jkr

அறிவியல் அறிவோம்

Posted: 05 Apr 2010 01:13 AM PDT

அறிவியல் வளர்ச்சிக்கு இன்று சிறந்த ஊன்று கோலாக இயங்குவது இணையதளம் என்றால் அது மிகையாகாது. தகவல் தேடலின் மூலமாகவும் அதன் அடிப்படையிலும், அறிவியலின் இன்றைய வளர்ச்சியையும் அது செல்லும் பாதையையும் இன்று எளிதாகக் கற்றுக் கொள்ள முடிகிறது. அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காகவே, ஆர்வம் என்பதன் ஆங்கிலச் சொல்லான Curiocity (Curiosity) என்ற பெயரில் ஓர் இணையதளம் இயங்குகிறது. ஆர்வத்திற்கு தூபம் போட்டு வளர்க்கும் ஒரு நகரமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உலகின் இயக்க நிலைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் உள்ளதா? ஏதேனும் ஒன்று எப்படி இயங்குகிறது என்ற வினா மனதில் உள்ளதா/ இந்த தளம் செல்லுங்கள். அண்டு க்ண் என்ற பிரிவில் சென்று உங்கள் கேள்வியை டைப் செய்திடுங்கள். தொடர்ந்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, பள்ளியில் உங்கள் வகுப்புநிலை,வசிக்கும் நகரம் என தகவல்களையும் கொடுங்கள். உங்களுக்கான பதில் அனுப்பப்படும். கேள்வி கேட்பது மட்டுமின்றி, ஏற்கனவே கேட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் அதில் பிரவுஸ் செய்து பார்க்கலாம்.

இந்த தளத்தில் எனக்குப் பிடித்தது பரிசோதனைச் சாலை (The Lab) பிரிவுதான். ஏதேனும் பரிசோதனை ஒன்றை செய்து பார்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதற்கான வழிமுறைகள், தேவையான பொருட்கள் ஆகியவற்றைத் தந்து எப்படி பரிசோதனையை மேற்கொள்வது என்ற வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது.

நாம் அன்றாடம் சந்திக்கும் பொருட்கள் குறித்த அறிவியல் தகவல்களைத் தருகிறது Everyday Science என்ற பிரிவு. நான் இதனைப் பார்க்கும் போது முப்பரிமாணப் படம் குறித்த தகவல்கள் விரிவாகத் தரப்பட்டிருந்தன. இன்றைய திரைப்படங்கள் மட்டுமின்றி, டிவிக்களும் முப்பரிமாணக் காட்சிக்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இது அனைவரும் அறிய வேண்டிய விஷயமாகும்.
இந்த தளத்தில் நீங்கள் எங்கு பிரவுஸ் செய்தாலும், அறிவியல் குறித்து எதனையாவது கற்றுக் கொள்வீர்கள் என்பது உறுதி.

இந்த தளம் கிடைக்கும் முகவரி http://www.curiocity.ca/
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

"மவுஸ்" மாயாஜாலம்

கையடக்க மவுஸ் எவ்வளவு வேலை செய்கிறது பார்த்தாயா! என்று அடிக்கடி வியப்பவரா நீங்கள். இதோ இந்த மவுஸ் செய்திடும் இன்னும் பல வேலைகளை இங்கே படியுங்கள். மவுஸின் மாயாஜாலம் மட்டுமல்ல, உங்களின் வேலையைக் குறைக்கும் வகையில் மவுஸ் என்ன வகை திறனெல்லாம் கொண்டுள்ளது என்று இங்கு பார்க்கலாம். உங்களிடம் ஸ்குரோல் வீல் உள்ள
மவுஸ் இருக்கிறதா; அப்படியானால் பல ட்ரிக்குகளை நீங்கள் மேற் கொள்ளலாம்.

இணையப் பக்கம் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு வீலை மெதுவாகச் சுழற்றவும். நீங்கள் சுழற்றும் திசைக் கேற்ப முன்பு பார்த்த இணையப் பக்கங்களுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப் படுவீர்கள். இதனைச் சோதிக்க இன்டர் நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பைத் திறக்கவும். அதன் வழியாக பல இணைய பக்கங்களுக்குச் செல்லுங்கள். பின் இந்த ட்ரிக்கைச் சோதித்துப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும்.

ஏதேனும் ஒரு வெப் பிரவுசர் வழியாக இணையப் பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர் களா? கண்ட்ரோல் கீயை அழுத்தி கொண்டு ஸ்குரோல் வீலைச் சுழற்றவும். சுழற்றும் திசைக்கேற்ப வெப் சைட்டின் எழுத்துக்கள் சிறியதாகவோ பெரியதாகவோ மாறுவதைப் பார்க்கலாம். நீங்கள் ஆப்பரா பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த ட்ரிக் மேற்கொள்கையில் படங்களும் பெரிது சிறிதாவதைப் பார்க்கலாம்.


பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களைப் பயன்படுத்துகையில் இணையப் பக்கங்களில் உள்ள ஹைப்பர் லிங்க்குகளின் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு கிளிக் செய்தால் லிங்க்குடன் சம்பந்தப்பட்ட தளம் புதிய டேப்பில் திறக்கப்படும். அதே போல ஒரு டேப் மீது மவுஸ் வீல் கொண்டு கிளிக் செய்தால் அந்த டேப் மூடப்படுவதுடன் அது நம் பார்வையிலிருந்து அகற்றப் படும். டேப் ஓரமாக உள்ள சிறிய பெருக்கல் அடையாளத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய் வதைக் காட்டிலும் இது எளிதல் லவா!

மவுஸ் வீலைப் பயன்படுத்தி இ�ணைய தளப் பக்கங்களில் முன்னும் பின்னும் செல்ல முடியும். பயர்பாக்ஸ் பிரவுசரில் நிறைய டேப்கள் திறந்திருக்கையில் டேப் பாரின் இரு முனைகளிலும் ஒரு அம்புக் குறி அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் மறைந்திருக்கும் பிற டேப்களைக் காணலாம். இதைக் காட்டிலும் ஓர் எளிய வழி உள்ளது. டேப் பாரில் எங்கு வேண்டுமென்றாலும் உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று வைத்து உங்கள் மவுஸ் வீலை மேலும் கீழுமாக நகர்த்தவும். மறைந்துள்ள டேப்கள் காட்டப்படும்.

உங்கள் மவுஸ் பாய்ண்டர் ஸ்கிரீனில் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிப்பது கஷ்டமாக இருக்கிறதா? மவுஸ் பாய்ண்டர் ஸ்கீமைத் திறந்து பாய்ண்டரைப் பெரிதாகவோ அல்லது வேறு வடிவிலோ மாற்றிக் கொள்ளலாம். இதற்கு Start /Settings/Control Panel /Mouse எனச் செல்லவும்.

இங்கு Pointers டேபில் கிளிக் செய்திடவும். மேல் பிரிவில் புதிய பாய்ண்டர் ஒன்றை கீழ் விரியும் மெனுவில் இருந்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் இது போன்ற வேறு மவுஸ் பாய்ண்டர் ஸ்கீம் கிடைக்கவில்லை என்றால் http://support.microsoft.com/default.aspx?scid=kb;ENUS;q154500 என்ற தளத்திற்குச் செல்லவும். இந்த தளத்திலிருந்து எட்டு வெவ்வேறு மவுஸ் பாய்ண்டருக்கான திட்டத்தினை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

கிளிக் லாக் என்றொரு அருமையான வசதியை விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் எம்.இ. ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் காணலாம். இதன் விசேஷம் என்ன? பொதுவாக டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்திட அதன் தொடக்க இடத்தில் கர்சரை அழுத்திப் பிடித்துக் கொண்டு பின் அழுத்தியவாறே அப்படியே தேர்ந் தெடுக்கபட வேண்டிய இடம் வரை இழுத்து வந்து முடியும் இடத்தில் விட்டுவிடுவோம். டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிடும்.




கிளிக் லாக் வசதியை இயக்கிவிட்டால் இது போல அழுத்திப் பிடித்துக் கொண்டே இழுக்கும் வேலை இல்லை. டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் ஒரு கிளிக்; முடிவில் ஒரு கிளிக். காரியம் முடிந்தது. டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிட்டது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள நேரத்தையும் நீங்கள் கிளிக் லாக் மூலம் செட் செய்திடலாம்.


இதை எங்கிருந்து பெறுவது? என்று தேட வேண்டாம். உங்கள் சிஸ்டத்திலேயே உள்ளது. Settings/Control Panel/Mouse செல்லவும். பின் Button டேப் கிளிக் செய்திடவும். கீழாக உள்ள "Turn on Click Lock" என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். மீண்டும் கிளிக் செய்து அழுத்தியவாறே பழையபடி வேண்டும் என்றால் Settings பட்டன் அழுத்தவும்.

அடோப் போட்டோ ஷாப் அப்ளிகேஷன் புரோகிராமில் ஒன்றை ஸூம் செய்திட என்ன செய்கிறீர்கள்? டூல் பாரிலிருந்து ஸூம் டூலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறீர்கள். அல்லது கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் ஸூம் செய்திட உங்களுக்குக் கை கொடுக்கிறது. ஆல்ட் + ஸ்பேஸ் பார் அழுத்தினால் ஸூம் குறைகிறது. இவற்றை எல்லாம் மறந்திடுங்க! படத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு ஜஸ்ட் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்துங்க.


வெப் பிரவுசிங் செய்திடுகையில் பயர்பாக்ஸ் பிரவுசரில் தேவையற்ற டேப் ஒன்று திறக்கப்படுகிறதா? அதன் உள்ளே என்ன உள்ளது என்று பார்க்கக் கூட உங்களுக்கு விருப்பம் இல்லையா? தேவையற்ற டேப் மீது உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். இப்போது மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தி ஒரு கிளிக் செய்திடுங்கள். டேப் அதனுடன் இணைந்த தளம் எல்லாம் காணாமலே போயிருக்கும்.


இணையதளத்தில் உள்ள டெக்ஸ்ட்டை ஒவ்வொரு வரியாகப் பொறுமையாகப் படிப்பவரா நீங்கள்! உங்களுக்கு உதவ மவுஸ் தயாராக உள்ளது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸ் ஸ்குரோல் வீலை நகர்த்துங்கள். ஒவ்வொரு வரியாகத் தள்ளப்படும். பயர்பாக்ஸில் பல புக்மார்க்குகளை ஏற்படுத்தி விட்டீர்கள். உங்கள் புக் மார்க்குகள் எல்லாம் நான்கு அல்லது ஐந்து வகைப் பட்ட பொருள் குறித்தவையாக உள்ளன. எடுத்துக் காட்டாக கம்ப்யூட்டர் டிப்ஸ் குறித்த தளங்களுக்கான புக்மார்க்குகள், ஆன் லைனில் பத்திரிக்கைகளைப் படிப்பதற்காக சில புக்மார்க்குகள், ஹார்ட் அட்டாக் வராமல் இருப்பதற்கான தளங்களுக்கானவை எனப் பல உள்ளன.

இவற்றை ஒவ்வொரு வகைக்கான போல்டர்களை உருவாக்கி அந்த போல்டர்களுக்குள் இவற்றை வகைப்படுத்தி போட்டு வைத்தால் புக் மார்க்குகளின் நீண்ட பட்டியலில் ஒவ்வொன்றாகத் தேடித் தேடி திறக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட போல்டர்களைத் திறந்து தேவையான புக் மார்க்குகளின் மீது கிளிக் செய்து திறந்து படிக்கலாம். சரி, போல்டர் ஒன்றில் ஒன்றுக்கொன்று சார்ந்த தளங்களின் பெயர்கள் தானே இருக்கப் போகின்றன. எப்படியும் அனைத் தையும் பார்க்க வேண்டும்.

மொத்தமாக இவற்றைத் திறக்க முடியுமா? முடியும் என்கிறது பயர்பாக்ஸ். சம்பந்தப்பட்ட போல்டர் மீது மவுஸ் ஸ்குரோல் வீல் கொண்டு கிளிக் செய்தால் அந்த போல்டரில் உள்ள அனைத்து புக்மார்க்குகளுக்கான அனைத்து இணைய தளங்களும் திறக்கப் படும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கம்ப்யூட்டர் தியேட்டர் "விண் ஆம்ப்"

Posted: 27 Mar 2010 02:57 AM PDT

வீட்டினுள் தியேட்டரையும், ஆடியோ அரங்கையும் கொண்டு வந்ததில் வீடியோ பிளேயருக்கு அடுத்தபடியாகக் கம்ப்யூட்டரைச் சொல்ல வேண்டும். இதற்கு அதிகம் பயன்படும் சாப்ட்வேர் தொகுப்பு விண் ஆம்ப் ஆகும். விண்டோஸ் இயக்கத் தொகுப்புடன் மீடியா பிளேயர் என்ற ஆடியோ, வீடியோ தொகுப்பு கிடைத்தாலும், பெரும்பாலானவர்கள் இன்றும் விண் ஆம்ப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொகுப்பு கட்டணம் கட்டியும் பெறலாம் என்றாலும், இலவசமாக டவுண்லோட் செய்யக் கூடிய தொகுப்பிலேயே பல வசதிகள் இருப்பது இதற்குக் காரணமாகும்.

விண் ஆம்ப் புரோகிராமை மீடியா பிளேயர் என வகைப்படுத்துகிறோம். இங்கு மீடியா என்பது ஆடியோ மற்றும் வீடியோவினைக் குறிக்கிறது. இது இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம் என்பது இதன் சிறப்பு. இதனை www.winamp.com என்ற இணைய தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். மேலும் சில தளங்களும் இந்த புரோகிராமை இறக்கிக் கொள்ள உதவுகின்றன. எடுத்துக்காட்டாக www.download.com என்ற தளத்தைக் கூறலாம். இந்த தளம் சென்று Get Basic என்ற இடத்தில் கிளிக் செய்து பின் எந்த அளவில் வேண்டும் என்பதில் Full என்பதைத் தேர்ந்தெடுத்தால் முழு புரோகிராமும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துவிடும். இதனை பாதுகாப்பான ஒரு டைரக்டரியில் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.


அங்கிருந்தவாறே இதற்கான செட் அப் பைலை இயக்கினால் விண் ஆம்ப் புரோகிராம் பதியப்படும். இன்ஸ்டால் செய்திடும்போதே எந்த வகை ஐகான் இருக்க வேண்டும், எந்த வகை பார்மட் பைல்களை இது இயக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்து இன்ஸ்டால் செய்திடலாம். உங்கள் இன்டர்நெட் கனெக்ஷன் எப்படிப்பட்டது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தர வேண்டும். பின்னர் விண் ஆம்ப் புரோகிராமின் தோற்றத்தை முடிவு செய்திடும் "ஸ்கின்' என்பதையும் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். இன்ஸ்டால் செய்துவிட்டால் புரோகிராம் இயங்குவதற்கு ரெடியாகிவிடும்.

உங்கள் டெஸ்க் டாப்பில் விண் ஆம்ப் ஷார்ட் கட் ஐகான் ஒன்று உருவாக்கப்பட்டு பதியப்பட்டிருக்கும். இதனைக் கிளிக் செய்தால் விண் ஆம்ப் இயங்கத் தயாராயிருக்கும். முதன் முதலில் விண் ஆம்ப் தயாராகும் போது யூசர் இன்பர்மேஷன் விண்டோவினைக் காணலாம். இதில் Do not ask me again until next install என்ற இடத்திலும் Later என்பதிலும் கிளிக் செய்திடவும். இப்போது Media to Library என்பதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் பாடல்கள் மற்றும் வீடியோ பைல்கள் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டலாம். இதன் மூலம் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மீடியா பைல்கள் அனைத்தையும் கொண்ட லைப்ரேரி ஒன்றை உருவாக்க இடம் அளிக்கிறோம். இது வேண்டாம் என்றால் Do not show me this again என்பதில் கிளிக் செய்து வெளியேறலாம். விண் ஆம்ப் புரோகிராமில் Playlist Editor, Media Library and Video என்ற பகுதிகளும் உள்ளன. இவற்றைத் தேவைப்படும்போது இயக்கி விரித்துப் பார்க்கலாம்.


விண் ஆம்ப் பல வகையான பார்மட்களில் உள்ள மீடியா பைல்களை இயக்கும் திறன் கொண்டதாக உள்ளது. எடுத்துக் காட்டாக ஆடியோ என எடுத்துக் கொண்டால் .wav .mp3 போன்ற பல வகை பைல்களை இயக்கும் திறன் கொண்டது. ஒரு பாடல் பைலை பாட வைக்க வேண்டும் என்றால் அதற்குப் பல வழிகள் உள்ளன. கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்களைத் தேர்ந்தெடுத்து போல்டர்களில் உள்ள பாடல் பைலைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது அந்த பைலின் மீது இரு முறை கிளிக் செய்தால் பாடல் வடிவத்தினை ஏற்கனவே இன்ஸ்டால் செய்திடும்போது அமைத்து விட்டதால் உடனே விண் ஆம்ப் திறக்கப்பட்டு பாடல் இயக்கப்படும்.

இன்னொரு வழியும் உண்டு. பிளே லிஸ்ட் எடிட்டர் என்பதில் கிளிக் செய்து ஒரு பட்டியலைத் தயார் செய்திட வேண்டும். இதில் கிளிக் செய்தால் புதிய லிஸ்ட்டுக்கான பெயர் கேட்கப்படும். இதில் யாருக்காக அல்லது எந்த வகை பாடல்கள் என எந்த பெயரை வேண்டு மென்றாலும் வைத்துக் கொள்ளலாம். இந்த லிஸ்ட்டின் பெயரில் கிளிக் செய்து அதன் பின் பாடல்கள் உள்ள டைரக்டரியிலிருந்து இதில் நீங்கள் விரும்பும் பாடல்களைக் கொண்டு வந்து அவை பாடப்பட வேண்டிய வரிசைப்படி அடுக்கலாம். அதன் பின் எப்போது வேண்டுமானாலும் இந்த பிளே லிஸ்ட்டை திறந்து பாடல்களைக் கேட்கலாம். இந்த லிஸ்ட் பிடிக்கவில்லை என்றால் பாடல் பைல்கள் உள்ள டைரக்டரியைத் திறந்து எந்த எந்த பாடல்கள் இசைக்கப்பட வேண்டுமோ அவற்றை கண்ட்ரோல் அழுத்தி முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். செலக்ட் ஆன பின்னர் அதன் மீது ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Add to play List என்று கிடைக்கும். இதனைத் தேர்ந் தெடுத்தால் அவை பிளே லிஸ்ட்டில் சேர்க்கப்படும் ; அல்லது இசைக்கப்படும்.


விண் ஆம்ப் .MPEG மற்றும் .AVI போன்ற வீடியோ பைல்களையும் இயக்கும். வீடியோ பைல்களையும் மேலே ஆடியோ பைல்களை இயக்க குறிப்பிட்ட வழிகளிலேயே இயக்கலாம். அல்லது பைலின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Play in Winamp என்பதில் கிளிக் செய்தால் பைல் விண் ஆம்ப் புரோகிராமில் இயங்கி ஆடல் பாடலைக் காட்டும்.

திறக்கப்படும் வீடியோ விண்டோவில் ரைட் கிளிக் செய்தால் விண்டோவின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அதன் மூலைகளில் கர்சரை வைத்து இழுத்து அமைப்பதன் மூலம் அமைக்கலாம். பிளே லிஸ்ட்டில் என்ன என்ன பாடல்களைத் தொகுத்து வைத்திருக்றீர்கள என அச்சிட்டு பார்க்க விரும்புகிறீர்களா? இதில் தெரியும் Misc என்ற பட்டனை அழுத்தவும். இதில் Generate HTML playlist என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது வெப் பிரவுசர் ஒன்றின் விண்டோ திறக்கப்பட்டு அதில் பிளே லிஸ்ட்டில் உள்ள பாடல் மற்றும் ஆடல் பைல்கள் காட்டப்படும். பின் வழக்கம்போல் File மெனுவினைத் திறந்து அதில் Print என்பதைத் தேர்ந்தெடுத்து பிரிண்ட் செய்திடலாம். விண் ஆம்ப் புரோகிராமை நீங்கள் மூடிப் பின் திறக்கும்போது இறுதியாக எந்த பிளே லிஸ்ட்டை இயக்கிக் கொண்டிருந்தீர்களோ அந்த பிளே லிஸ்ட் திறந்தபடி விண் ஆம்ப் திறக்கப்படும்.


விண் ஆம்ப் புரோகிராம் முதலில் நல்சாப்ட் (Nullsoft) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பின் அதனை ஏ.ஓ.எல்.நிறுவனம் வாங்கி யது. தற்போது மீண்டும் அது நல்சாப்ட் நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப் பட்டு அதன் வசமே இருக்கிறது. விண் ஆம்ப் புரோகிராம் 1997ல் ஜஸ்டின் பிராங்கெல் என்பவரால் ஷேர்வேர் புரோகிராமாக வெளியிடப் பட்டது. அதன்பின் இதில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப் பட்டன. தற்போது ஸ்ட்ரீமிங் வீடியோ இயக்கும் வகையில் உயர்ந்துள்ளது. நல்சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாதந்தோறும் 6.5 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகையில் உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் மீடியா பிளேயர்களில் மூன்றாவது இடத்தை விண் ஆம்ப் பெற்றுள்ளது.


சிறப்பு அம்சங்கள்


* மிகச் சிறிய அளவிலான பைலாக இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். Lite 1.2 MB, Full 5 MB மற்றும் Bundle 12 MB என மூன்று அளவுகளில் இது முதலில் தரப்பட்டது. இப்போது Full– 9.08 MB, Free+ Bonus MP3 12.2.MB என்ற அளவில் இலவசமாகக் கிடைக்கிறது. கட்டணம் செலுத்தி சில கூடுதல் வசதிகள் உள்ள புரோகிராமினையும் பெறலாம்.


* விண் ஆம்ப் புரோகிராமிற்காகத் தரப்படும் ஸ்கின்கள் அனைவரும் பேசப்படும் வகையில் மற்றவற்றிலிருந்து வேறுபடும்.

* ஆடியோவில் பல வகைப் பார்மட்டுகளைக் கையாள்கிறது. MP3, WMA, M4A/AAC, OGG, FLAC MIDI, MOD, MPEG1 என்ற பார்மட்டுகளைக் கையாள்வதுடன் இவற்றிடையே மாற்றிக் கொள்ளும் வசதியையும் அளிக்கிறது. வீடியோ பைல்களைப் பொறுத்த வரை AVI,ASF,MPEG,NSV ஆகிய பார்மட்டுகளைக் கையாள்கிறது. பலவகையான இன்டர்நெட் ரேடியோ ஸ்டேஷன்களைப் பெறலாம்.

* தற்போது விண் ஆம்ப் லேட்டஸ்ட் பதிப்பாகக் கிடைக்கிறது. இதனையும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். இதில் ஐபாட் சாதனத்துடன் டேட்டாவினை இணைக்கும் வழிகள் தரப்பட்டுள்ளன. புதிய ஐ –ட்யூன் லைப்ரேரியை இறக்கிப் பயன்படுத்தலாம். புதிய ஆன்லைன் சர்வீஸ் காலரி தரப்பட்டுள்ளது.


------------------- நன்றி -------------------

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வரவேற்கும் அபாயங்கள்

Posted: 28 Mar 2010 04:21 AM PDT

அபாயங்கள் நம்மை வரவேற்கின்றனவா? அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா! என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை இரண்டும் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நம் வாழ்வோடு இரண்டறக் கலந்த கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள் குறித்து, அறிந்து அதற்கான தற்காப்பு வழிகளை நாம் மேற்கொண்டிருந்தாலும், சில அபாயங்களை நாம் அறியாமலேயே நாம் வரவேற்று மாட்டிக் கொள்கிறோம். கிராமப் புறங்களில் வேலியில் போகும் ஓணான் என்று ஒரு பழமொழி தொடங்கும். அந்த வகையில் தான் நாம் நம்மை அறியாமலேயே கம்ப்யூட்டரில் பல அபாயங்களை வரவழைத்துக் கொள்கிறோம். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

1. அடோப் பலவீனங்கள்: மைக்ரோசாப்ட் புரோகிராம்களுக்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அடோப் நிறுவன அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது உறுதி. பிளாஷ் (Flash) அக்ரோபட் ரீடர் (Acrobat Reader) அல்லது ஷாக்வேவ் (Shock Wave) என ஏதாவது ஒன்றினை நாம் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கிறோம். கம்ப்யூட்டரைக் கெடுக்கும் மால்வேர் தொகுப்புகளால் இவை எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் பழைய பதிப்புகளை நீங்கள் பயன்படுத்திவந்தால், அவற்றில் உள்ள பலவீனமான இடங்களைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம்கள் நுழைவது எளிது என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அப்டேட் செய்யப்பட்ட பதிப்புகளில் தான் இந்த பலவீனமான இடங்கள் சரி செய்யப்பட்டு இருக்கும். பழைய பதிப்புகள் எனில் அவை மால்வேர் புரோகிராம்கள் எளிதாக நுழைய இடம் தருவதாக அமையும். இதில் இன்னொரு வகை பிரச்னை என்னவென்றால், இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், உங்கள் அடோப் பிளாஷ் பிளேயர் பழையதாக உள்ளது. அப்டேட் செய்திட இங்கே கிளிக் செய்திடுங்கள் என்று ஒரு செய்தி வரும். கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் முடங்கிப் போய்விடும். (என் சொந்த அனுபவம் இது). அல்லது பிரச்னை இருப்பதாகவும், அது குறித்த விளக்கத்தினையும், தீர்வையும் இந்த பைலில் பார்க்கலாம் என்று ஒரு பி.டி.எப். பைலுக்கான லிங்க் தரப்படும். கிளிக் செய்தால் அவ்வளவுதான். மீண்டும் ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்திடும் அளவிற்குக் கொண்டு செல்லும்.
இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? அடோப் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டு கிடைப்பதாக இருந்தால், அடோப் நிறுவனத்தின் தளம் சென்று அந்த முயற்சியில் ஈடுபடுங்கள். வேறு தளங்கள் தரும், குறிப்பாக பாப் அப் விண்டோக்கள் தரும் லிங்க் மூலம் செல்ல வேண்டாம். அடோப் தளத்தைப் பார்த்து அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.

2. பயர்பாக்ஸ் ஆட் ஆன்: பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்பு புரோகிராம்கள் அபாயத்திற்கான அழகான திறவுகோல்களாகும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஆக்டிவ் எக்ஸ் ப்ளக் இன் போல மோசமானது இல்லை என்றாலும், ஆபத்தை விளைவிப்பதில் இவையும் சளைத்தவை இல்லை. பல மால்வேர் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் பிரவுசரின் முதன்மை செயல்பாட்டில் சென்று வழி தேடாமல், ஆட் ஆன் தொகுப்புகளைத்தான் பார்த்து நுழைகின்றன.

பிளாஷ் பிளேயர், ஆன்லைன் மியூசிக் பிளேயர் என ஏதாவது ஒன்றுக்கான ஆட் ஆன் என்ற செய்தியுடன் இவை உங்களது கவனத்தை ஈர்க்கும். சரி எனக் கிளிக் செய்தால் மாட்டிக் கொள்வோம்.

இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்புவது சிரமம் தான். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை தரும் வசதிகளும் பிரமாதமாய் இருக்கின்றன. முதலில் பயன்படுத்துகையில் இவை எந்த தீங்கும் விளைவிக்காமல் தான் இருக்கின்றன. பின் இவற்றைக் கண்காணித்து மால்வேர் புரோகிராம்கள், இவற்றைப் பயன்படுத்தி நுழைகின்றன.
இவற்றிலிருந்து தப்பிக்க பயர்பாக்ஸ் பிரவுசரை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல், ஏதேனும் பிளாஷ் டிரைவ் மூலம் போர்ட்டபிள் பிரவுசரைப் பயன்படுத்தலாம்.

3. மேக் சிஸ்டம்: பலர் இது போன்ற வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகள் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழையாது என்று எண்ணுகின்றனர். இது ஒரு காலத்தில் உண்மையாக இருந்தது. ஏனென்றால் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், வைரஸ்களைப் பரப்புபவர்கள் மேக் பக்கம் கவனத்தைச் செலுத்தவில்லை. இப்போது நிலை மாறிவிட்டது. மேக் சிஸ்டம் வழியாகவும் மால்வேர்கள் பரவத் தொடங்கிவிட்டன. இந்த சிஸ்டத்திலும், பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை அவ்வப்போது அப்டேட் செய்திட்டால், மால்வேர்கள் நுழைவது தடுக்கப்படலாம்.

4. ஆப்பிள் சாதனங்கள்: விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் நாம் ஆப்பிள் நிறுவன சாதனங்களைப் (சாப்ட்வேர்கள்) பயன்படுத்தி வருகிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். இவற்றையும் மற்ற அப்ளிகேஷன்கள் போலவே நாம் கண்காணிக்க வேண்டும். பல கம்ப்யூட்டர்களில் குயிக் டைம் மற்றும் ஐ ட்யூன்ஸ் ஆகிய ஆப்பிள் நிறுவன சாப்ட்வேர்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் குயிக் டைம் சாப்ட்வேர் தொகுப்பைப் பயன்படுத்தி பல வைரஸ்கள் பரவியது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இது அதிகம் இருந்தது. இதனை உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது இதற்கான தடுப்பு அப்டேட் பைல்களைத் தானாகவே அனுப்பி சரி செய்தது.எனவே அப்டேட் செய்வதுதான் இங்கும் பாதுகாப்பு வழியாகும்.

5. குழப்பும் யு.ஆர்.எல்.கள்: மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்க்குகள் வழியாக மால்வேர்கள் நுழைவது தற்சமயம் அதிகரித்து வருகிறது. சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://longurl.org/ இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக் கூடியதா என அறிந்து கொள்ளலாம்.

6. டி.என்.எஸ். ஹைஜாக்: எண்களில் அமைந்துள்ள முகவரிகளை, நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களில் அமைக்கும் பணியினை டி.என்.எஸ். சர்வர்கள் மேற்கொள்கின்றன. இந்த மாற்றத்தில் ஈடுபடுகையில் ஏதேனும் ஒரு மால்வேர் புரோகிராம், டி.என்.எஸ். சர்வர் தர இருப்பதனை ஹைஜாக் செய்து, தன்னுடைய மோசமான லிங்க்கைத் தரும் வேலை தற்போது நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்ப நாம் எந்த முயற்சியும் எடுக்க முடியாது. டி.என்.எஸ். சர்வர்களை இயக்குபவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.

மேலே சொன்னவை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டிய கம்ப்யூட்டர் சாதனங்கள் தரும் தீய விளைவுகளாகும். இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. எனவே கூடுதல் கண்காணிப்பும், மேலே பரிந்துரைக்கும் வழிகளுமே பாதுகாக்கும் கவசங்களாக இருக்கும்.



------------------- நன்றி -------------------

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நியூசிலாந்தில் இந்திய டாக்சி டிரைவர் குத்திக் கொலை


நியூசிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தப் போவதாக நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கூறியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஹிரென் மோகின் (39), 6 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ஆக்லாந்து பகுதியில் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

டாக்சி டிரைவராக வேலை செய்துவந்த இவர், மவுன்ட் ஈடன் பகுதியில் நேற்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டார். கட்டணம் தொடர்பாக பயணியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கழுத்து மற்றும் உடலின் பல பகுதிகளில் கத்தியால் குத்திய மர்ம நபர், ஹிரெனின் காரை அருகில் உள்ள மரத்தில் மோதவிட்டு விபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்.

பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே இச்சம்பவத்துக்கு நியூசிலாந்தின் டாக்சி உரிமையாளர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டாக்சி டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், டாக்சிகளில் பாதுகாப்பு கெமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து பிரதமர் ஜான் கீ கூறுகையில்,

"கடந்த 14 மாதங்களில் டாக்சி டிரைவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் 2 முறை நடந்துவிட்டன. அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிடாது. டாக்சிகளுக்கான கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு நிச்சயம் பரிசீலிக்கும்' எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நியூசிலாந்திலும் இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தல் வெற்றியை அடுத்து இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் பிரிகேடியர் ஒருவர் பொலிஸ் காவலில் ; மேலும் பலர் கைதாகலாம்


செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இட மாற்றத்திற்குள்ளான இராணுவ அதிகாரிகளில் பலர் யுத்தத்தில் வெற்றி கண்ட இராணுவத் தளபதியும் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர்களாவர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு, தமக்கு விசுவாசமான பல சிரேஷ்ட அதிகாரிகள் சேவையிலிருந்து விலக்கப்பட அல்லது இடை நிறுத்தி வைக்கப்பட இருக்கிறார்கள் என்று தாம் கேள்விப்படுவதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்திருந்த வேளையில் இந்த திடீர் இட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அம்பாறை இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கமாண்டர் பிரிகேடியர் துமிந்த கெபெற்றிவலான வெள்ளிக்கிழமை புலன் விசாரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெனரல் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரிகேடியர் கெபெற்றிவலான இராணுவ உதவியாளராக சேவையாற்றி வந்தார். மேலும் இளைப்பாறிய 20 அதிகாரிகளும், சிப்பாய்களும் ஏற்கனவே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள்.

தற்போதைய மாற்றங்களில் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் பாதுகாப்பு அமைச்சில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தார்.

ஏற்கனவே பாதுகாப்புப் படையினரின் பிரதானியாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டு கூட்டுத் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தொண்டர் படைப் பிரிவின் கமாண்டர் ஆக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே பாதுகாப்புப் படையினரின் பிரதம அதிகாரியின் அலுவலகத்தில் பொது அதிகாரிகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இராணுவ நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அருணா ஜயதிலக தற்போது தொண்டர் படை கமாண்டர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய மாற்றங்களில் பிரிகேடியர் ஏ. ரி. டீ. சற் அபேசேகர நிர்வாக பிரிவுக்கான புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தலைமையகக் காரியாலயத்தில் பொது பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்ஷ பாதுகாப்பு படையினரின் பிரதம அதிகாரி அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாஸ்டர் ஜெனரல் ஓர்டினன்ஸாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அதுல ஜயவர்த்தன முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகள் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முந்திய பதவிக்கு மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்போத நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் கிழக்கு பிராந்திய பாதுகாப்பு படைகள் கமாண்டராக பணியாற்றி வந்தார். இந்தப் பதவிக்கு தற்போது பிரிகேடியர் சுசில் உடுமல்கல நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் எல். ஏ. டி. அமரதுங்க 59 ஆவது படைப் பிரிவின் கட்டளையிடும் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த காலாட்படை தளபதி பதவிக்கு இதுவரை யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைகள் கமாண்டராக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் எல். பி. ஆர். மார்க்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காலாட் படை தளபதியாக தற்போது மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க வகித்து வந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைகள் கமாண்டர் பதவிக்கு பிரிகேடியர் சந்தன ராஜகுரு நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பாதுகாப்பு படைகள் கமாண்டர் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா இராணுவத்தின் 11 ஆவது பிரிவு ஜெனரல் ஒபீஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் 65 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜனக வல்கம பாதுகாப்பு அமைச்சில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் பதவிக்கு பிரிகேடியர் குமார் ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

53 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் மேஜர் சாகி கலகே இராணுவ தலைமைக் காரியாலயத்தில பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ராஜித சில்வா பாதுகாப்புப் படைகள் பிரதம அதிகாரி அலுவலகத்திலிருந்து விலக்கப்பட்டு 58 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

செய்தியறிக்கை

செய்தியறிக்கை
ஐ.நா தலைமை செயலர் பான் கீ மூன்
ஐ.நா தலைமை செயலர் பான் கீ மூன்

போரில் பாலியல் பலாத்காரம் குறித்து ஐ.நா தலைமை செயலர் கவலை

போரில் பாலியல் பலாத்காரமும் ஒர் ஆயுதமாக பயன்படுத்துவதை கண்டு தான் கடும் கோபமுற்றுள்ளதாக ஐ.நா தலைமை செயலர் பான் கீ மூன் ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் இடையே தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவில் ஆப்ரிக்க ஒன்றிய கூட்டத்தில் உரையாற்றிய அவர், மோதல் இடம்பெறும் இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக விசேட தூதர் ஒருவரை தான் நியமிக்கவுள்ளதாகவும் பான் கீ மூன் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய கமிஷனின் முன்னாள் துணை தலைவர் மார்காட் வால்ஸ்ட்ராம் இந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஆப்ரிக்க அரசுகளை ஜனநாயக மரபுபடி அல்லாமல் மாற்றும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது குறித்து தனக்கு கவலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவராக கடாஃபி நீடிக்கப் போவதில்லை

கடாஃபி
கடாஃபி

ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவராக தொடர்ந்து நீடிப்பதற்கு லிபிய தலைவர் முவாமர் கடாஃபி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஆப்ரிக்க ஒன்றியத்தின் புதிய தலைவராக மலாவியின் பிங்கு வா முதரிகா ஆப்ரிக்க ஒன்றிய நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆப்ரிக்க ஒன்றிய தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு கர்னல் கடாஃபி மிகவும் தயங்கியதாகவும், இதனால் மற்ற ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் இடையே கோபம் ஏற்பட்டதாகவும் கூட்டம் நடைபெறும் அடிஸ் அபபாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.


யெமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் மோதல்

யெமன் வரைப்படம்
யெமன் வரைப்படம்

யெமனின் வடக்கில் இருக்கும் இரு பிராந்தியத்தில் நடைபெற்ற மோதலில் இருபது ஷியா கிளர்ச்சியாளர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக யெமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யெமன் இராணுவம் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டால், தாங்கள் அரசாங்கத்தின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்த ஒரு சில மணிநேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆனால், கிளர்ச்சியாளர்களின் நிபந்தனைகளை தாங்கள் ஏற்பதில்லை என கூறி, கிளர்ச்சியாளர்களின் கூற்றை அரசாங்கம் நிராகரித்தது.

ஹவுதீஸ் என்று அழைக்கப்படும் இந்த கிளர்ச்சியாளர்கள் தங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் எவ்விதமான உபயோகமான அரசியல் தீர்வையும் பெற முடியாது என்று கூறியிருக்கின்றனர்.


ஹெய்ட்டியில் குழந்தைகளை எடுத்து செல்ல முயன்ற அமெரிக்கர்கள் தடுத்து வைப்பு

ஹெய்ட்டி குழந்தைகள்
ஹெய்ட்டி குழந்தைகள்

ஹெய்ட்டியில் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் முப்பது இளம் சிறார்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல முயன்ற அமெரிக்கர்கள் குழு ஒன்றை ஹெய்ட்டி அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர்.

இந்த சிறார்கள் நிலநடுக்கத்தால் அனாதையானர்கள் என்பதற்கானா ஆதாரமோ அல்லது வெளிநாட்டு கொண்டு செல்வதற்கான அனுமதியோ இந்த பத்து அமெரிக்கர்களிடம் இல்லை என ஹெய்ட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் அமெரிக்காவில் உள்ள தேவாலயம் ஒன்றை சேர்ந்தவர்கள் என்று கூறும் இந்த குழுவினர், அண்டைய நாடான டோமினிகன் குடியரசில் தாங்கள் அனாதை ஆசிரமம் ஒன்றை நிறுவ திட்டமிடுவதாக தெரிவித்துள்ளனர்.

தத்து எடுப்பது தொடர்பில் ஹெய்ட்டி புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பெற்றோர் இல்லாத குழந்தைகளை கடத்தி அவர்களை தத்தெடுப்பவர்களுக்கு விற்பது, வீட்டு வேலை செய்ய விற்பது அல்லது பாலியல் அடிமைகளாக விற்பது போன்றவை இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்த பின்னர் இந்த கட்டுப்பாடுகள் வந்துள்ளது.

செய்தியரங்கம்
இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

காலக்கெடு முடிவடைந்தும் முகாம்களில் மக்கள்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்த காலத்தில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசின் இடைத்தங்கல் முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படி தங்கியவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இந்தக் காலக்கெடு ஞாயிற்றுகிழமையுடன் முடிவடைந்துள்ள நிலையில் இன்னமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பல முகாம்களில் தங்கியுள்ளனர். தாங்கள் உடனடியாக தங்களது இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மக்கள் முன்னர் தங்கியிருந்த பகுதிகளில் இன்னமும் மிதிவெடிகளை முழுமையாக அகற்றும் பணி முடிவடையாததே அவர்களை மீள்குடியேற்ற முடியாததற்கு காரணம் என்று இலங்கை அரசின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.

தாங்கள் எதிர்பார்த்ததை விட மிதிவெடி அகற்றும் பணி மெதுவாகவே நடைபெற்று வருகிறது என்றும், மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்றும் அவர் கூறுகின்றார்.

உயர் பாதுகாப்பு வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவம் அமைச்சர் தெரிவிக்கிறார்.


யாழ்குடாவில் அழுத்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் வரைப்படம்
யாழ்ப்பாணம் வரைப்படம்

இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் தங்களது எதிர்காலத்தையும் வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு சமூக ஆர்வலர்களால் அழுத்தக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் தலைமகள் மற்றும் போராளிக் குழுக்களின் தீர்மானங்களே தம் மீது திணிக்கப்பட்டதாகவும் அப்படியான செயற்பாடுகள்தான் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்று இந்த அழுத்தக் குழுவினர் கூறுகிறார்கள்.

இந்தக் குழுவில் எதிர்வரும் காலத்தில் முஸ்லிம் மக்களையும் இனைத்துக் கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு பகுதியில் சிறுபான்மையினர் தொடர்பான அரசியல் மற்றும் அபிவிருத்தி பணிகளில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது சமூக மட்டக் குழுக்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோருகிறார்கள்.

இந்த அழுத்தக் குழுவில் பல்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளார்கள். வடபகுதியில் இருக்கும் அனைத்து மாவாட்டங்களில் இருந்தும் பலர் இந்த அழுத்தக் குழுவில் இணைந்துள்ளனர்.

யாழ்மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் தவரட்ணம் அவர்களின் தலைமையில் இந்த அழுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


தேர்தல் முடிந்தும் தொடரும் அச்சுறுத்தல்கள் - த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை
டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடை பெற்று முடிந்துள்ள போதிலும் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் தமது கூட்டமைப்பைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை கூறுகின்றார்.

இதன் காரணமாக தேர்தல் காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய இரண்டு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உட்பட 4 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்திற்கு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியுள்ள இவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் இது வரை எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை

தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் இதனை தாம் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமது மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவொன்றினாலே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.


தமிழக முதல்வருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்

இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர் மேனன் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது போன்ற விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பான மரண சான்றிதழ் இந்தியாவுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை என இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates