jkr

வலது குறைந்தோருக்கான சர்வதேச தினம் அலரிமாளிகையில் அனுஷ்டிக்கப்பட்டது.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு ஏற்பாடு செய்த வலது குறைந்தோருக்கான சர்வதேச தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அலரிமாளிகையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கையில் வலது குறைந்தோருக்கான சர்வதேச தின வைபவமொன்றில் ஜனாதிபதி ஒருவர் கலந்து கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் வலதுகுறைந்தவர்களுக்கு உதவுமுகமாக ஒருதொகை நிதி உதவுதொகையும் வழங்கப்பட்டது. இவ்வைபவத்தில் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமாவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வலது குறைந்தோருக்கான சர்வதேச தினம் அலரிமாளிகையில் அனுஷ்டிக்கப்பட்டது."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates