எதிர்வரும் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல்

பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு முன்னர் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அவர் பணித்துள்ளார்.எனினும் தேர்தல் நடைபெறும் தினம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.
இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.டபிள்யூ. எம் தேஷபிரிய எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
0 Response to "எதிர்வரும் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல்"
แสดงความคิดเห็น