ராமனாக இருந்தாலும் இலங்கை வரை சென்று.....:விஜயகாந்த்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
’’அநியாயத்தை எதிர்த்து, போரிட்டு வெற்றி பெற்றால்தான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும். ராமனாக இருந்தாலும், இலங்கை வரை சென்று ராவணனை போரிட்டுதான் சீதையை மீட்க முடிந்தது. அதைப்போல தீய சக்திகளை ஒழிக்க நல்லவர்கள் ஒன்று சேர்ந்து போரிட வேண்டும். இருளை அகற்ற தீபத்தை ஏற்ற வேண்டும். அதுவே தீபாவளி நமக்கு தரும் பாடமாகும்.
எல்லோரும் இன்ப வாழ்வு பெற்றிட நல்ல காலம் பிறக்கட்டும் இந்த நன்னாளில் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
0 Response to "ராமனாக இருந்தாலும் இலங்கை வரை சென்று.....:விஜயகாந்த்"
แสดงความคิดเห็น