jkr
แสดงบทความที่มีป้ายกำกับ பிரித்தானிய பிரதமர் கோடன் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ பிரித்தானிய பிரதமர் கோடன் แสดงบทความทั้งหมด

பின் லேடனைக் கைது செய்ய பாகிஸ்தான் உதவ வேண்டும் : கோர்டன் பிறவுண்


அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின் லேடனைக் கைது செய்வதற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் குறிப்பிட்டுள்ளார்.

ஒஸாமாவைக் கண்டு பிடிப்பதில் பாகிஸ்தானிய அரசாங்கம் மேலும் காத்திரமான முறையில் செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒஸாமா பின் லேடனை கைது செய்யவோ அல்லது கண்டு பிடிக்கவோ முடியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பின் லேடன் மற்றும் அவரது பிரதித் தலைவர் அய்மான் சவாரி ஆகியோரைக் கைது செய்வது தொடர்பில் கூடுதலான அக்கறை செலுத்தப்பட வேண்டும்.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2001ஆம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்பு படையினர் ஒஸாமாவை நெருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஒஸாமா பின் லேடன் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னெடுக்கும் அதே அணுகுமுறை அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.

இத் தொடர்பாக பாகிஸ்தானிய பிரதமருக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஒன்று நடைபெறவுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது : பிரிட்டன் கோரிக்கை


2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் இன்று மேற்கிந்திய ரினிடாட்டில் ஆரம்பமாகவுள்ள, பொதுநலவாய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஏற்கனவே பொதுநலவாய நாடுகளின் செயலாளர்,கமலேஸ் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரட்டுடனும் கோடன் பிரவுண் பேச்சு நடத்தியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு பெறுமதிமிக்க ஒன்று எனத் தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது பொதுமக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டமை காரணமாகவே இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையைத் தான் முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜதந்திர தரப்புகளின் தகவல்களின்படி, இலங்கையின் இந்த மாநாட்டை நடத்தக்கூடாது என்பதில் பிரித்தானியா முனைப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், பொதுமக்களுக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டன. இதன் போது பொதுமக்களின் பாதிப்புகளைக் குறைக்குமாறும் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்தை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகரிக்குமாறும், பிரித்தானியா கோரிக்கையை முன்வைத்திருந்தது.

எனினும் அதனை, இலங்கை அரசாங்கம் ஏற்று செயற்படவில்லை என்பதே கோடன் பிரவுணின் குற்றச்சாட்டாக உள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates