வடமாகாண சாரணர் சங்கத்தின் 29வது வருடாந்த சாரணர் பாசறை விழா இன்று இடம்பெற்றது
வடமாகாண சாரணர் சங்கம் காங்கேசன்துறைப் பிரதேச கிளைச் சாரணர் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 29வது வருடாந்த சாரணர் பாசறை விழாவும் குருளைச் சாரணர் வெளிக்கள நாளும் விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சிகள் யாழ்.இராமநாதன் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றன.
மாகாணச் சாரணர் ஆணையாளரும் செயற்குழுத் தலைவருமான த.நா.மோகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது தாம் பாடசாலையில் கல்வி கற்ற போது சாரணர் இயக்கத்தில் இருந்ததாகவும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்த வாழ்க்கை ஒன்றுக்குச் சாரணர் இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெறுவது மிகவும் அவசியம் எனத் தெரிவித்ததுடன் சாரணர்களின் எதிர்கால வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக் கொள்வதற்கு சாரணர் பயிற்சி மிகவும் உதவியாக அமையும் என்றும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வடமாகாணத்திற்கான சாரணர் இயக்கம் திறம்படச் செயலாற்றுவதற்குத் தன்னாலான உதவிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த நிகழ்வைத் திறம்பட ஏற்பாடு செய்திருந்த சாரணர்கள் குருளைச் சாரணர்கள் சாரணத் தலைவர்கள் மற்றும் கிளைச் சங்க உறுப்பினர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நேற்று முதல் ஆரம்பமாகி மூன்று தினங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சாரணர் நிகழ்வுகளுக்குக் கொழும்பிலிருந்து பிரதம சாரண ஆணையாளர் ச.பட்டுவாங்கல்ல தேசிய பயிற்சி ஆணையாளர் எம்.இ.எஸ்.ஜெயசிங்க முன்னாள் தேசியப் பயிற்சி ஆணையாளர் எம்.ஜரால்ட் குரே மற்றும் சர்வதேச தொடர்புகளுக்கான உதவிப் பிரதம சாரணர் ஆணையாளர் எம்.கிராஸ்சாரி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

0 Response to "வடமாகாண சாரணர் சங்கத்தின் 29வது வருடாந்த சாரணர் பாசறை விழா இன்று இடம்பெற்றது"
แสดงความคิดเห็น