டாக்டர் கொடுத்த மருந்தே ஜாக்சன் சாவுக்கு காரணம்: கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
உலகப்புகழ்

இதையடுத்து டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மைக்கேல் ஜாக்சன் தூங்க செல்வதற்கு முன்பு மயக்கம் தரக்கூடிய அதிசக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது வழக்கம் என்பது குறித்த ஆவணங்கள் அங்கு கைப்பற்றப்பட்டன.
மைக்கேல் ஜாக்சனின் உடலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தலைமை பிரேத பரிசோதகர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.
அவர், ஜாக்சன் உட்கொண்டிருந்த மருந்து மாத்திரைகளில் உள்ள விஷத்தன்மை குறித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த அறிக்கையும், டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும்ஹூஸ்டனில் உள்ள மாவட்ட கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
அதில், டாக்டர் முர்ரே கொடுத்த மருந்துதான் மைக்கேல் ஜாக்சனின் சாவுக்கு காரணமாக அமைந்தது என்று கூறப்பட்டுள்ளது
0 Response to "டாக்டர் கொடுத்த மருந்தே ஜாக்சன் சாவுக்கு காரணம்: கோர்ட்டில் அறிக்கை தாக்கல்"
แสดงความคิดเห็น