jkr

கொலைகாரனின் தலை சவூதியில் வெட்டப்பட்டு சிலுவையிலிடப்பட்டது.


சவூதி அரேபியாவில் ஐந்து குழந்தைகளை கடத்தி அவர்களை பாலியல் வல்லுறவுக் குட்ப்படுத்தி அதில் ஒருவரை பாலைவனத்தில் பதை பதைக்க இறக்க விட்ட முகம்மட் பஸீர் அல்-ரம்லி என்ற சவூதியைச் சேர்ந்த இருபத்திரெண்டு வயதையுடைய இளைஞர் ஒருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு அவரது தலை வாளினால் வெட்டப்பட்டு உடல் சிலுவையில் அறையப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு நேற்று பகல் வைக்கப்பட்டது.

ரம்லிக்கு மரணதண்டனை ஐந்து பள்ளி மாணவர்களை தனது காரில் கடத்தி அவர்களை ஒரு இரகசிய இடத்திற்கு எடுத்துச்சென்று அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அதில் ஒருவரை பாலைவனத்தில் விட்டு இறக்கச் செய்ததற்காக பெப்ரவரி மாதம் ஹய்ல் உயர் நீதி மன்றம் மரணதண்டனை வழங்கியது.

பொலிஸார் இவரின் ரகசிய இடத்தை கண்டு பிடிப்பதற்கும் அவரையும் கைதுசெய்வதற்கும் எஏவயதையுடைய ஒரு யமனைச் சேர்ந்த பையனைப் பயன்படுத்தியதாக அந்நாட்டு பத்திரிகைகளை தெரிவிக்கின்றன. இவர் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக றியாத்திலுள்ள மீயூயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தபோது அந்நீதிமன்றம் இவருக்கு உடனடியான மரணதண்டனை வழங்கப்பட்டு அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.

சவூதி அரேபியாவில் 102 பேருக்கு கடந்த வருடம் தலைகள் வெட்டப்பட்டுள்ளன. அமெஸ்டி இன்டர்நெஷனலின் தகவலின் படி அடுத்து 138 பேர் இத் தண்டனைக்காக காத்திருக்கின்றனர். இறுதியாக கடந்த மே மாதம் இதே குற்றத்தின் பெயரில் தண்டனை வழங்கப்பட்ட ஆறுபேருக்கு தலைகள் துண்டிக்கப்பட்டு தலைநகரில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேருக்கு நேற்று மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது இவர்கள் கொள்ளையடித்தல் மற்றும் கொலைகள் புரிந்ததற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

சவூதியில் மரணதண்டனைக்கு உள்ளாகும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் புரிந்த கொலைக்காக வழங்கப்படும் இரத்தத்தை ஓட்டியதற்கான பணம் நஸ்ட ஈடாக கொடுக்க முடியாமையால் வழங்கப்படுகின்றது என்பது திண்ணம்.

இலங்கையைச் சேர்ந்த அப்பாவி ஏழைகள் பலர் தாங்கள் தற்செயலாக புரிந்த கொலைகளுக்காக அல்லது அவர்கள் மாட்டிவிடப்பட்ட கொலைகளுக்கா இவ்வாறான தண்டனைகளுக்கு உள்ளாகுகின்றனர். இவர்களில் அதிகமானோர் வட கிழக்கைச் சேர்ந்த ஏழைகளின் பிள்ளைகள் இவர்களுக்கு சட்ட உதவிகள் சவூதி அரேபியாவில் வழங்கி அவர்களுக்காக நஸ்ட ஈட்டைச் செலுத்தி அவர்களை காப்பாற்ற எந்த அமைப்பும் நம் மத்தியில் இல்லை என்பது கவலைதரும் விடயமாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

1 Response to "கொலைகாரனின் தலை சவூதியில் வெட்டப்பட்டு சிலுவையிலிடப்பட்டது."

  1. Olive Tree Guitar Ensemble says:
    6 พฤศจิกายน 2552 เวลา 08:12

    Hi, it's a great blog.
    I could tell how much efforts you've taken on it.
    Keep doing!

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates