தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

4.சுவீடன் அரச வானொலி நிலையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கன் பென்கன் ஊடக அங்கீகாரம் மீள் பெறப்பட்டு பெப்ரவரி முதல் திகதி நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.

தேர்தல் காலத்தில் அறிக்கையிடுவதற்கான விசாவும் அங்கீகாரமும் நான் வைத்திருந்தேன் என்று அவர் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்புக்குக் கூறினார்.

5.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அதிகாரியொருவடம் நான் எழுப்பிய கேள்விகள் தொடர்பாகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆலோசகர் ஒருவர் அவரை அவமரியாதையாகக் குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

6.இலங்கை வானொலி ஒலிபரப்புச் சேவையைச் சேர்ந்த செய்தியாளர் ரவி அபேவிக்கிரம நேற்று முன்தினம் வானொலி நிலைய அதிகாரிகளில் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நிலையத் தலைவரால் வெளியிடப்பட்ட தேர்தல் நிலைவரங்களை பாரபட்சமாக கையாண்டமை தொடர்பாக விமர்சித்ததையடுத்தே ரவி அபேவிக்கிரம தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

7.தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களான சிரச மற்றும் சுவர்ணவாஹினி நிலையங்கள் இரண்டினைச் சுற்றியும் உட்புறத்திலும் ஜனவரி 26 ஆம் திகதி இராணுவத்தினர் நிரப்பப்பட்டு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொள்ள முயன்ற வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் படப்பிடிப்பாளர்களிடம் இராணுவத்தினர் முரட்டுத் தனமாக நடந்து கொண்டுள்ளனர்.

கெமராவில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை அழித்து விடுவதற்கு ஒரு புகைப்படப் பிடிப்பாளர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். பொன்சேகாவினால் பாவிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் முந்திய தினம் சுதந்திரமாக ஊடகவியலாளர்கள் செயற்படுவதையும் இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.

ஜனவரி 24 ஆம் திகதி முதல் காணாமற் போயுள்ள அரசியல் நிருபரும் கேலிச்சித்திரக்காரருமான பிரகீத் எக்னலிகொடவை தேடிக் கண்டறிய அதிகளவிலான பொலிஸ் அதிகாரிகளைப் பணியில் ஈடுபடுத்துமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு இறுதியாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

காணாமல் போயுள்ள பிரகீத் எக்னலிகொடவின் குடும்பத்தார் அவரைப் பற்றிய தகவல் எதுவுமின்றி கடந்த ஒருவாரமாக பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெற்றியாளராக பிரகடனம் செய்யப்பட்டு இரண்டு தினங்களின் பின்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னரான இத்தகைய வன்முறை அலைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவி நிலை ஆரம்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையும் என்றும் எதிர்வரும் வருடங்களில் அரசியல் சூழ்நிலைக்கு கெடுதி விளைவிப்பதாகவும் இருக்கலாம் எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அத்துடன் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பையும் மற்றும் ஈரான், டூனிஸியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் தணிக்கை முறையையும் அதன் பிந்திய செயற்பாடான ஊடக சுதந்திர சுற்றிவளைப்பையும் அந்த அமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களின்போது ஊடக ஆதரவு தொடர்பில் விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் அறிக்கைகளை ஞாபகப்படுத்தியுள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, 2008 ஒக்டோபரில் அதன் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயக தேர்தல் ஒன்றின் போது அதற்கு முன்னரும் வேட்பாளர் ஒருவர் குறித்து செய்திகள் வெளியிடுவது தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் ஏனைய ஊடகவியலாளர்களும் வழமையாக மேற்கொள்ளும் நடைமுறைப் பணிகளாகும்.

ஆனால் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் அவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்பதற்கு இல்லை இவ்வாறு ஊடக சுதந்திர அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயல்களினால் வடக்கு கிழக்கில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது: முரளிதரன்

பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயற்பாடுகளினால் வடக்கு கிழக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறைந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்ள நேர்ந்ததாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேச அரசியல்வாதி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்த போதிலும், தமது ஆதரவாளர்களை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் முனைப்புக்களில் ஈடுபடுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போலியான வாக்குறுதிகளை அளித்து வடக்கு கிழக்கு மக்களை குறித்த அரசியல் தலைவர் ஏமாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முகஸ்துதிக்காக ஜனாதிபதியையும், பசில் ராஜபக்ஷவையும் பாராட்டிப் பேசிய குறித்த அரசியல் தலைவர், ஜெனரல் சரத் பொன்சேகாவின் பின்னால் சென்றதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் அதிக எண்ணிக்கையிலானோர் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிக்க வில்லை எனவும், அவர்கள் இப்போது வருந்துவதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மஹிந்தவின் வெற்றி குறித்து இந்தியா அகமகிழ்ந்துள்ளது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்குறித்து இந்திய அரசாங்கம் அகமகிழ்ந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவருடன் இணைந்து செயற்படப்போவதாக இந்தியா அறிக்கையை வெளியிட்டாலும், அமைதியான முறையில் அந்த நாடு மஹிந்த ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்கி வந்தது.

இந்தியா, இராணுவத்துடன் அல்லது முன்னாள் இராணுவ கட்டமைப்பை விரும்பவில்லை என அடிக்கடி கூறிவந்துள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினை தீர்வுக்கு உரியமுனைப்புகளை மேற்கொள்வார் எனவும், அவர் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுப்பொதி ஒன்றை சமர்ப்பிப்பார் என இந்தியா எதிர்பார்க்கிறது.

இதேவேளை பொதுத்தேர்தலின் பின்னர் தாம் தீர்வு குறித்து அறிவிக்கவுள்ளதாகவும், தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடப்படும் எனவும், எனினும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெரும்பான்மை மக்களின் அங்கீகாரம் அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தியா எதிர்பார்த்துள்ள வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு ஒருபோதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சுவிஸ் ஊடகவியலாளரின் விசாவை ரத்துச்செய்யும் தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளது


சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையைஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்துள்ளது. இந்த நிலையில் அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின் படி குறித்த செய்தியாளருக்கான வீசா ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் பி பி அபயகோன் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கான காரணம் எதுவும் தமக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிடடுள்ளார். இது தொடர்பில் கருத்துரைத்து கரின் வெங்கர், தாம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த போதும் அது நிராகரிக்கப்பட்டு தம்மை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாம் அரசாங்கத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்,அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வி ஒன்றை கேட்டமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரின் வெங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறுமாறும், அதுவரை எந்த ஒரு செய்தியாக்கல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாதெனவும் கரின் வெங்கர் இலங்கை அரசாங்கத்தினால் கேட்கப்பட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தல் முடிவுகளில் கணினி மயப்படுத்தப் பட்ட மோசடி சர்வதேச சமூகத்திற்கு நாம் விளக்கிக் கூறுவோம் ஐ.தே.க. அறிவிப்பு ;சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு


இறுதி தேர்தல் முடிவுகளில் கணினிமய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. உண்மையான தேர்தல் முடிவுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. எனவே இறுதி தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசிய முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது. இது தொடர்பில் நாங்கள் சகல மட்டங்களிலும் தகவல்களை திரட்டிவருகின்றோம்.

தகவல்களை திரட்டியதும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் நிலைமையை விளக்கி அறிக்கை வெளியிடுவோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது

எமது கோரிக்கையை ஏற்று ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் தேர்தலில் அயராது உழைத்த ஆதரவாளர்களுக்கும் மேல்மட்ட தவறான கட்டளைகளை விட்டுவிட்டு நேர்மையாக செயற்பட்ட பொலிஸ் இராணுவம் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் எமது நன்றியை தெரிவிக்கின்றோம்.

முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசிய முன்னணி முழுமையாக நிராகரிக்கின்றது.

இந்த முடிவு தொடர்பில் நாட்டு மக்கள் பாரிய சந்தேகம் கொண்டுள்ளனர். அரசாங்கமே சந்தேகம் கொண்டுள்ளது. இந்தளவு முடியுமா என்ற கேள்வி அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. எனவே பாரிய கணனி மட்ட மோசடிகள் இந்த இறுதி தேர்தல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளதாக நாங்கள் தெரிவிக்கின்றோம். தேர்தல் முடிவு திரிபுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் தேர்தல் திணைக்கள மட்டத்திலும், வாக்குகள் எண்ணப்பட்ட நிலையங்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலும், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மட்டத்திலும் நாங்கள் இந்த மோசடிகள் தொடர்பான தகவல்களை திரட்டி வருகின்றோம். தகவல்கள் அனைத்தும் திரட்டப்பட்டதும் எமது பக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இந்த தேர்தல் முடிவு வெளியீட்டில் காணப்படுகின்ற கணனி மோசடி மற்றும் ஏனயை விடயங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பான முழுயைமான அறிக்கையை தயாரித்து சர்வதேசத்துக்கு வழங்குவோம். மேலும் உள்நாட்டு மட்டத்தில் அறிவிப்போம். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க 24 மணிநேரத்தில் ( நேற்று கூறியது) நாட்டு மக்களுக்கு கருத்து வெளியிடுவார். அவர் கட்சி மட்டத்தில் தலைவர்களையும் வேறுபல விடயங்களையும் தற்போது ஆராய்ந்துவருகின்றார்.

இந்த தேர்தல் முடிவு மோசடி தொடர்பில் சகல மக்களும் சந்தேகம் கொண்டுள்ளதுடன் கேள்விகளை கேட்கின்றனர். நாம் முழுமையான தேர்தல் செயற்பாட்டை நோக்குவோமானால் அமைதியானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்று நடைபெறவில்லை என்று தெளிவாக குறிப்பிடுகின்றோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அரச ஊடகங்கள் பயன்படுத்தப்பட்ட விதம் உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையாளர் மற்றும் உரிய அதிகாரி ஆகிய தரப்புக்களின் சிபார்சுகளை மீறியே அரச ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. அலரி மாளிகையில் நடத்தப்பட்ட விருந்துகள் முற்றுமுழுதாக இலஞ்சம் வழங்கியமைக்கு சமனாகும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தமை எமது அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டமை ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டமை போன்ற பல விடயங்களை இங்கு கூற முடியும். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகிய தினம் ஜெனரல் சரத் பொன்சேகா சுதந்திரமாக நடமாட முடியாதவாறு சிறைவைக்கப்பட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி ஜெனரலின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவ பொலிஸ் அதிகாரிகள் மண்டியிட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மொத்த செயற்பாடுகளையும் பார்க்கும்போது தேர்தல் தினத்தன்று அமைதி நிலைமை காணப்பட்டது என்று கூறிவிட முடியாது.

வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளால் செல்ல முடியவில்லை. பல மோசடிகள் இடம்பெற்றுள்ளன. எனவே எவ்வாறு நாங்கள் தேர்தல் முடிவுகளை நம்புவது? இறுதி அறிவிப்பை மேற்கொண்ட தேர்தல் ஆணையாளரின் கூற்றில் காணப்பட்ட நிலையற்ற தன்மையை நாங்கள் அவதானித்தோம். எனவே தேர்தல் முடிவுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன என்று கூறுகின்றோம்.

குண்டசாலை தொகுதியில் வாக்களிப்பு நிலையங்களின் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்படும்போது கட்சிகளின் பிரதிநிதிகள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது. வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்படும்போது அவை தனிமைப்படுத்தப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் தினத்தன்று மாலை 7. 15 மணிக்கே எமது பிரதிநிதிகளுக்கு பெட்டிகளுடன் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. அங்கே பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. எனவே உள்ளக ரீதியில் பாரிய வேலைத்திட்டம் ஒன்று காணப்பட்டுள்ளது என்பதனை தெரிவிக்கின்றோம். கணனி மோசடி இடம்பெற்றுள்ளது என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம்.

அம்பாறை தேர்தல் தொகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை 26000 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இம்முறை குறித்த 26 ஆயிரம் வாக்குகளும் ஜனாதிபதிக்கே சென்றுள்ளன. இது எவ்வாறு சாத்தியம்? எனவே இவ்விடயங்கள் குறித்து சில தினங்களில் முழுமையான அறிக்கையை தயாரித்து உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் சமர்ப்பிப்போம். நீதிமன்றத்துக்கும் செல்வோம்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் தினத்தன்று குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் வாக்களிப்பதை தடுக்க முயற்சிக்கப்பட்டது. காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை ஒருசிலரே வாக்களித்தனர். தமக்கு வாக்கு கிடைக்காது என்று தெரிந்ததும் வாக்களிப்பதை தடுக்க முயற்சித்தனர். மீண்டும் அந்த மக்களை எந்த நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகின்றது? வவுனியாவில் அகதி மக்களுக்கு வாக்களிப்பதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. போக்குவரத்து வசதிகள் இல்லை. மேலும் நாவலப்பிட்டி கம்பளை ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது எமது தரப்பினரை அரசாங்கம் பழிவாங்க முயற்சிக்கின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் அச்சுறுத்தப்பட்டுள்ளார். எமது தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. இவை மனித உரிமைகளை மீறும் செயல்களாகும். எதிர்க்கட்சி தரப்பினர் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

தற்போதும் அரச ஊடகங்களில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சேறுபூசிக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் முடிந்துவிட்டது என்பதனை அரசாங்கம் உணரவேண்டும். தற்போது தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். எனினும் தேர்தல் முடிவு தொடர்பில் அரசாங்கத்துக்கே நம்பிக்கையில்லாத நிலைமை காணப்படுகின்றது.

ஜெனரல் சரத் பொன்சேகா 40 நாட்கள் அரசியல் செய்து 40 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் தொடர்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தம்மிடம் காணப்படுகின்ற தகவல்களை எங்களுக்கு வழங்குங்கள். தேர்தல் அதிகாரிகள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். நாங்கள் விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி: அமைதியான தேர்தல் நடைபெறவில்லை என்று கூறுகின்றீர்களா?

பதில்: மொத்த தேர்தல் செயற்பாடுகளையும் பார்க்கும்போது அமைதியான நீதியான தேர்தல் நடைபெறவில்லை.

கேள்வி: அப்படியானால் உங்கள் கட்சிக்குள் பரஸ்பரம் முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்படுகின்றனவா?

பதில்: அப்படியில்லை. எந்தவிதமான பரஸ்பரம் விரோதமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அமைதியான தேர்தல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளாரே?

பதில்: இல்லை. ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை நீங்கள் சரியான விளங்கிக்கொள்ளவேண்டும். மாலை நான்கு மணிவரை வாக்களிப்பு நிலையங்களில் பாரிய அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்றுதான் அவர் கூறியிருந்தார்.

கேள்வி: அப்படியானால் வாக்குச் சாவடிகளில் கள்ள வாக்கு இடப்படவில்லை என்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்: அவ்வாறு முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணத்தில் குண்டு வெடிப்பு மற்றும் நாவலப்பிட்டி ஹங்குரென்கெத்த ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அரசாங்கத்தினால் மறுக்க முடியுமா?

கேள்வி: அப்படியானால் எவ்வாறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன?

பதில்: கணனி மட்டத்தில் மிகவும் சூட்சுமமாக இடம்பெற்றுள்ளன

. கேள்வி: சட்டநடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்?

பதில்: இல்லை. சட்டநடவடிக்கை எடுப்பதற்கு 21 நாட்கள் உள்ளன. அதற்குள் நாங்கள் தேவையான தகவல்களை பெற்று நடவடிக்கை எடுப்போம். தற்போது தான் ஓய்வு பெறப்போவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரால் உடனே ஓய்வு பெற முடியாது. காரணம் தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்கவில்லை.

கேள்வி: இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: தகவல்களை பெற்றுக்கொண்டு சர்வதேசம் மற்றும் உள்நாட்டுக்கு அறிவிப்போம். சட்ட நடவடிக்கையும் எடுப்போம். தற்போதைக்கு தூதரகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

கேள்வி: தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளனவே? மேலும் ஐக்கிய நாடுகள் சபையும் அதேபோன்று தெரிவித்துள்ளதே?

பதில்: கண்காணிப்பு குழுக்களின் முழுமையான அறிக்கையை வாசியுங்கள். மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவின் அறிக்கைகளை முழுமையாக வாசியுங்கள்.

கேள்வி: இவை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க ஏன் இதுவரை அறிக்கை விடுக்கவில்லை?

பதில்: ரணில் விக்ரமசிங்க இதுவரை கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார். 24 மணிநேரத்தில் (நேற்று) அவர் ஊடகங்களை சந்திப்பார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க நியமனம்


மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை இராணுவத் தலைமையக அதிகாரி ஒருவர் எமது இணையத் தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விமான நிலையத்திலிருந்து ரூ.45 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு


சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 45மில்லியன் ரூபா பெறுமதியான கொகேன் போதைப் பொருட்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இந்த போதைப் பொருட்கள் அடங்கிய பயணப் பொதியினை விமான நிலையத்திலேயே விட்டு தப்பிச் சென்ற ஈரான் நாட்டுப் பிரஜை கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.

கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த டுபாய் நாட்டுக்கான விமானத்திலேயே போதைப்பொருட் கடத்தல்காரரான ஈரான் பிரஜை வருகை தந்துள்ளார்.

35வயதான இந்த சந்தேக நபரின் பயணப் பொதிகள் விமான நிலையத்திலுள்ள சுங்க திணைக்கள அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் பயணப்பொதிகளை அங்கேயே விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபருடைய பயணப் பொதிகள் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து 9 கிலோவும் 100 கிராமும் நிறையுடைய கொகேன் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் அவற்றைக் கடத்தி வந்த சந்தேகநபர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது அவர் கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலுக்கமைய அங்கு விரைந்த சுங்க திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ராஜிநாமா தொடர்பில் மீள்பரிசீலனை : அமைச்சர் டக்ளஸ்


ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது இணையத்தளத்துக்கு இன்று காலை தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக தீர்மானித்திருந்தார்.

இதனைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்புகள் இணைந்து இன்று காலை முதல் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இது தொடர்பாக நாம் கருத்து கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது. இன்று இந்துக்களின் தைப்பூச நாள் என்பதாலும் ஹர்த்தால் நடத்துவது மக்களின் இயல்பு நிலையை பாதிக்கும் என்பதாலும் அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தேன்.

ஜனாதிபதியிடம் 10 அமிச கோரிக்கைகளை முன்வைத்தே நாம் ஆதரவு வழங்கினோம். எனினும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை.

இந்நிலையை சிந்தித்தே நான் ராஜிநாமா செய்வதற்குத் தீர்மானித்தேன். அரச துறையில் ஈடுபட்டுவந்த என் சார்ந்த ஏனையோரும் ராஜிநாமா செய்யத் தீர்மானித்தனர்.

இதனை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதும், அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்" என அமைச்ர் மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

செய்தியறிக்கை


டோனி பிளேர்
டோனி பிளேர்

இராக் யுத்தம் தொடர்பான விசாரணையில் டோனி பிளேர் சாட்சியம்

இராக் யுத்தம் தொடர்பான விசாரணையில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் தொடரும் ஒரு அச்சுறுத்தலாக மாறிவந்தார். ஆதலால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரிட்டனும் அமெரிக்காவும் தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று டோனி பிளேர் கூறியுள்ளார்.

சதாம் உசைன் தொடர்பான பிரிட்டனின் நிலைப்பாடு, 11 செப்டம்பர் 2001 அன்று அமெரிக்கா மீது அல்கைதா தாக்குதல் நடத்தியதை அடுத்து பெரிதும் மாறிவிட்டிருந்தது என பிளேர் குறிப்பிட்டார்.

போக்கிரி நாடுகள் பேரழிவு ஆயுதங்களை உருவாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. இல்லாவிட்டால் இவ்வகையான ஆயுதங்கள் பயங்கரவாதக் குழுக்களின் கைகளில் சென்று சேர்ந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.


"இரானில் எதிர்க்கட்சி ஆர்வலர்கள் பலருக்கு மரண தண்டனையளிக்க வேண்டும்"- அதிகாரம் மிக்க மதகுரு அயதுல்லா

எதிரணி ஆர்ப்பாட்டக்காரர்
எதிரணி ஆர்ப்பாட்டக்காரர்
இரானில் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கமும் கொண்ட காபந்து சபையின் தலைவராகவுள்ள கடும்போக்கு மதகுரு, அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சி ஆர்வலர்கள் கூடுதலானோருக்கு அதிகாரிகள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இரான் அதிகாரிகள் சென்ற வருடம் காட்டிய பலவீனம்தான் கூடுதல் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்திருந்தன என்று அயதுல்லா அஹ்மத் ஜன்னதி என்ற அந்த மதகுரு கூறியுள்ளார்.

தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்போது அவர் இவற்றைத் தெரிவித்திருந்தார்.

இரானின் இஸ்லாமிய அதிகாரக் கட்டமைப்பைக் குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை இருவர் தூக்கிலிடப்பட்டனர்.


அமெரிக்காவில் கடந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் 5.7 வீத வளர்ச்சி

அமெரிக்க நாணயம்
அமெரிக்க நாணயம்
2009ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாத காலகட்டத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் 5.7 சதவீதம் என்ற வருடாந்த வளர்ச்சியை காட்டியுள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை தரும் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வளர்ச்சியாகும். தவிர மோசமான பொருளாதார சரிவை எதிர்கொண்டுவந்த அமெரிக்கா அதிலிருந்து வெளிவந்து தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும் காட்டுகிறது.

அமெரிக்காவில் நுகர்வு அதிகரித்துள்ளதையும் ஏற்றுமதிகள் உயர்ந்துவருவதையும் இது பிரதிபலிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பொருளாதாரச் சரிவின்போது மிகவும் குறைந்துபோன பெரிய தொழில்களின் சொத்து மதிப்புகள் திருத்தி மதிப்பிடப்படுவதே இந்த வளர்ச்சிக்குப் பெரும்பங்கு காரணம் என்பதால், இந்த அளவிலான வளர்ச்சி நெடுநாள் நீடிக்காது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.


பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி

மஹ்மூத் அல் மஹபு
மஹ்மூத் அல் மஹபு
சிரியாவில் நடந்த பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவரான மஹ்மூத் அல் மஹபு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இவர் இஸ்ரேலிய உளவாளிகளால் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டிவருகிறது.

மஹ்புவின் மரணத்திற்கு அவரது மகன் பழி தீர்ப்பார் என்று ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் காலித் மெஷால் அங்கே குழுமியிருந்தவர்கள் மத்தியில் சூளுரைத்தார்.

துபாயில் வைத்து மஹ்பு கடந்த வாரம் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டிவருகிறது.

1980 களில் இரண்டு இஸ்ரேலிய ராணுவத்தினரை கடத்தியதிலும், இஸ்ரேல் மீதான வேறு பல தாக்குதல்களிலும் மஹ்பு முக்கிய பொறுபு வகித்ததாக ஹமாஸ் கூறுகிறது.

இது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

செய்தியரங்கம்
சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா

சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல் - 13 பேர் கைது

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகம் அரச படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் அலுவலகம் அமைந்துள்ள வீதியை மறித்து ஊடகவியலாளர்கள் எவரும் உள்நுழையாதபடி தடுத்த விசேட அதிரடிப் படையினர் அங்கு சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் நாற்பது அதிகாரிகள் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி 13 பேரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

ஏற்கனவே தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை நான்கு பொலிசாராக குறைத்துள்ள அரச தரப்பு தற்போது தமது அலுவலகத்தை சோதனையிட்டு கணிணி உள்ளிட்ட உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தம்முடன் இருந்தவர்களையும் கைது செய்து சென்றுள்ளதாகவும் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

இதுதொடர்பாக இலங்கை அரச அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்லவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, விசாரணை நடவடிக்கைகள் தொடர்வதாக மட்டும் கூறினார். சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தப்பட்டது பற்றியோ, எது குறித்து விசாணை நடத்தப்படுகிறது என்பது பற்றியோ ஹுலுகல்ல உறுதிப்படுத்தவில்லை.


இந்திய இராணுவத் தளபதியின் இராணுவச் செயலர் மீது விசாரணை

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர்
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர்
நில பேரம் தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய இராணுவத் தளபதியின் இராணுவச் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷுக்கு எதிராக, ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தில், மூன்று நட்சத்திர அந்தஸ்துடைய உயர் அதிகாரி ஒருவர் இத்தகயை நடவடிக்கையை எதிர்நோக்குவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மாதம் 31-ம் தேதி அவர் ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராணுவச் செயலர் மீதான குற்றச்சாட்டை அடுத்து, முதலில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ராணுவத் தளபதி உத்தரவிட்டார்.

ஆனால், இரு தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கைக்குப் பதிலாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்ற ராணுவ அதிகாரிகள் மீது வேறு வகையான நடவடிக்கை எடுக்கப்படும்போது, ராணுவச் செயலர் அவதேஷ் பிரகாஷுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று அவர் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.

அதைத் தொடர்ந்து ராணுவத் தளபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ராணுவத் தளபதியின் உத்தரவை நிராகரித்து, பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிடுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் சுக்னா ராணுவ நிலையம் அருகே அமைந்துள்ள நிலத்தை தனியார் ஒருவருக்கு விற்க, ஆட்சேபணையில்லா சான்றிதழ் வழங்க, அவதேஷ் பிரகாஷ், மற்ற நான்கு ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மகாத்மா காந்தியின் எஞ்சியுள்ள அஸ்தி தென்னாபிரிக்காவில்

இலா காந்தி- காந்தியின் பேத்தி
இலா காந்தி- காந்தியின் பேத்தி
1948 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் அஸ்தியை பல நாட்டு அரசுகளின் சார்பில் அவற்றின் தலைவர்கள் தத்தமது நாடுகளுக்கு கொண்டு சென்றார்கள்.

ஆனால் அப்போது தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கொள்கையை கடைப்பிடித்த அரசாங்கம் ஆட்சியில் இருந்ததால் அந்த அஸ்தியை அந்நாட்டு அரசாங்கம் பெற்றுக் கொள்ளாமையால் அங்குள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் காந்தியின் அஸ்தி அங்கே கொண்டுசெல்லப்பட்டது.

காந்தி தென் ஆப்ரிக்காவில் 21 ஆண்டுகள் வாழ்ந்ததால் அவரது அஸ்தியின் ஒருபகுதியை அங்கே அனுப்புவதற்கு இந்திய அரசும் ஒப்புக்கொண்டது. அப்படி கொண்டுவரப்பட்ட காந்தியின் அஸ்தி அவர் தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அப்படி வைக்கப் பட்டிருந்தபோது, விலாஸ் மெஹதா என்கிற காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான நண்பர் அந்த அஸ்தியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து காந்தியின் நினைவாக தம்மிடம் வைத்துக் கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் இந்த அஸ்தியை அவர் தமது மருமகளிடம் கொடுத்து அதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அந்த அஸ்தியை சில ஆண்டுகாலம் வைத்திருந்த அந்த மருமகள் அதனை காந்தி குடும்பத்திடம் கையளித்துள்ளார்.

காந்தியின் அஸ்தியை கண்காட்சியிலோ அல்லது தனிநபர்களிடமோ வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அதை கடலில் கரைப்பது தான் சரி என்றும் முடிவு செய்யப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை அஸ்தி கடலில் கரைக்கப்படவுள்ளது.

தென் ஆப்ரிக்க கடற்படையின் வாகனத்தில் அஸ்தியுடன் தாமும் உடன் சென்றுகடலில் கரைக்கவுள்ளதாகவும் இது முழுமையான அரசு மரியாதையுடன் செய்யப்பட இருப்பதாகவும் தென்னாபிரிக்காவிலுள்ள காந்தியின் பேத்தியான இலா காந்தி தமிழோசையிடம் கூறினார்.

இலா காந்தி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பொதுத்தேர்தலில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் அரசியல் தீர்வு குறித்து ஆலோசனை நடத்தப்படும்: மஹிந்த


எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் என் டி டி வி க்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்டபோதே மஹிந்த ராஜபக்ச இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்கவேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 வது அரசியலமைப்பை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது.

எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான்மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் உள்ளனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, வடக்குகிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கென ஒரு தொகுதி தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு தொகுதி தையல் இயந்திரங்களை வழங்கினார்.

அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் நேற்றைய தினம் (29) இடம்பெற்ற இந் நிகழ்வில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கென 11 தையல் இயந்திரங்களும் உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளானவர்களில் தையல் தொழிலை சுயமுயற்சியாக கொண்டவர்களுக்கு என இரண்டு இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை தொழில் செய்ய முடியாத நிலையிலுள்ள குடும்பத் தலைவரைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் கணவர் காணாமல் போன நிலையிலுள்ள குடும்பங்களுக்கு என 8 தையல் இயந்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தையல் இயந்திரங்களை வழங்கி உரைநிகழ்த்தியபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதிப்புக்குள்ளான மக்களின் மேம்பாட்டுக்கென வழங்கப்படும் இந்தத் தையல் இயந்திரங்களை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ றீகன் மற்றும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.














  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates